Friday, August 08, 2008

ஒலிம்பிக் போட்டி: ஓர் உலகம், ஒரு கனவோடு

1896-ஆம் ஆண்டு கிரேக்க தலைநகர் எத்தென்சில் முதல் முறையாக தொடங்கப்பட்டது தான் உலக நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்று தங்களின் திறனை வெளிபடுத்தி பதக்கங்களை குவிக்கும் ஒலிம்பிக் போட்டி.
இன்று 08.08.08 தேதி இரவு 08.08 மணிக்கு உலகமே அதிர்ந்து கவரும் வண்ணம் தொடங்க உள்ளது 29-ஆவது ஒலிம்பிக் போட்டி.

ஓர் உலகம், ஓர் கனவு எனும் சுலோகத்துடன் இவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. உலக நாடுகளில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட சுலோகங்களில் இருந்து மிக சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. முன்பு ஒலிம்பிக் போட்டிகளுக்கும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. 1916, 1940, மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளில் உலகப் போர் காரணமாக இப்போட்டி நிறுத்தப்பட்டது.

இருப்பினும் இப்போட்டி கைவிடப்படாமல் தொடர்ந்து நடத்தப்பட்டது. தெர்ந்தெடுக்கப்படும் உலகின் சிறந்த நாடு இப்போட்டியை நடத்தும்.
1896-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஒலிம்பிக் போட்டி தற்போது 29-வது தவனையை எட்டியுள்ளது. இம்முறை போட்டியை சீனா ஏற்று நடத்துகிறது.

இவ்வாண்டின் போட்டியை ஏற்று நடத்துவதற்கான தேர்தலில் தேர்வு பெற்ற பெய்ஜிங்கிற்கு பாரிஸ், ஒஸாகா, இஸ்தான்புல், டொரெண்டோ ஆகிய நகரங்கள் பெரும் போட்டியை கொடுத்தன. இருப்பினும் இருதியில் சீனாவின் பெய்ஜிங் நகரம் இத்தேர்தலில் வெற்றி பெற்றது.
ஒலிம்பிக் சுடர் ஓட்டம்:

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு உலகம் முழுவதும் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடத்தப்படும். உலக நாடுகளை வலம்வந்தப்பின் இச்சுடர் இறுதியில் போட்டி தொடங்கும் நாளில் உபசரனை நாட்டின் அரங்கில் ஏற்றப்படும்.
‘ஒருங்கிசையின் பயணம்’ என்ற கருப்பொருளில் உலகம் முழுவதும் வலம் வந்து. கிட்டதட்ட 130 நாட்களுக்கு நடைபெற்ற ஒலிம்பிக் சுடர் ஓட்டம் மொத்தம் 137,000 கிலோ மீட்டர் தூரமாகும். உலக நாடுகளை சுற்றி வந்த ஒலிம்பிக் சுடர் நாளை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ஏற்றப்படும்.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டதிற்கான அறிகுறியாக இந்தச் சுடர் விளங்கும் என்பது குறிப்பிடதக்கது.
போட்டியின் தொடக்கம்:

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 28 போட்டிகள். 302 பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. கடந்த 2004-ஆம் ஆண்டின் கிறீஸ் போட்டியை காட்டினும் ஒரு போட்டி எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரித்துள்ளது.

உலக நாடுகளிலிருந்து 10000 மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று பதக்கத்திற்காக போராட உள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து 400 கோடி ரசிகர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை கண்டு ரசிக்க போகிறார்கள்.

பறவைகள் கூண்டு அரங்கங்கள்:

இவ்வருட ஒலிம்பிக் போட்டியை சிறப்பான முறையில் நடத்துவதற்கு பிரதான தேசிய அரங்கமான ‘பெர்ட் நெஸ்ட்’ எனப்படும் பறவைகள் கூண்டு பிரமாண்டமான விளையாட்டு அரங்கம் பெய்ஜிங்கில் கட்டப்பட்டுள்ளது.

175கோடி செலவில் கட்டப்பட்ட இந்தப் பறவைகள் கூண்டு அரங்கின் வேலைகள் கிட்டதட்ட ஆறு ஆண்டுகள் நடந்தன. இதுவரையில் ஒலிம்பிக் போட்டி கண்டிராத அரங்கமாக இது விளங்குகிறது.

258,000 சதுரமீட்டர் பரப்பலவை கொண்ட இந்தப் பறவை கூண்டு அரங்கத்தில் சுமார் 80 ஆயிரம் ரசிகட்கள் அமர்ந்து போட்டியை கண்டு களிக்க முடியும்.

இந்த அரங்கத்தை தவிர்த்து போட்டிகள் நடை பெருவதற்காக மற்றும் பல அரங்குகளை சீன அரசாங்கம் கட்டியுள்ளது. போட்டிகளுக்காக வீரர்கள் தங்களை தயார் செய்து கொள்வதற்காக மொத்தம் 59 பயிற்சி மையங்கள் உலகத் தரத்துடன் கூடிய நவீன கருவிகள் மற்றும் களங்களோடு உருவாக்கப்பட்டுள்ளன.
அமேரிக்கா நடப்பு சாம்பியன்:
எதென்சில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமேரிக்க குழிவினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். இக்குழுவினர் 36 தங்கம், 39 வெள்ளி 27 வெங்கலம் என மொத்தம் 102 பதக்கங்களை வென்று சாதனைபடைத்தனர்.


இரண்டாவது இடத்தை சீனா, மூன்றாவது இடத்தை ரஷ்யா, நான்காவது இடத்தை அஸ்திரேலியா, ஐந்தாவது இடத்தை ஜப்பான் ஆகிய நாடுகள் கைபற்றின.

இவ்வாண்டு போட்டியின் உபசரனை நாடாக விளங்கும் சீனா குழுவினர் இவ்வாண்டு போட்டியில் அதிக பதக்கங்களை வென்று பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சீனாவிற்கு அமேரிக்க குழுவினர் பெரும் சவாலாக இருப்பார்கள் என கருதப்படுகிறது.
அதிர்ச்சி:
ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது எனும் மகிழ்ச்சியில் உலகலாவிய மக்கலும் , சீன நாட்டினரும் மூழ்கி இருந்தாலும் மறுபக்கம் அதிர்ச்சியும் கவலையும் இருந்துதான் வருகிறது.

இதில் முதன்மையாக தீபத் தனிநாடாக பிரகடனம் செய்யக் கோரி அங்குள்ள புத்த மதத்துறவியர்கள் தீபத் தலைநகரில் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இது சீனாவிற்கு முதல் அடியாக இருந்தது.

கடந்த மே மாதம் 12-ஆம் தேதி சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த பூகம்பத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணம் அடைந்தது சீனாவை தவிர்த்து உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நேற்று முந்தினம் மீண்டும் சிசுவானில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதில் யாரும் மரணமடையவில்லை என்றாலும் காயமடைந்து இருக்கிறார்கள்.

இது போன்ற பல பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் தொடர்ந்து வெற்றிகரமாக போட்டியை நடத்தவுள்ளனர் சீன நாட்டினர். சிறப்பான முறையில் பாதுகாப்பு அளிப்பதற்கு சீன போலிஸ் படையினருக்கு கடந்த காலங்கள் தொடங்கி பிரத்தியோக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் சுடர் தொடங்கியது முதல் அவ்வோட்டங்களுக்கு எந்த நாடும் ஆதரவு தரக்கூடாது என்று தீபத் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இருப்பினும் அந்த ஓட்டம் வெற்றிகரமாக் முடிவடைந்து இன்று பெய்ஜிங்கிற்கு வந்தடைந்துள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் வெற்றிகரமாக தொடங்கட்டும்.



பி.கு: பதிவில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. தமிழ்மண கருவிபட்டை மாயமாய் மறைந்துவிட்டது. அதானல் மீள் பதிவு செய்திருக்கிறேன். நண்பர்கள் மன்னிக்கவும்

Tuesday, August 05, 2008

பெர்மூடா முக்கோணமும் புரியாத புதிர்களும்

1492ஆம் ஆண்டு அமேரிக்க கண்டத்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் கிருஸ்டப்பர் கொலம்பசும் அவர் மாழுமிகளும் மூழ்கிக் கிடந்தார்கள். அந்த மகிழ்ச்சியானது சூரியனைக் கண்ட பனி போல அதிக நாள் நீடிக்காமல்போனது அவர்களின் துர்ரதிஷ்டம் தான்.

நடு சமுத்திரத்தில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த சமயம் கொலம்பசின் திசை காட்டும் கருவி நிலை இல்லாமல் சுழன்றது. கொலம்பஸ் கப்பலின் வெளியே வந்து பார்த்தார். வான்நிலை மிக சீராக இருந்த்து. இந்நிகழ்வு கொலம்பஸுக்கு குழப்பத்தைக் கொடுத்த்து. எதனால் திசை காட்டும் கருவி அப்படிச் சுழல்கிறது எனும் கேள்வி அவரை துளைத்தது.

சில நாட்களுக்கு பின் நெருப்பு பிண்டங்கள் கடலில் குதித்தெழுவதை கொலம்பசின் குழுவினர் கண் கூட கண்டிருக்கிறார்கள். இந்நிகழ்வு அவர்களின் கப்பலில் இருந்து சற்று தூரத்தில் தான் நிகழ்ந்திருக்கிறது. அதன் பின் ஒரு மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்துவிட்டது.

இவை அனைத்தும் கொலம்பஸ் தனது அமேரிக்க கண்ட பயண குறிப்பேட்டில் வரைத்து வைத்த தகவல்கள். தாம் வந்திருக்கும் இடம் சாதாரண பூமி இல்லை என்பதை கொலம்பஸ் உணர்ந்தார். அவ்விடம் மர்மம் நிறைந்த நிலம் என்பதை அறிந்தார்கள்.

கொலம்பஸுக்கு பல வினோத பரிட்சயங்களை அளித்த அவ்விடம் இன்னமும் தனது மர்ம முடிச்சுகளை கட்டவிழ்காமல் தான் இருக்கிறது. அமேரிக்காவின் மயாமி, ஜமைக்காவின் பொயெர்டோ மற்றும் பெர்மூடா என இணைபடும் இம்முக்கோன இடத்தின் இரகசிய சித்தாந்தங்கள் இன்னமும் பலரின் ஆரய்ச்சிக்குட்பட்டு தான் கிடக்கிறது. பல நூற்றாண்டுகள் கடந்து இன்றளவில் பெர்மூடா முக்கோணம் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் மர்மங்களை அறிவார் இல்லை.




கொலம்பஸின் பொர்மூடா முக்கோண குறிப்பை வைத்துப் பார்க்கையில் அவர் பெரும் பாக்கியசாலி. ஏன் என்று கோட்கின்றீர்களா? அதன் பின் அவ்விடத்தை கடல் மார்கமாகவும், ஆகாய மார்க மாகவும் கடந்த பல கப்பல்களும் வானூர்திகளும் தடம் தெரியாமல் மறைந்து போனது.

1880ஆம் ஆண்டு அட்லாண்டா எனப்படும் அமேரிக்க போர்க்கப்பல் மாயமாய் மறைந்த நிகழ்வு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. பெர்மூடா கடலருகே 300 இராணுவ வீரர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த அட்லாண்டா திடீரென எவ்வித தடயமும் இல்லாமல் காணாமற் போனது.

இதனை தொடந்து 1.2லட்சம் பரப்பளவைக் கொண்ட பெர்மூட பகுதில் செல்லும் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் யாவும் மாயமாய் மறைந்து போவதை அறிந்தார்கள்.

1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பகல் வேலையில் பெர்மூட கடல் பகுதியை ரோந்து வந்த 5 விமானங்களின் ராடார் தொடர்பு திடீரென துண்டிப்புக் கண்டது. இந்நிகழ்வின் விசாரனையின் போது படை கேப்டன் ‘பிரச்சனை ஏற்பட்டுவிட்ட்து’ எனக் கடைசியாக கூறியுள்ளார். அதன் பின் அவ்விமானங்களின் நிலை அறிவார் இல்லை.இந்த 5 கப்பல்களையும் கண்டுபிடிக்கும் பொருட்டு Martin PBM-3 Mariner எனும் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. அவ்விமானமும் தனது 30 படைவீர்ர்களோடு காணாமல் போனது.

இம்மர்மங்கள் தொடர்பாக 1973ஆம் ஆண்டு UFO எனப்படும் பறக்கும் தட்டுகளின் ஆய்வாளர் ஒருவர் வெளியிட்ட தகவல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென மறைந்து போகும் இவ்வகை சம்பவங்களுக்கும் வேற்றுக் கிரக வாசிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், வேற்றுக் கிரக வாசிகள் பெர்மூடா முக்கோன பகுதியை தங்களின் பூமி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இத்தகவல் உலக மக்களின் கடும் விமர்சனத்திற்குள்ளானது குறிபிட தக்கது.

பெர்மூட முக்கோனப் பகுதியின் மர்ம முடிச்சுகள் பல விதமான வர்ணனைகளோடு உலக மக்களின் பார்வைக்குள்ளானது. அவ்விடத்தை பூமியின் சிறந்த புவியீர்பு பகுதி எனக் கூறினார்கள், கடலடியில் ஏற்றபடக் கூடிய அதிர்வுகளின் தாக்கம் நிறைந்த பகுதி எனவும், அமேரிக்க இராணுவம் ஆவ்விடத்தை தனது அனுவாயுத சேதனை பகுதியாக பயன்படுத்தியதில் இப்பாதிப்புகள் ஏற்படுகிறது எனவும் கருத்துக் கொண்டுள்ளார்கள்.

இதை தவிர்த்து, வெற்றுக் கிரக வாசிகளின் பூமி ஆராய்ச்சி தளம், கடற் கன்னிகளின் நகரப் பகுதியெனவும் கூறுவது மக்களிடையே இப்பகுதி தொடர்பாக அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. மக்களின் கவனத்தை ஈர்க்கவும், பீதியை கிழப்பவும் ஏற்படுத்தப்பட்ட புரட்டு எனக் கருதினார்கள்.

பெர்மூட முக்கோனத்தை பற்றிய பல கருத்துக் கணிப்புகள் இருந்தாலும், இன்றளவில் எந்தத் தகவலும் திருப்திகரமாக அமையவில்லை. கெலம்பஸின் குறிப்போடு 500 ஆண்டுகளுக்கு மேல் கடந்தாகிவிட்டது. ஆராய்ச்சிகள் முழுமையடைய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதால் பெர்மூடா முக்கோணம் இருமாப்புடன் தனது மர்மத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அண்மைய தகவலாக தேசிய பூகோலவியலின் கூற்றின் படி பெர்மூடா பகுதியில் எந்த அபாயமும் இல்லை என்றும் மேற்சொன்னவை புரட்டு என்றும் குறிபிடுகிறார்கள். கடலில் மறையும் கப்பல்களை சுற்றினும் ஒரு தகதகப்பை போன்ற ஆவியை பரவவிட்டு கண்களுக்கு புலப்படாமல் சொய்யும் நூதனம் தான் அது என்கிறார்கள். இது அமேரிக்க இராணுவத்தினர் கையாண்ட முறை.

அப்படி என்றால் கொலம்பஸ் தனது குறிப்பேட்டில் குறித்ததும் பொய்யான தகவலா? அல்லது அவர் குறிப்பிட்டதாக சொல்லப்படும் பொய்யா? பெர்மூடாவைச் சுற்றிப் பார்க்க நீங்கள் தயாரா?

பி.கு: இப்பதிவு நீண்ட நாட்களுக்கு முன் எழுதியது. மன நிறைவு இல்லாத காரணத்தால் பதிப்பிக்கவில்லை. நேரமின்மை காரணமாக புதியதாக எதுவும் எழுதவில்லை. இக்கட்டுரையை பதிப்பித்துவிட்டேன்.

Saturday, August 02, 2008

குசேலன் ஒரு *** படம்- ‘ச்சே’ ரகம்

முதல் காட்சியை முடித்துக் கொண்டு வெளியேறியவர்கள் முகத்தில் மன நிறைவின் அறிகுறி ஏதும் காணவில்லை. கொஞ்சம் விட்டால் திரையரங்கையே கொழுத்திவிடும் வெறித்தனமான அனல் ஒன்று அவர்கள் கண்களில் எரிவதைக் கண்டேன்.

50 வயதை கடந்த பெரியவர் ஒருவர் அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்தார். அடுத்தக் காட்சிக்குத் தயாரகிக் கொண்டிருந்த நபர் அவரது நண்பர் போல. சந்தோஷமாக அவரிடம் கேட்கிறார்.

“படம் எப்படிய்யா?”

“என்னா *** படம் எடுத்து வச்சிருக்கானுங்க ****ங்க. கடுப்பு *** தான் இருக்கு.”

என்னடா மனுசன் இப்படி பேசுகிறாரே என முகம் சுழிக்கச் செய்தது. அவர் தலையைப் பார்த்தேன். அவர் சொல்லியது நன்றாகவே பழுத்திருந்தது. படத்தையும் அதிகமாகவே பழுக்கவிட்டு விட்டார்கள் போல. சரி அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள் என பார்ப்பதற்காக உள்ளே நுழைந்தேன்.

நட்பை மையமாக வைத்துப் பல படங்கள் வெளியாகி இருந்தும். இதை கொஞ்சம் மாறுபட்ட கோனத்தில் கொடுக்க வேண்டும் என்ற அக்கரையை யாரும் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. ரஜினி என்ற சொல் மட்டும் போதும் மக்களை மயக்கிவிடலாம் என்ற மமதையில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

1) படத்தின் ஆரம்பத்தில் இசைக்கும் குழலோசை நட்பின் இலக்கனத்தை சொல்கிறது. காற்று எங்கிருந்தாலும் குழல் அதை மறப்பதில்லை. அது வீசும் போதெல்லாம் அழகிய நாதத்தை எழுப்பிவிடும். இரு நண்பர்களும் ஒருவருக்கொருவர் மறக்காமல் இருக்கிறார்கள். சூழ்நிலை அவர்கள் சந்திக்கத் தடுக்கிறது.

2) சிகை திருத்தக் கடையில் ஒட்டிய முடிகளுடன் உள்ள சீப்பையும், ஒரு நடிகனின் அலங்கார பொருட்களையும் மாறி மாறி காண்பித்து நண்பர்கள் இருவருக்கும் இருக்கும் தூர அளவை சித்தரிக்க முயற்ச்சித்திருக்கிறார்கள்.

3) சில காட்சியமைப்புகள் சிறப்பாகவே இருக்கின்றன. ஆனால் தேவையற்றதாகவும் இருக்கிறது.

4) வடிவேலுவின் நகைச்சுவை ‘உவ்வேக்க்க்’ ரகம். சிரமப்பட்டு சிரிக்க வைக்கிறார். இந்திரலோக பாதிப்பு இன்னும் விட்டொழியவில்லை போல.

5) எல்லோரும் சொல்கிறார்கள் கடைசி பதினைந்து நிமிடம் படம் சூப்பராக அமைந்திருக்கிறதென்று. ‘செண்டிமெண்ட்’ காட்சிகளை மட்டும் வைத்து காலத்தை கடத்துவது வேதனைக்குறியது.

6) பசுபதியின் நடிப்பு சிறப்பாகவே இருக்கிறது. வெயில் திரையில் கொடுத்த அதே ரசம் என்பதால் கொஞ்சம் மாறுதல் படைக்க முயற்சி செய்திருக்கலாம். “அவரை தெரியும்னு சொன்னதுக்கே என்ன இந்த நிலமைக்கு கொண்டு வந்துட்டிங்க” எனும் காட்சி அனுதாபத்தோடு சிரிக்க வைக்கிறது.

7) பிரபு- என்ன கொடுமை வாசு இது. காவல் அதிகாரியாக வருகிறார். உடை தைப்பதற்கு துணி போதவில்லை போலும். ஒரு காட்சியில் காவல் உடையில் பிதுங்கி போய் நிற்கிறார். ஜப்பானிய காட்டூனில் ‘டோரேமோன்’ இப்படிதான் இருக்கும்.

8) நயந்தாரா நமிதா இடத்தை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார். கூச்சப்படாமல் மார்பகங்களையும் தொடையையும் காட்டி விருந்து படைத்திருக்கிறார். குடுபத்தோடு வந்திருந்தவர்களுக்கு நல்ல சூடு. குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது அவர்களுக்கு கேடு.

9) இசையமைப்பாளரின் முயற்சி பாராட்டிற்குறியது. ஆனல் எடுபடாமல் போனது வேதனைக்குறியது. முதல் பாடல் ‘வெயிலோடு விளையாடி’ எனும் வெயில் திரை பாடலை நினைவுகூறச் செய்கிறது.

10) படத்தில் மீனா, கீதா, சுந்தராஜன், லிவிங்ஸ்டன் வரும் காட்சிகள் மிக மிக எரிச்சல்.

பாதி படத்தில் என் பின்னால் அமர்ந்திருந்த நண்பர்களுக்குள் பேச்சு.

“என்னடா மச்சான் தூங்குற”. சிரித்துக் கொண்டே கேட்கிறான் ஒருவன்.

“டேய் ஏன் டா ரஜினி படம்னு சொல்லி கூட்டிட்டு வந்து உயிர வாங்குறிங்க, என்னால முடியல, படம் முடிந்த்தும் எழுப்பிவிடு”.

இடைவேளையின் போது சரோஜா பட ‘சப்போர்டிங்’ திரைகண்டது. பின்னாலிருந்து “ஏய் படத்த முடிங்கடா” என்ற சவுண்டு.

படம் முடிந்த போது எல்லோர் முகத்திலும் இலவு வீட்டிற்கு போய் வந்த உணர்ச்சி. குசேலன் திரைபட இருக்கை, மரணப் படுக்கை.

மகாகாவி காளிதாஸ் படத்தை ‘எடிட்’ செய்து கொடுத்திருப்பதை போன்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் குசேலன் ஒரு ‘குஜிலி’ படம் ச்ச்சே… குப்பை படம்.

பி.கு: *** என்பது சூப்பர் ஸ்டார் என அர்த்தம். நீங்கள் கெட்ட வார்த்தையை போட்டு படித்திருந்தால் நான் பொறுபல்ல.

குளிர்கால காதல்



வெண்சுருட்டில்லாமல்
புகைகக்கும் சுவாசப்பை
இசைப்பயிற்சியின்றி தாளம் போடும்
வெள்ளை பற்கள்.
கூட்டுப் புழுவென
போர்வைக்குள் அடங்கும்
மனிதர்கள்.

சோம்பல் முறித்த காற்று
தூக்கம் கொண்டு
தரையில் படுத்துவிடும்.
மீன்கள் ஓடைக்கு
விடுமுறை கொடுத்து
எரிமலைக்கு பயணம் போகும்.
ஆதவனையும்
ஊதி அணைத்து விடும்
குளிர் பனிக்காலம்.

சூடு தேடிய உடல்கள்
சிக்கிமுக்கி கற்களாகும்.
கூடு தேடிய கிளிகள்
திக்கித் திணறி பாடும்.

குளிர்காலத்தில் குளியல்
உடலுக்கு கொடுக்கும்
மரணதண்டனை.
மதுக் கிண்ணமும்
மாமிசப் படையலும்
சுவைக்கச் சொல்லும் சிந்தனை.

பூக்களும்
மூச்சிழுக்க முடியாமல்
தலை கவிழ்ந்து கொள்ளும்
அதிகாலையில்....

என் காதலிக்காக தேடுகிறேன்
எங்காவது தப்பி பிழைத்திருக்கும்
ஒரு ஒற்றை ரோஜாவை.
நான் பூவோடு வரும்
கனவில்அவள்.
புன்னகை ரோஜாவை
பரிசளிக்க போகும்
மகிழ்ச்சியில் நான்.

Friday, August 01, 2008

நாசி லெமாக் எனும் உணவு

மலாய்காரர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் நாசி லெமாக் மிக பிரசித்திப் பெற்றது. நாசி என்பது சோறு. லெமாக் என்றால் கொழுப்பு என அர்த்தம் கொள்ளும். இவ்வுணவிற்கான சோற்றை கொலுப்புச் சத்து நிறைந்த தேங்காய் பாலில் நிரை கட்டிச் சமைப்பதால் நாசி லெமாக் என அழைக்கப் படுகிறது.

மலேசியா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கபூர் மற்றும் புருனய் போன்ற நாடுகளிலும் இவ்வுணவு கிடைக்கிறது. இதை தவிர்த்து கிளாந்தான் திரங்கானு போன்ற வட மலேசிய மாநிலங்களின் இதனை ‘நாசி டகாங்’ என அழைக்கிறார்கள். அவர்கள் ஊதா நிறம் மற்றும் பழுப்பு நிறத்திலான புழுங்கள் அரிசியை இவ்வுணவிற்கு பயன்படுத்துகிறார்கள். இநதோநேனேசியவில் இதனை நாசி ஊடுக் என அழைப்பதாக கேள்வி.அக்காலகட்டங்களில் மலாய்காரர்கள் அதிகமாக விவசாயம் மற்றும் மீன் பிடிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். வருமானமும் நிலையற்றதாய் இருந்தது. கொழுப்புச் சத்து நிறைந்த நாசி லெமாக் உணவு அவர்களை நீண்ட நேரம் பசியை கட்டுபடுத்த உதவியது.
நாசி லெமாக் பெரும்பாலும் காலை உணவாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. மிதமான வேலை செய்பவர்களுக்கு நாசி லெமாக் சிறந்த உணவல்ல. அது சோர்வையும் தூக்கத்தையும் உண்டு பண்ணூம். ஆனாலும் அதை கணக்கில் கொள்ளாமல் காலையில் மூக்கு பிடிக்க வெட்டிவிட்டு அலுவலகத்தில் தூங்குபவர்களும் உண்டு.
முன்பு நாசி லெமாக் ஒரே வகையாக தான் இருந்தது. கால மாற்றத்தில் இந்த உணவிலும் மாற்றம் உண்டாகிவிட்டது. தற்சமயம், நாசி லெமாக் டாகிங், நாசி லெமாக் ஆயாம், நாசி லெமாக் ரெண்டாங் என பல பிரிவுகளாக பிரிந்து ஒரு நாவலை படைக்கும் அளவிற்கு வந்துவிட்டது. காலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களிலும் நாசி லெமாக் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

நாசி லெமாக், கார நெத்திலி பிரட்டல், வெள்ளரி, வெக வைத்த அல்லது பொரித்த முட்டை, பொரித்த நெத்திலி, மற்றும் வருத்த நிலக் கடலை எனும் கலவைகளைக் கொண்டு செய்யப்படும். இடத்திற்கு தகுந்தாற் போல் இதன் விலையும் மாறுபடும். நாசி லெமாக் சாப்பிடும் போது குளிர் பானங்களை குடிப்பதை விட சூடான காபி அல்லது தேனீர் வகைகளை அருந்த எடுத்துக் கொண்டால் கூடுதல் சுவையை உணர முடியும்.

சீன தேச பயணத்தின் போது விமாத்திலும் நாசி லெமாக் விற்கக் கண்டேன். அதன் விலை ரிங்கிட்15 ஆக இருந்தது. அது முடிந்து போன பட்சத்தில் விமான பணியாளர்களை கடிந்துக் கொண்ட பயணிகளையும் கண்டேன். நாசி லெமாக் துரித உணவு வகையை சேர்ந்த பண்டமாக்க் கருதப்படுகிறது. உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் நாசி லெமாக் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மரடைப்பு உள்ளவர்கள் நாசி லெமாக் சப்பிடுவது மிகுந்த பங்கத்தை விளைவிக்கும்.

நாசி லெமாக் சாலையோர கடைகள் முதற் கொண்டு நட்சத்திர விடுதிகள் வரை சுலபமாக கிடைக்கும் உணவு. சாலையோரங்களில் வாழை இலையில் மடித்து விற்பனை செய்வார்கள். சமைக்கும் போது சேர்க்கப்படும் “செண்டோல்’ எனப்படும் இலையின் வாசனை வாழை இலையோடு சேர்ந்து மூக்கை துளைக்கும், நாக்கில் எச்சில் ஊறும். அதன் சுவை சமைப்பவரின் கைவண்ணத்திலும் சாப்பிடுபவர்களின் நாக்கிலும் அடங்கி இருக்கிறது.

சிலருக்கு நாசி லெமாக் ஒவ்வாது. முக்கியமாக நாசி லெமாக் ரெண்டாங் வயிற்றை கலக்கிவிடும். சிலருக்கு ரெண்டாங் சேர்த்து சாப்பிடுவதில் அலாதிப் பிரியம். எனக்கு நாசி லெமாக் ஈக்கான் பிலிஸ் (கார நெத்திலி பிரட்டல்) சாப்பிட விருப்பம். சில நேரம் அதுவே காலை உணவாகவும் அமையும்.

Wednesday, July 30, 2008

தங்க விலை யார் காரணம்?


தங்க விலைக்கு தங்கம் தான் நிகராக இருக்க முடியும். தங்கத்தின் விலை ஏற்றம் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்கிறது. தங்கம் என்பது என்ன? அது ஒரு உலோக வகையை சேர்ந்தக் கணிமம்.

தங்கத்தில் குறை இருப்பினும் அது தன் தரத்தில் குறை காணாது என்கின்றார்கள். மனிதனின் உயர்ந்த குணத்தை உணர்த்திச் சொல்ல ‘தங்கமான மனிதன்’ என்கிறார்கள். தங்கம் போற்ற தக்கதா? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு மவுசு ஏற்பட்டது? அது அழிந்து வரும் கணிமம் என்பதனாலா? உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு யார் காரணம்?

மேற் காணும் கேள்விகளுக்கு மனிதனும் அவனது பேராசை போக்கும் தான் காரணம் என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதுதான் உண்மை. தங்கம் என்பது பூமியில் இருக்கும் மண், கல், மரம், செடி கொடி போன்ற வரிசையில் வரும் ஒரு சாதாரண பொருளே. தங்க விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. மனித குலம் தங்கம் என குறிபிடப்படும் பொருளுக்கு மதிப்பளிக்காமல் அதை விலை கொடுத்து வாங்காமல் இருக்க வேண்டும். இவ்வழி மட்டுமே தங்க விலை குறைய திறவு கோலாக அமையும்.

தங்கத்திற்கு மவுசு ஏற்பட்ட சரித்திரத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். மனித நாகரீக வளர்ச்சிக்கு வியாபரம் முக்கிய வர்த்தமானமாக அமைந்திருக்கிறது. வியாபார மாற்றுக்கு தங்கத்தையும் அதனை அடுத்து வெள்ளியையும் உயயோக படுத்தி இருக்கிறார்கள்.

அக்காலகட்டங்களில் யுத்தம் ஏற்படுவது பொதுவான ஒன்று. வெற்றிக் கொண்ட நாடு தோல்வியடைந்த நாட்டை தன் வசமாக்கிக் கொள்ளும். அந்நாட்டில் கிடைக்கும் செல்வங்களை எடுத்துக் கொள்ளும். அப்படி எடுத்துக் கொள்வதில் தங்கம் தான் முதலிடம் வகிக்கும். இது தான் மனிதன் தங்கத்திடம் அடிமையான முதல் படி. அரச குலத்தில் தங்கத்தின் உபயோகம் அதிகம் இருந்தது. இதன் வழி தங்கத்தை வைத்திருப்பவர்கள் உயர்ந்தவர்கள் எனும் போக்கு ஏற்பட்டது. முக்கியமாக இந்தியர்களிடையும், எகிப்தியர்களிடையும் தங்கத்தின் மவுசு அதிகமாக இருந்தது. தனது நாட்டின் செல்வச் செருக்கை காட்டவும், வளம் பெற செய்யவும் தங்கம் அதிகமாக தேவைபட்டது.

பின்னாட்களில் தங்கத்தின் தாக்கம் நாம் தற்சமயம் புழகத்தில் பயன்படுத்தும் பணமென உருவெடுத்தது. நாகரீகத்தின் வளர்ச்சி வியாபாரத்தை பெருக்கியது. மக்கள் நாணய மாற்று வியாபாரத்தை பரவளாக அமல்படுத்த ஆரம்பித்தார்கள். தங்க நாணயமே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.

இம்மாறுதல் தங்கத்தை பத்திரபடுத்த உற்படுத்தியது. இக்காலகட்டத்தில் மக்களிடையே திருட்டு அதிகரித்தது. அதை தடுக்க தங்க வியாபரிகளும் அடகு கடைகளும் உருவாக்கப்பட்டன. மக்கள் தங்கத்தை அடகு கடைகளில் பத்திரப்படுத்தி வைத்து அதில் பெரும் சான்றிதழை நாணய மாற்றுக்கு பயன்படுத்தினார்கள்.

நாளடைவில் ஒரு குறிபிட்ட நபர்களிடையே தங்கம் அதிகரித்தது. தங்க விலையை அவர்கள் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொண்டார்கள். தங்கத்தின் மேல் இருக்கும் அலாதி பிரியத்தில் மக்களும் அதனை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அதன் விலையும் செல்லில் அடங்க ஏற்றத்தை நாடிக் கொண்டிருக்கிறது.




முக்கியமாக நம் இந்தியர்களிடையே தங்க ஆபரணம் அணிவதை பெருமையாக நினைக்கிறார்கள். ஒரு நற்காரியங்களுக்கு வருபவர்கள் புது புது வடிவில் தங்க ஆபரணங்களை அணிந்து வருகிறார்கள். அதை பார்க்கும் மற்றோர் நபர் தானும் அப்படிபட்ட அணிகலனையோ இல்லை அதைவிட அழகான ஆபரணத்தை வாங்க ஆசைக் கொள்கிறார்கள். தங்கத்தின் விலை அடாது ஏகிறினாலும் நம்மவர்கள் விடாமல் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் தங்க விலை ஏற்றத்திற்கு யார் காரணம்?

தீட்டு பட்டுருச்சி!


"ஆயா.... பையனுக்கு பொஸ்தகம் வாங்கனும், ஐயா கிட்ட கேட்டிருந்தேன்",
தலையை சொரிந்தபடி நின்றிருந்தான் குப்புசாமி.

குப்புசாமி அந்த கிராமத்தில் தோட்ட வேலை பார்ப்பவன். இது போக மதிய வேளைகளில் கிராமத்தார்கள் சொல்லும் சிறு சிறு வேலைகளை செய்து கைகாசு வாங்கிக் கொள்வான். கஷ்டபடும் குடும்பம்.

அவன் ஆயா என அழைத்தது சின்ன தாயி எனும் கிழவியை. கிழவியின் குடும்பம் வசதிபடைத்தது. கிழவி குப்புசாமியை நீசனை பார்ப்பது போல பார்த்தாள்.

"மாச கடைசி ஆனா ஆளாளுக்கு வந்துடுங்கடா, சண்டால பசங்களா, நாங்க என்ன காச மரத்துலயாடா நட்டு வச்சிருக்கோம்", கடுகடுவென வார்த்தைகளை கொட்டினாள் கிழவி.

"எல்லாம் இந்த குணா பையன சொல்லனும். அவனவன வைக்க வேண்டிய எடத்துல வச்சாதானே, கண்டவனுங்ககிட்ட பழகுறது, இப்ப என்னடானா வீட்டு வாசல்ல வந்து நிக்குறானுங்க" கிழவி முனங்கிக் கொண்டே பணம் எடுக்க போனாள்.

குப்புசாமியின் காதில் அது கேட்காமல் இல்லை. கிழவியின் புத்தி அவன் அறிந்தது தான். அதுவும் இல்லாமல் தற்சமயம் பணம் அவனுக்கு முக்கியம். யார் என்ன சொன்னால் என்ன. பயனுக்கு புதிய நோட்டு புஸ்தகம் வாங்க வேண்டும்.

வேண்டா வெறுப்பாக குப்புசாமியிடம் பணத்தை நீட்டினாள் கிழவி. அதை வாங்கிய குப்புசாமியின் கை அவள் மீது பட்டது. கிழவி ஆத்திரமடைந்தாள்.

"எட்டி நின்னு வாங்கிக்க முடியாதாடா எடுபட்ட பயலே" ஏசியவாரு கையை சேலையில் துடைத்தாள்.

குப்புசாமி முகம் சுளிக்காமல் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் கிளம்பியதும் துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள் கிழவி.

"என்ன பாட்டி, இன்னிக்கு இவ்வளோ சீக்கிரம் குளிக்க போற?" கிழவியின் பேத்தி கண்மணி கேட்டாள்.

"அந்த கீழ் சாதிக்காரப் பய கை என் மேல பட்டுறிச்சுடீ".


"நீ திருந்த மாட்ட பாட்டி".


"அடி போடி தீட்டு பட்டுறிச்சுனு சொல்றேன். இப்பதான் பேச வந்துட்டா".

வேகமாய் குளியலறையை நோக்கிச் சென்றாள் கிழவி. எதிர் பாரா விதமாக தடுக்கி விழுந்து தலையில் பலமான காயம் பட்டது. சற்று நேரத்தில் கிழவி உயிரை விட்டாள்.

****

"டேய் குப்பு! பெரியவர் வீட்டு கிழவி மண்டய போட்டுறிச்சி. உன்ன பந்தல் போட கூப்பிடுறாங்க".

குப்புசாமி மறுபடியும் கிழவி வீட்டை நோக்கி ஓடினான். பந்தல் போட்டு மற்ற வேலைகளை முடித்து திரும்புவதற்குள் அவனுக்கு சோர்ந்துவிட்டது. வீட்டுக்குள் நுழைந்த குப்புசாமியிடம் அவனது மகன் கேட்கிறான்.

"அப்பா நோட்டு புஸ்தகம் வாங்கிட்டியா?"


"டேய், செத்து போன கிழவி கொடுத்த காசு டா, பொஸ்தகம் வாங்கினா தீட்டாகிடும், அடுத்த சம்பளதில் அப்பா வாங்கி கொடுக்கிறேன் சரியா".

உடையை மாற்றிக் கொண்டு கள்ளுக் கடை நோக்கி நடக்கிறான் குப்புசாமி.