நான் முன்பு கூறியதைப் போல சரித்திர நாவல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தான். பொன்னியின் செல்வனைப் படிப்பவர்கள் தொடர்ந்து சரித்திர நாவல்களைப் படிக்க விருப்பப்படுவார்கள் என ஐயம் இல்லாமல் கூறலாம்.
முன்பு இந்நாவலை படித்துக் கொண்டிருந்த சமயம், இதை முடித்து விட்டு பாலகுமாரனின் ‘உடையார்’ நாவலை படியுங்கள் என சீ.வீ.ஆர் அண்ணாச்சி சிபாரிசு செய்தார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி தான் உடையார் என்று கூறினார். முன்பு இதைக் கூறும் போது அவர் அமேரிக்காவில் இருந்தார். தற்சமயம் இந்தியா திரும்பியதில் இருந்து அவரை ஜி-டாக்கில் பார்ப்பது அரிதாகிவிட்டது.
இந்நாவலைப் படிப்பதற்கு முன்பாகவே பல விடயங்களை தெரிந்து கொண்டாகிவிட்டது. பொன்னியின் செல்வனைப் போல் இதில் சுவாரசியம் குறைவு எனவும் கூறக் கேள்விப்பட்டேன். இரு ஆசிரியர்களும் அவர்கள் பாணியில், அவர்களுக்கே உரிய நடையில் எழுதி இருப்பார்கள். கல்கியின் எழுத்து நடையை ஏற்றுக் கொண்ட நான் பாலகுமாரனின் பாணியையும் ஏற்றுக் கொள்வேன் என நினைகிறேன்.
ஈப்போ மற்றும் கோலாலம்பூரிலும் பல புத்தகக் கடைகளில் தேடிப் பார்த்துவிட்டேன். கிடைத்தபாடில்லை. கடைசியாகப் பார்த்த கடையில் 6 பாகம் 440 ரிங்கிட் என சொன்னார்கள். பொதுவாக மற்ற கடைகளில் 1 ரூபாய்க்கு 0.25 சென் என கணக்கிடுவார்கள். இந்தக் கடையில் மட்டும் ரூபாய்க்கு 0.37 சென் என கணக்கு போட்டார்கள்.
பிறகு நான் வாடிக்கையாக தமிழ் புத்தகம் வாங்கும் கடைக்காரர் , இந்தியாவில் இருந்து புத்தகம் தருவித்துக் கொடுப்பதாக கூறினார். மொத்த விலை 350 ரிங்கிட் வந்தது. (ஆர்டர் கொடுத்து பிறகு ரத்து செய்துவிட்டேன்).
அன்று நண்பர் வெங்கட்ராமனுடன் ஜீ-டாக்கில் அரட்டை அடிக்கும் போது உடையார் புத்தகத்தை பற்றிக் கேட்டேன். தற்சமயம் அவர் உடையார் படித்துக் கொண்டிருப்பதாகவும், வேண்டும் என்றால் வாங்கி அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன் மூன்று பாகங்களை முதலில் அனுப்பி வைத்துவிட்டார். இன்னும் ஒரு வாரத்திற்குள் வந்துவிடும். வந்ததும் ஆரம்பிக்க வேண்டும். நண்பர் வெங்கட்ராமனுக்கு எனது நன்றி.
பொன்னியின் செல்வன் படித்த போது கிடைத்த இன்பத் தாக்கம் கல்கியின் பார்த்திபன் கனவு படிக்கும் போது கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான். இந்நாவலில் எனக்கு விளங்காத ஐயப்பாடுகள் இன்னமும் உண்டு.
Monday, June 23, 2008
Sunday, June 22, 2008
வலைப்பதிவும் ஒரு வருட நிறைவும்
கடந்த 15.06.2008 உடன் நான் வலையுலகத்திற்கு பிரவேசித்து ஒரு வருடம் நிறைவை அடைகிறது. 2007-ஆம் ஆண்டு நண்பர் ஒருவர் மூலம் தேன்கூடு திரட்டி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஆறு மாத காலமாக கண்டகண்ட இடுகைகளைப் படித்து வந்தேன். யாருடைய பதிவு, யார் எழுதுகிறார்கள் என்றேல்லாம் தெரியாது. பின்னூட்டங்களும் இடத் தெரியாது.


1) ஆரம்ப காலத்தில் என்னை வெகுவாக கவர்ந்தது திரு. சேவியர் அவர்களின் பதிவு. ஆரம்பத்தில் தெரியாவிட்டலும் பின்னாட்களில் அது சேவியர் அவர்களால் எழுதப்படுகிறது என அறிந்து கொண்டேன். இவருடைய “கவிதைச் சாலை” மற்றும் “அலசல்” என இரு பதிவுகளுமே கலக்கலாக தான் இருக்கும்.
2) அடுத்ததாக திரு. சுப்பையா அவர்களின் பதிவும் என்னை அதிகம் கவர்ந்தது. அவரது பல்சுவைப் பதிவின் சிறுகதைகள் அனைத்தும் படித்திருக்கிறேன். ஆஹா, நாமும் இப்படி எழுதினால் நன்றாக இருக்குமே என்று யோசித்ததும் உண்டு. அவர் பதிவுகளின் சிறப்பே வாசகர்களைச் சற்றும் சலிப்புத் தட்டாமல் பதிவின் இறுதி வரைக் கொண்டுச் செல்வது தான்.
3) திரு. மோகன்தாஸ் அவர்களின் பதிவும் மிக ஜனரஞ்சகமாக இருக்கும். இவரது சோழர் பதிவு மற்றும் சிறுகதைகள் அருமை. நட்சத்திரம் எனும் தலைப்பில் இவர் எழுதிய சோழர்கால சிறுகதை என்றும் மறக்க முடியாதது.
4) மற்றபடி ஆரம்பத்தில் நான் அதிகம் சொன்றுவருவது திரு. வெங்கட்ராமன், திரு. ஹரி மற்றும் மைபிரண்ட் போன்றவர்களின் பதிவும் அடங்கும். லக்கி லுக் மற்றும் இட்டிலி வடை பதிவுகள் அனைவரும் வாசிக்கும் ஒன்று என்பதால் அதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை.
இந்த ஒரு வருட காலத்தில் நான் எழுதிய பதிவுகள் மிகக் குறைவானவையே. பதிவு எழுத ஆரம்பித்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டு தட்டுத்தடுமாறி எழுதினேன். நான் சரிவர கற்றது அடிப்படை ஆரம்பத் தமிழ்க் கல்வி மட்டுமே. அதன் பிறகு எழு எட்டு வருடத்திற்குத் தமிழ் வாசிப்பும் எழுத்தும் அறவே இல்லாமல் போனது.
இதற்கு காரணம் நான் படித்தது இஸ்லாமிய இடைநிலைப் பள்ளியில். ஞாயிற்று கிழமை நாளிதழில் வரும் சினிமா துணுக்குகளை புரட்டிப் பார்த்துவிட்டு வைத்துவிடுவேன். அச்சமயத்தில் அது மட்டும்தான் என் தமிழை வளர்க்க நான் எடுத்துக் கொண்ட முயற்சி. என் பள்ளியில் 100 மலாய் மணவர்களுக்கு 2 இந்திய மாணவர்கள் இருப்பார்கள். 15 பேர் இருந்தால் தான் தமிழ் கல்வி பயிலும் வாய்ப்பு கொடுக்கப்படும். நாங்கள் இருந்ததே 4 பேர். அவர்களில் இருவர் ‘பீட்டர் கேஸ்’ . நாங்கள் தமிழ் வகுப்பு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு முற்றிலும் தடைபட்டது.
என்னை மறுபடியும் எழுதவும் வாசிக்கவும் வைத்தது தமிழ் வலையுலகம்தான். எழுத்தும், வாசிப்பும் என் தமிழ் எழுத்து, இலக்கண, இலக்கிய பிழை, யாவற்றையும் திருத்திக் கொள்ளப் பெரிதும் வழி புரியும் என நம்புகிறேன்.
நான் இது வரை எழுதியது நூற்றுக்கும் குறைவான பதிவுகள் தான். சில முறை பதிவேற்றம் செய்யத் தெரியாமலும் சிரமப்பட்டிருக்கிறேன். முக்கியமாக படம் மற்றும் வீடியோ காட்சிகளை ஆரம்பத்தில் எனக்கு வலையேற்றத் தெரியாது.
அச்சமயத்தில் ‘பிளாகரின்’ உபயோகம் எனக்குச் சரியாக தட்டுப்படவில்லை. மலேசிய வலைபதிவர்களின் எண்ணிக்கையும் மிகச் சொற்பமாக இருந்ததால் உதவி கிட்டுவதும் சிரமமாக இருந்தது. ‘வெர்ட்பிரஸ்’ தளத்தின் உபயோகம் சற்று சுலபமாக தொன்றியதால் அதில் எழுத ஆரம்பித்தேன். நீண்ட இடைவேளிக்கு பிறகு மறுபடியும் பிளகருக்கு தாவி எழுதி வருகிறேன்.
இச்சமயத்தில் என் வலைப்பதிவு மேம்பாட்டிற்கு உதவிய மைபிரண்டு, சதீஸ்குமார் மற்றும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். முக்கியமாக, வலைப்பதிவுலக கருத்து பரிமாற்றத்திற்கு பெரிதும் பங்காற்றும் “தமிழ்மணம்” திரட்டிக்கும் என் மனமார்ந்த நன்றி.
2) அடுத்ததாக திரு. சுப்பையா அவர்களின் பதிவும் என்னை அதிகம் கவர்ந்தது. அவரது பல்சுவைப் பதிவின் சிறுகதைகள் அனைத்தும் படித்திருக்கிறேன். ஆஹா, நாமும் இப்படி எழுதினால் நன்றாக இருக்குமே என்று யோசித்ததும் உண்டு. அவர் பதிவுகளின் சிறப்பே வாசகர்களைச் சற்றும் சலிப்புத் தட்டாமல் பதிவின் இறுதி வரைக் கொண்டுச் செல்வது தான்.
3) திரு. மோகன்தாஸ் அவர்களின் பதிவும் மிக ஜனரஞ்சகமாக இருக்கும். இவரது சோழர் பதிவு மற்றும் சிறுகதைகள் அருமை. நட்சத்திரம் எனும் தலைப்பில் இவர் எழுதிய சோழர்கால சிறுகதை என்றும் மறக்க முடியாதது.
4) மற்றபடி ஆரம்பத்தில் நான் அதிகம் சொன்றுவருவது திரு. வெங்கட்ராமன், திரு. ஹரி மற்றும் மைபிரண்ட் போன்றவர்களின் பதிவும் அடங்கும். லக்கி லுக் மற்றும் இட்டிலி வடை பதிவுகள் அனைவரும் வாசிக்கும் ஒன்று என்பதால் அதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை.
இந்த ஒரு வருட காலத்தில் நான் எழுதிய பதிவுகள் மிகக் குறைவானவையே. பதிவு எழுத ஆரம்பித்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டு தட்டுத்தடுமாறி எழுதினேன். நான் சரிவர கற்றது அடிப்படை ஆரம்பத் தமிழ்க் கல்வி மட்டுமே. அதன் பிறகு எழு எட்டு வருடத்திற்குத் தமிழ் வாசிப்பும் எழுத்தும் அறவே இல்லாமல் போனது.
இதற்கு காரணம் நான் படித்தது இஸ்லாமிய இடைநிலைப் பள்ளியில். ஞாயிற்று கிழமை நாளிதழில் வரும் சினிமா துணுக்குகளை புரட்டிப் பார்த்துவிட்டு வைத்துவிடுவேன். அச்சமயத்தில் அது மட்டும்தான் என் தமிழை வளர்க்க நான் எடுத்துக் கொண்ட முயற்சி. என் பள்ளியில் 100 மலாய் மணவர்களுக்கு 2 இந்திய மாணவர்கள் இருப்பார்கள். 15 பேர் இருந்தால் தான் தமிழ் கல்வி பயிலும் வாய்ப்பு கொடுக்கப்படும். நாங்கள் இருந்ததே 4 பேர். அவர்களில் இருவர் ‘பீட்டர் கேஸ்’ . நாங்கள் தமிழ் வகுப்பு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு முற்றிலும் தடைபட்டது.
என்னை மறுபடியும் எழுதவும் வாசிக்கவும் வைத்தது தமிழ் வலையுலகம்தான். எழுத்தும், வாசிப்பும் என் தமிழ் எழுத்து, இலக்கண, இலக்கிய பிழை, யாவற்றையும் திருத்திக் கொள்ளப் பெரிதும் வழி புரியும் என நம்புகிறேன்.
நான் இது வரை எழுதியது நூற்றுக்கும் குறைவான பதிவுகள் தான். சில முறை பதிவேற்றம் செய்யத் தெரியாமலும் சிரமப்பட்டிருக்கிறேன். முக்கியமாக படம் மற்றும் வீடியோ காட்சிகளை ஆரம்பத்தில் எனக்கு வலையேற்றத் தெரியாது.
அச்சமயத்தில் ‘பிளாகரின்’ உபயோகம் எனக்குச் சரியாக தட்டுப்படவில்லை. மலேசிய வலைபதிவர்களின் எண்ணிக்கையும் மிகச் சொற்பமாக இருந்ததால் உதவி கிட்டுவதும் சிரமமாக இருந்தது. ‘வெர்ட்பிரஸ்’ தளத்தின் உபயோகம் சற்று சுலபமாக தொன்றியதால் அதில் எழுத ஆரம்பித்தேன். நீண்ட இடைவேளிக்கு பிறகு மறுபடியும் பிளகருக்கு தாவி எழுதி வருகிறேன்.
இச்சமயத்தில் என் வலைப்பதிவு மேம்பாட்டிற்கு உதவிய மைபிரண்டு, சதீஸ்குமார் மற்றும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். முக்கியமாக, வலைப்பதிவுலக கருத்து பரிமாற்றத்திற்கு பெரிதும் பங்காற்றும் “தமிழ்மணம்” திரட்டிக்கும் என் மனமார்ந்த நன்றி.
செருப்பு

உங்களுக்கு ரஞ்சிதாவ தெரியுமா? எனக்குத் தெரியும். என் கூடப் படிச்சவ. இது நடந்தப்ப எனக்கு வயசு 20 இருக்கும். கல்லூரியில படிச்சிக்கிட்டு இருந்தேன். ரஞ்சிதா மாநிறமா இருப்பா. குதிரை வால் மாதிரி அவ கோரை முடிய பின்னால வலித்துக் கொத்தாகக் கட்டி இருப்பா.
அவள் வகுப்புக்கு வரும்போதெல்லாம் சாதாரணமா தான் உடுத்தி இருப்பா. ஆனா லட்சணமா இருப்பா. அதோ அவ வகுப்புக்கு வந்துகிட்டு இருக்கா. வகுப்புல சில பொண்ணுங்க இருக்காளுங்க. அசின் நயன்தாராங்கிற நெனப்போட தான் சுத்திக்கிட்டு இருப்பாளுங்க. ரஞ்சிதா வகுப்புள்ள நுழையறா.
அவ வகுப்புல நுழைஞ்ச போது அந்த அசின் நயன்தாரா பொண்ணுங்க அவள ஒரு மாதிரியா பாக்குறாளுங்க. அவுங்களுக்குள்ள ஏதோ பேசிக்கிறாளுங்க. ரஞ்சிதா அத கவனிக்காம இல்ல. நம்மளப் பத்திதான் பேசுறாங்கன்னு அவளுக்கே அப்பட்டமா தெரியுது. இன்ன பேசிக்கிறாளுங்கன்னும் யூகிக்க முடியுது. ரஞ்சிதா மனசுக்குள்ள நெனச்சுக்குறா.
“என் செருப்பு, உங்களுக்கு என்னடி வந்துச்சு.”
அந்தப் போலி நடிகைகள் ரஞ்சிதாவப் பாத்துச் சிரிக்கிறாளுங்க. ரஞ்சிதாவுக்கு கோபம் தலைக்கேறிடுச்சு. எரிச்சிடுற வேகத்துல போலி நடிகைகளப் பாத்து மொறைக்கிறா. அவளுகளும் பதிலுக்கு முறைக்கிறாளுங்க.
உண்மைய சொல்லனும்னா ரஞ்சிதா பயந்தாங்கொள்ளிப் பொண்ணு. அவளோட கோபப் பார்வைய அவளால தக்கவைச்சிக்க முடியல. தலைய கீழ போட்டுக்கிட்டு அவ இடத்தை நோக்கி நடக்குறா.
இப்போ சரித்திரப் பாடம். இந்த லெக்சரரைப் பத்தி நான் கண்டிப்பா சொல்லியாகனும். இவுங்க எப்போதும் கண்ணுல அடிக்கிற மாதிரி தான் துணி உடுத்துவாங்க. ஆரஞ்சு மஞ்சள்னு. பாக்கவே கண்ணு கூசும். பிறகு என்னத்த படிக்கிறதுன்னு பல நாள் பாடம் ஆரம்பிச்சதுமே தூங்கிப் போயிருக்கேன்.
அன்னிக்கு ரஞ்சிதா போட்டிருந்த செருப்பு ரொம்ப தேஞ்சு போயிருந்துச்சு. அவ வரும் போது ‘சரக்கு பரக்குனு’ கேட்ட சத்தம் தான் நடந்த கலவரத்துக்குக் காரணம்.
“மாணவர்களே, அடுத்த வாரம் நம் வரலாற்றுக் கழகத்தின் ஆண்டுக் கூட்டம். கூட்டம் முடிந்ததும் விருந்து உபசரிப்பும் இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 15 புள்ளிகள் வழங்கப்படும். நாகரிகமான உடையுடன் வர வேண்டும். கட்டொழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும். இன்றைய பாடம் முடிந்தது, நீங்கள் கிளம்பலாம்.”
ஷாப்பிங் செண்ட்டர்:
ரஞ்சிதா ஷாப்பிங் செண்டருக்கு வந்திருக்கா. அவள கேவலப் படுத்தும் பழைய செருப்பை போட்டுக்கிட்டு ஆண்டுக் கூட்டத்துக்கு அவ போக விரும்பல. விலை குறைவான தூக்குச் செருப்பு தேடிக்கிட்டு இருக்கா. அதை போட்டுக்கிட்டு எப்படி சாதாரணமா நடக்குறதுன்னும் யோசிச்சிக்கிட்டு இருக்கா.
தேடி அலைஞ்சி கடைசியா விலை மலிவா கொடுக்கும் கடைக்கு முன் நிக்கிறா.
“இந்தக் கடைதான் நமக்கு சரிப்படும்” என மனசுல நினைச்சுக்கிட்டா.
“வாங்க மிஸ், எந்த மாதிரி செருப்பு வேணும் உங்களுக்கு?” கச்சிதமான சிரிப்போடு கேக்குறா அந்தக் கடைக்காரப் பொண்ணு.
“எனக்கு தூக்குச் செருப்பு வேணும். 20 வெள்ளிக்கு குறைவா கிடைக்குமா? என்ன கலரா இருந்தாலும் பரவாயில்லை?”
“இல்லைங்க. குறைஞ்ச வெலைன்னு பாத்தீங்கன்னா 39 வெள்ளிக்குதான் இருக்கு.”
“ம்... சரி, சைஸ் 7 கொடுங்க.”
ரஞ்சிதா பட்ஜெட்டுல பெரிய பாறையே விழுந்திடுச்சு.
ரஞ்சிதாவின் வாடகை வீடு:
போன மாசம் வீட்டிலிருந்து கொண்டு வந்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் தான் இனிமேல் அவளுக்கு மூணு வேளை சாப்பாடும். இங்க படிக்கிற காலத்துல இந்த சாப்பாடு அவளுக்கு ரொம்பவே பழகிப் போச்சு. காலையில் வாங்கி வந்த தூக்குச் செருப்பைப் பாக்குறா. ஏனோ தெரியல அவளுக்குள்ள ஒரு எரிச்சல். வீட்டுக் கதவு ஓரத்துல கெடக்கும் பழைய செருப்பப் பாக்குறா. அவளுக்குள்ள ஒரு பரிதாபம் வருது.
பஸ் ஸ்டாப்பில் சாயங்கால வேளையில்:
ரஞ்சிதா கழக கூட்டத்துக்குப் போக நின்னுகிட்டு இருக்கா. அவளால முடிஞ்ச அளவுக்கு அழகா உடுத்தி இருக்கா. முக்கியமா அந்த தூக்குச் செருப்பு போட்டிருக்கா. ரஞ்சிதாவுக்கு அது அசௌகரியமாத் தான் இருக்கு. அவ கால் கெண்டைய அழுத்தி வலியைக் கொடுக்குது. பஸ் வந்ததும் எல்லோரும் அடிச்சிப் புடிச்சு ஏறுறாங்க. ரஞ்சிதாவும் அந்தக் கூட்டத்தில் ஒருத்தியா இருக்கா. அவ கஷ்டப்பட்டு ஏறினாலும் தூக்குச் செருப்பு தடுக்கி விட்டுடுச்சு. கால அழுத்தி வச்சதில அதோட கால் கட்டை ஒடைஞ்சிருச்சு.
சில மணி நேரம் கழித்து:
ரஞ்சிதா இன்னமும் அந்த பஸ் ஸ்டாப்பில் கவலையா உக்காந்திருக்கா. அவ முகத்துல சோகம். நெனப்பெல்லாம் சரித்திரப் பாடத்தின் 15 மார்க்குகளை சுத்தி வட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. வெறும் காலோட அவ வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சுட்டா. இப்படி நடக்க அவளுக்கு ரொம்ப வசதியா இருக்கு.
அவளது கையிலிருந்த பாலிதீன் உறைக்குள் புதுச் செருப்பு கேட்பாரில்லாம கெடந்துச்சு. அதைச் சரி செய்ய அவ கிட்ட பணமும் இல்ல. ரஞ்சிதாவ பழைய செருப்பு கூப்பிடுது. அந்த செருப்பு ரஞ்சிதாவ போலியாக்கல. அவளுக்கு அந்தச் செருப்புதான் எப்போதும் சௌகரியத்தக் கொடுக்குது. ரஞ்சிதா எப்பவும் ரஞ்சிதாதான்.
வீட்டுக்கு வந்து பாத்த போது தேஞ்சு போன பழைய சேருப்பு கதவு ஓரத்திலேயே கெடக்கு. அத யாரும் எடுத்துக்கனும்னு நெனைக்கல. ஏன்னா அந்த செருப்போட அருமை அவுங்களுக்குத் தெரியாது. ரஞ்சிதாவுக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் மற்றவர்கள்தான்.
இப்போ பழைய செருப்பு இருந்த இடத்துக்கு புதுச் செருப்பு குடிபெயர்ந்திருக்கு.
அவள் வகுப்புக்கு வரும்போதெல்லாம் சாதாரணமா தான் உடுத்தி இருப்பா. ஆனா லட்சணமா இருப்பா. அதோ அவ வகுப்புக்கு வந்துகிட்டு இருக்கா. வகுப்புல சில பொண்ணுங்க இருக்காளுங்க. அசின் நயன்தாராங்கிற நெனப்போட தான் சுத்திக்கிட்டு இருப்பாளுங்க. ரஞ்சிதா வகுப்புள்ள நுழையறா.
அவ வகுப்புல நுழைஞ்ச போது அந்த அசின் நயன்தாரா பொண்ணுங்க அவள ஒரு மாதிரியா பாக்குறாளுங்க. அவுங்களுக்குள்ள ஏதோ பேசிக்கிறாளுங்க. ரஞ்சிதா அத கவனிக்காம இல்ல. நம்மளப் பத்திதான் பேசுறாங்கன்னு அவளுக்கே அப்பட்டமா தெரியுது. இன்ன பேசிக்கிறாளுங்கன்னும் யூகிக்க முடியுது. ரஞ்சிதா மனசுக்குள்ள நெனச்சுக்குறா.
“என் செருப்பு, உங்களுக்கு என்னடி வந்துச்சு.”
அந்தப் போலி நடிகைகள் ரஞ்சிதாவப் பாத்துச் சிரிக்கிறாளுங்க. ரஞ்சிதாவுக்கு கோபம் தலைக்கேறிடுச்சு. எரிச்சிடுற வேகத்துல போலி நடிகைகளப் பாத்து மொறைக்கிறா. அவளுகளும் பதிலுக்கு முறைக்கிறாளுங்க.
உண்மைய சொல்லனும்னா ரஞ்சிதா பயந்தாங்கொள்ளிப் பொண்ணு. அவளோட கோபப் பார்வைய அவளால தக்கவைச்சிக்க முடியல. தலைய கீழ போட்டுக்கிட்டு அவ இடத்தை நோக்கி நடக்குறா.
இப்போ சரித்திரப் பாடம். இந்த லெக்சரரைப் பத்தி நான் கண்டிப்பா சொல்லியாகனும். இவுங்க எப்போதும் கண்ணுல அடிக்கிற மாதிரி தான் துணி உடுத்துவாங்க. ஆரஞ்சு மஞ்சள்னு. பாக்கவே கண்ணு கூசும். பிறகு என்னத்த படிக்கிறதுன்னு பல நாள் பாடம் ஆரம்பிச்சதுமே தூங்கிப் போயிருக்கேன்.
அன்னிக்கு ரஞ்சிதா போட்டிருந்த செருப்பு ரொம்ப தேஞ்சு போயிருந்துச்சு. அவ வரும் போது ‘சரக்கு பரக்குனு’ கேட்ட சத்தம் தான் நடந்த கலவரத்துக்குக் காரணம்.
“மாணவர்களே, அடுத்த வாரம் நம் வரலாற்றுக் கழகத்தின் ஆண்டுக் கூட்டம். கூட்டம் முடிந்ததும் விருந்து உபசரிப்பும் இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 15 புள்ளிகள் வழங்கப்படும். நாகரிகமான உடையுடன் வர வேண்டும். கட்டொழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும். இன்றைய பாடம் முடிந்தது, நீங்கள் கிளம்பலாம்.”
ஷாப்பிங் செண்ட்டர்:
ரஞ்சிதா ஷாப்பிங் செண்டருக்கு வந்திருக்கா. அவள கேவலப் படுத்தும் பழைய செருப்பை போட்டுக்கிட்டு ஆண்டுக் கூட்டத்துக்கு அவ போக விரும்பல. விலை குறைவான தூக்குச் செருப்பு தேடிக்கிட்டு இருக்கா. அதை போட்டுக்கிட்டு எப்படி சாதாரணமா நடக்குறதுன்னும் யோசிச்சிக்கிட்டு இருக்கா.
தேடி அலைஞ்சி கடைசியா விலை மலிவா கொடுக்கும் கடைக்கு முன் நிக்கிறா.
“இந்தக் கடைதான் நமக்கு சரிப்படும்” என மனசுல நினைச்சுக்கிட்டா.
“வாங்க மிஸ், எந்த மாதிரி செருப்பு வேணும் உங்களுக்கு?” கச்சிதமான சிரிப்போடு கேக்குறா அந்தக் கடைக்காரப் பொண்ணு.
“எனக்கு தூக்குச் செருப்பு வேணும். 20 வெள்ளிக்கு குறைவா கிடைக்குமா? என்ன கலரா இருந்தாலும் பரவாயில்லை?”
“இல்லைங்க. குறைஞ்ச வெலைன்னு பாத்தீங்கன்னா 39 வெள்ளிக்குதான் இருக்கு.”
“ம்... சரி, சைஸ் 7 கொடுங்க.”
ரஞ்சிதா பட்ஜெட்டுல பெரிய பாறையே விழுந்திடுச்சு.
ரஞ்சிதாவின் வாடகை வீடு:
போன மாசம் வீட்டிலிருந்து கொண்டு வந்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் தான் இனிமேல் அவளுக்கு மூணு வேளை சாப்பாடும். இங்க படிக்கிற காலத்துல இந்த சாப்பாடு அவளுக்கு ரொம்பவே பழகிப் போச்சு. காலையில் வாங்கி வந்த தூக்குச் செருப்பைப் பாக்குறா. ஏனோ தெரியல அவளுக்குள்ள ஒரு எரிச்சல். வீட்டுக் கதவு ஓரத்துல கெடக்கும் பழைய செருப்பப் பாக்குறா. அவளுக்குள்ள ஒரு பரிதாபம் வருது.
பஸ் ஸ்டாப்பில் சாயங்கால வேளையில்:
ரஞ்சிதா கழக கூட்டத்துக்குப் போக நின்னுகிட்டு இருக்கா. அவளால முடிஞ்ச அளவுக்கு அழகா உடுத்தி இருக்கா. முக்கியமா அந்த தூக்குச் செருப்பு போட்டிருக்கா. ரஞ்சிதாவுக்கு அது அசௌகரியமாத் தான் இருக்கு. அவ கால் கெண்டைய அழுத்தி வலியைக் கொடுக்குது. பஸ் வந்ததும் எல்லோரும் அடிச்சிப் புடிச்சு ஏறுறாங்க. ரஞ்சிதாவும் அந்தக் கூட்டத்தில் ஒருத்தியா இருக்கா. அவ கஷ்டப்பட்டு ஏறினாலும் தூக்குச் செருப்பு தடுக்கி விட்டுடுச்சு. கால அழுத்தி வச்சதில அதோட கால் கட்டை ஒடைஞ்சிருச்சு.
சில மணி நேரம் கழித்து:
ரஞ்சிதா இன்னமும் அந்த பஸ் ஸ்டாப்பில் கவலையா உக்காந்திருக்கா. அவ முகத்துல சோகம். நெனப்பெல்லாம் சரித்திரப் பாடத்தின் 15 மார்க்குகளை சுத்தி வட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. வெறும் காலோட அவ வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சுட்டா. இப்படி நடக்க அவளுக்கு ரொம்ப வசதியா இருக்கு.
அவளது கையிலிருந்த பாலிதீன் உறைக்குள் புதுச் செருப்பு கேட்பாரில்லாம கெடந்துச்சு. அதைச் சரி செய்ய அவ கிட்ட பணமும் இல்ல. ரஞ்சிதாவ பழைய செருப்பு கூப்பிடுது. அந்த செருப்பு ரஞ்சிதாவ போலியாக்கல. அவளுக்கு அந்தச் செருப்புதான் எப்போதும் சௌகரியத்தக் கொடுக்குது. ரஞ்சிதா எப்பவும் ரஞ்சிதாதான்.
வீட்டுக்கு வந்து பாத்த போது தேஞ்சு போன பழைய சேருப்பு கதவு ஓரத்திலேயே கெடக்கு. அத யாரும் எடுத்துக்கனும்னு நெனைக்கல. ஏன்னா அந்த செருப்போட அருமை அவுங்களுக்குத் தெரியாது. ரஞ்சிதாவுக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் மற்றவர்கள்தான்.
இப்போ பழைய செருப்பு இருந்த இடத்துக்கு புதுச் செருப்பு குடிபெயர்ந்திருக்கு.
குறிச்சொற்கள்
குட்டிக் கதை,
சிறுகதை
Thursday, June 19, 2008
வைரமுத்துவின் - வானம் தொட்டுவிடும் தூரம்தான்
தலைப்பு: வானம் தொட்டு விடும் தூரம்தான்ஆசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து
நயம்: சமூக நாவல்
பதிப்பகம்: சூர்யா
எனது செகரிப்பில் உள்ள புத்தகங்களில் கவிதை நூல்களும் அடங்கும். அதில் அதிக இடத்தை பிடித்திருப்பது கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை நூல்கள். பா.விஜய், கவிஞர் கண்ணதாசன், அறிவுமதி மற்றும் சில உள்ளூர் கவிஞர்களின் கவிதை நூல்கள் இருப்பினும், நேரம் அனுமதிக்கும் சமயங்களில் நான் அதிகம் புரட்டிப் பார்ப்பது கவிப்பேரரசின் கவிதை வரிகள்தான்.
சென்ற வருடம் கவிதை நூல்கள் தேடிக் கொண்டிருந்த பொழுது தட்டுப்பட்டது “வானம் தொட்டுவிடும் தூரம்தான்” எனும் புத்தகம். கவிதை நூலாக இருக்கும் என நினைத்துதான் கையில் எடுத்தேன். பின்னால் திருப்பிய பொழுது ‘இது கவிஞரின் முதல் நாவல்’ என அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கு முன் கவிஞரின் ‘சிற்பியே உன்னை செதுக்குகிறேன்’ என்ற கட்டுரை புத்தகத்தை வாசித்துள்ளேன். அதிக அளவிளான புத்திமதிகளை ஒரு இளைஞனுக்கு ஒரே புத்தகத்தில் புகட்ட முயற்சித்திருப்பது சற்று திகட்ட வைத்தது. அவரின் கவிதை வரியிலான புத்திமதிகளை ஏற்றுக் கொண்டு மனதையும் தேற்றிக் கொண்டேன்.
கையில் எடுத்த புத்தகத்தை வைக்க மனம் இல்லாமல், சரி என்னதான் இருக்கும், ஒரு கை பார்த்துவிடலாம் என வாங்கிவிட்டேன். உரைநடையில் கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் ஏமாற்றமாய் அமையலாம். உரைநடையையும் கவிதை தேனில் கலந்து கொடுப்பது கவிஞரின் பாணி.
நான் படித்து முடித்த பிறகு என் நண்பர் ஒருவர் இந்நூலை இரவல் வாங்கினார். இரண்டு வாரம் கழித்து “என்னால இரண்டு அத்தியாயத்துக்கு மேல முடியல மச்சி, நீங்களே வச்சிகுங்க” என திருப்பித் தந்துவிட்டார்.
நீங்கள் படிக்கும் போது வரிக்கு வரி இருக்கும் கவிதை வாடை உங்களை முகம் சுழிக்க வைக்கலாம். அதை ரசித்துக் கொண்டே புரட்டினால் நிச்சயம் இரண்டு நாட்களில் முடித்துவிடலாம்.
கதையின் நாயகன் வாஞ்சிநாதன், நாயகி செல்வி, மற்றும் முக்கிய கதா பாத்திரம் செந்தோழன். பட்டபடிப்பை முடித்துவிட்டு கிராமத்தில் இருக்கும் ஒரு இளைஞர் கூட்டத்தை சுற்றி நடக்கும் கதைக் கரு. வேலையில்லாமல் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கும் ஏழை இளைஞர்களுள் ஒருவன் தான் கதையின் நாயகன். அவன் செல்வியின் மேல் காதல் வயப்படுகிறான். யார் இந்த செல்வி? அந்த ஊர் பெரியவர் சங்கரலிங்கத்தின் மகள். சங்கரலிங்கம் கதையின் வில்லன்.
தனது சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் ஊர் மக்களை தன் பிடியில் வைத்திருக்கிறான் சங்கரலிங்கம். சங்கரலிங்கத்தின் சூழ்ச்சியை ஊர் மக்களுக்கு உணர வைத்து வாஞ்சிநாதனையும் செல்வியையும் இணைத்து வைப்பதே கதைச் சுருக்கம். இந்நூலை வாசித்து முடித்தபோது பழைய சினிமா படத்தை பார்த்த கசப்பு உண்டானது. புதிய பாணியில் என்றால் சிம்புவின் படம். வித்தியாசமான நடையில் இருக்கும் நாவலை படித்த மகிழ்ச்சியும் உண்டானது.
கதையை படித்து முடித்த போது ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. “பணக்கார பெண்ணை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்ட வேலை இல்லா இளைஞன் இனி எப்படி வாழ்க்கையை நடத்தப் போகிறான்?”
இது கவிஞரின் முதல் நாவல் என்பதை மனதில் வைத்து ஏற்றுக் கொண்டாலும், ஒரு மாறுதலுக்காக கதையை வேறு கோணத்தில் கொடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம்.
சுவாரசியமான உரைநடை நாவலை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நாவல் கசப்பு.
கவிதை வரியை நேசிப்பவர்களுக்கு தித்திப்பு.
பிரமாண்ட முறையில் மருதநாயகம்- கமல்ஹாசன் பேட்டி

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படம் உலகம் முழுவதிலும் ரிலிஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இதில் கமல்ஹாசன் 10 வேடங்களில் கலக்கலாக நடித்துள்ளார். தசாவதாரம் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவர் ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கே: தசாவதாரம் படம் எடுக்கும் ஐடியா எப்படி வந்தது?
ப: தசாவதாரம் எடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தேன். இப்படத்தை எடுத்தது கஷ்டமான காரியம் அல்ல. அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன்.
கே: நீங்கள் மிக பெரிய பராட்டாக எதை கருதுகிறீர்கள்?
ப: நான் எப்போதுமே விரும்புவது ரசிகர்களின் பாரட்டைதான். அவர்கள் பாராட்ட பாராட்டதான் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு கலைஞனுக்கு ரசிகர்கள் பாரட்டுதான் முக்கியம்.
கே: தசாவதாரம் படம் தொழில் நுட்பரீதியாக நன்றாக உள்ளது. ஆனால் கதை பலவீனமாக இருப்பதாக சொல்கிறார்களே?
ப: குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அதை பற்றி எல்லாம் நான் கவலைப் படுவதே இல்லை. என்னை பொறுத்தவரையில் ‘தசாவதாரம்’ படம் மிக நன்றாக வந்துள்ளது. அதில் எந்த குறையும் காணமுடியாது. அந்த அளவிக்கு கவனமாக இப்படத்தை எடுத்திருக்கிறோம்.
கே: இப்படம் வேகமாக செல்வதால். சாதாரண ரசிகர்களினால் புரிந்துக் கொள்ள முடியாதே?
ப: எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். படம் வேகமாகச் செல்வதால் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம். விரைவில் ரசிகர்களை மகிழ்விற்பதர்காக எனது கனவு படமான “மருதநாயகத்தை” பிரமாண்டமான முறையில் எடுக்க இருக்கிறேன். இப்படத்தை மர்மயோகிக்கு பிறகு எடுக்க திட்டமிட்டுள்ளேன்.
கே: தசாவதாரத்தில் நீங்கள் நடித்த கேரக்டர்களில் மிகவும் பிடித்த கேரக்டர் எது?
ப: ஒரு தாயிடம் சென்று நீங்கள் பெற்ற பத்து குழந்தைகளில் எந்த குழந்தை பிடிக்கும் என கேட்டால் அவள் என்ன பதில் சொல்வாளே அதுதான் என் பதிலும். தசாவதாரத்தில் நான் நடித்த 10 கேரக்டர்களும் என் குழந்தைகள் மாதிரி.
கே: சிரஞ்சீவி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறீர்களா?
ப: சிரஞ்சீவி எனது நெருங்கிய நண்பர். அவர் சினிமாவில் வெற்றி பெற்றது போல் அரசியலிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
நன்றி: மலேசிய நண்பன்.
கே: தசாவதாரம் படம் எடுக்கும் ஐடியா எப்படி வந்தது?
ப: தசாவதாரம் எடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தேன். இப்படத்தை எடுத்தது கஷ்டமான காரியம் அல்ல. அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன்.
கே: நீங்கள் மிக பெரிய பராட்டாக எதை கருதுகிறீர்கள்?
ப: நான் எப்போதுமே விரும்புவது ரசிகர்களின் பாரட்டைதான். அவர்கள் பாராட்ட பாராட்டதான் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு கலைஞனுக்கு ரசிகர்கள் பாரட்டுதான் முக்கியம்.
கே: தசாவதாரம் படம் தொழில் நுட்பரீதியாக நன்றாக உள்ளது. ஆனால் கதை பலவீனமாக இருப்பதாக சொல்கிறார்களே?
ப: குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அதை பற்றி எல்லாம் நான் கவலைப் படுவதே இல்லை. என்னை பொறுத்தவரையில் ‘தசாவதாரம்’ படம் மிக நன்றாக வந்துள்ளது. அதில் எந்த குறையும் காணமுடியாது. அந்த அளவிக்கு கவனமாக இப்படத்தை எடுத்திருக்கிறோம்.
கே: இப்படம் வேகமாக செல்வதால். சாதாரண ரசிகர்களினால் புரிந்துக் கொள்ள முடியாதே?
ப: எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். படம் வேகமாகச் செல்வதால் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம். விரைவில் ரசிகர்களை மகிழ்விற்பதர்காக எனது கனவு படமான “மருதநாயகத்தை” பிரமாண்டமான முறையில் எடுக்க இருக்கிறேன். இப்படத்தை மர்மயோகிக்கு பிறகு எடுக்க திட்டமிட்டுள்ளேன்.
கே: தசாவதாரத்தில் நீங்கள் நடித்த கேரக்டர்களில் மிகவும் பிடித்த கேரக்டர் எது?
ப: ஒரு தாயிடம் சென்று நீங்கள் பெற்ற பத்து குழந்தைகளில் எந்த குழந்தை பிடிக்கும் என கேட்டால் அவள் என்ன பதில் சொல்வாளே அதுதான் என் பதிலும். தசாவதாரத்தில் நான் நடித்த 10 கேரக்டர்களும் என் குழந்தைகள் மாதிரி.
கே: சிரஞ்சீவி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறீர்களா?
ப: சிரஞ்சீவி எனது நெருங்கிய நண்பர். அவர் சினிமாவில் வெற்றி பெற்றது போல் அரசியலிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
நன்றி: மலேசிய நண்பன்.
பொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது? (இறுதிப் பதிவு)
(பொன்னியின் செல்வன்)
வானதி பொன்னியின் செல்வன் மேல் கொண்ட காதல்
சிறுபிராயத்திலேயே தாயை இழந்து , பின் தந்தையையும் சீக்கிரமே பறி கொடுத்துவிட்டு அன்புக்கு ஏங்கி நின்ற இந்த சிறு பெண்ணுக்கு, வாழ்வில் ஒரே பிடிப்பு என்பது தாய் பாசத்தையொத்த இளைய பிராட்டியின் அன்பு தான் … பருவம் வந்த பின்னும் கூட, குந்தவைக்கு அவள் குழந்தையாகவே தெரிந்தாள் …
ஆனால் வல்லிய விதியானது அவளையும் விட்டுவிடவில்லை … வந்தது ஒரு காட்டுப் பூனையின் ரூபத்தில்…. பூனையோடு பொருந்த (அதாவது சண்டையிட ….) யானை மேல் வந்தான் ஒருவன் … வேடிக்கையாக இல்லை ? ஆனால் கேவலம் பறவை இனமென்று பாகுபாடு பாராமல் , அந்த இளம் குஞ்சுகளின் உயிரைக் காத்த அந்த கருணைமிகு இதயம் … யாராக இருப்பன் அந்த யானைப் பாகன்? களங்கமில்லா தூய பால் போன்ற அவள் மனதை கொள்ளை கொண்டவன் யார் ? என்ற எண்ணங்கள் அவளுக்குள் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை இன்பமாக வதைத்தன …
வெளி உலகம் என்றால் என்ன என்பதையே அறியாது , கொடும்பாளுர் ஒன்றே உலகம் என்று வளர்ந்து வந்த ஒரு அறியாப்பெண்; காதல், களவு போன்றவற்றை கனவில் கூட எண்ணிப்பார்த்திராதவள் … அதனால் … கள்ளம் , கபடம் , கவலை ஏதும் இன்றி மனம் போல் ஆடிப்பாடி , களிப்பில் மூழ்கிக் கிடந்தவளின் உள்ளத்தில் இப்போது ஏதோ ஒரு பெரும் மாற்றம் … மானைப் போல துள்ளிக்கொண்டு திரிந்த கால்களில் இன்று ஒரு சிறிய தயக்கம், தடுமாற்றம் … தோகை விரித்தாடும் மயிலைப்போல வான வெளியெங்கும் சுதந்திரமாக சுற்றி வந்த அவளின் மனம் இன்று கூண்டில் அடைபட்ட கிளியாக ஆகிவிட்டது ஏன் ?
குளத்தில் விழும் கல் தண்ணீரில் வட்ட வட்டமாய் அழகிய அலைகளை எழச்செய்வது போல் … அவளின் உள்ளத்தடாகத்தில் ஒரு அழகிய வீர திருமுகம் இன்ப அலைகளை எழுப்பி விட்டிருக்கிறது …. அந்த அனுபவம் அவளுக்குப்புதிதாக மற்றுமின்றி புதிராகவும் இருந்தது … புரியாத சிலவற்றில் தான் போதையும் , ஈடுபாடும் அதிகம் உண்டாகும் என்பது உண்மையோ? தான் கொடும்பாளூர் இளவரசி என்று அறிந்ததும் அவன் கோபம்கொண்டு விருட்டென்று திரும்பிச் சென்றது ஏன் ? மீண்டும் சந்தித்தால் அவன் ஏன் அவ்வாறு கோபம் கொண்டான் என கேட்கவேண்டும் … அந்த யானைப்பாகனை மறுபடியும் காண முடியுமா ? என்றெல்லாம் அந்த சிறுபெண்ணின் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் அலை மோதின …
ஆனால் … அவன்தான் இந்த நாட்டு மக்களின் ஆத்மார்த்தமான அன்புக்கு உரியவன் … அரசற்கு அரசர்களை எல்லாம் அடி பணிய வைக்கும் அஞ்சா நெஞ்சன் , வீரத்தில் , கருணையில் , அழகில் இந்த அகிலமே போற்றும் `அருள் மொழி வர்மன் ‘… என்ற உண்மை அவள் உள்ளத்தில் பேரிடியாக இறங்கியது … நாடே போற்றும் இளவரசரை , கேவலம் ஒரு யானை பாகன் என்று நினைத்தோமே ? இந்த அரசே அவனுடையது … அவனுக்கே அரசாங்க உத்யோகம் வாங்கித்தருவதாக சொன்னோமே … என்ன வேடிக்கை , இல்லை .. மூடத்தனம் ? என்றெல்லாம் அவள் நினைத்து உள்ளம் கலங்கிக்கொண்டிருந்த வேளையில், அவன் முன்னே தீபம் ஏந்தி நின்று , அவனை வாழ்த்தி , வெற்றி மலை சூட்டி வழியனுப்ப வேண்டும் என்றால் ? …
தயக்கமும் , குற்ற உணர்வும் , அவற்றோடு பெண்களுக்கே உரிய இயற்கையான அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பென்னும் நால்வகை உணர்ச்சிகளும் ஒருங்கே உந்தித்தள்ள , அவன் தன்னை ஏறெடுத்துப்பார்த்த அந்த நொடியில் , அவள் தன்வசம் இழந்து மூர்ச்சை ஆகிச் சரிந்தாள் … ஆனால் … இது அபசகுனத்திற்கான அறிகுறியல்ல … அவளை அவன் எப்போதும் நினைவில் வைத்திருக்க தூண்டும் நல்லதொரு சந்தர்ப்பம் என்பதையோ … அவனும் , இப்படி ஒரு விசித்திரப்பெண்ணை முதன் முதலில் பார்த்ததைத் தன் ஆயுள் முழுவதும் மறக்கப் போவதில்லை என்பதையோ …, பாவம் , அப்பேதை அறியாள் …
(வானதி)
அவனை ஒரு வேலைக்காரன் என்று பரிகாசம் செய்தது , அவன் போர்க்களம் போகும் சமயத்தில் , விபத்து போல் தீபத்தை தவற விட்டது என்பதையே அவள் மனம் நினைத்து கொண்டிருக்க … அந்த நினைவுகளே அவன் மீது அளப்பெரும் காதலாக உருப்பெற்று வளர்ந்து வருவதை அவள் அறிந்திறாள் …. இருந்தாலும் , அவனை மணந்து கொள்ள இந்த சோழ நாட்டின் ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் விரும்புவாள் … அதையே தான் செய்தால் … பட்டமகிஷி ஆகும் எண்ணத்திலேயே !!! என்ற ஏளனப்பேச்சும் வரும் … யானைப் பாகனாகவே அவன் இருந்திருக்கக்கூடாதா ?…
“நான் அவனை யானைப்பாகனாக இருக்கும்போதே விரும்பினேன் … அவன் இளவரசனா என்று அப்போது எனக்கு தெரியாது … அதைப்பற்றிய கவலை அப்போது அல்ல எப்போதும் எனக்கு இல்லை , அவன் அன்பு ஒன்றே ஏன் பிறவியின் பயன் , அவன் இதயமே எனக்கு அரியாசனம் “… என்றெல்லாம் அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொண்டு , தன் காதலுக்கு உரமேற்றி வளர்த்துவந்தாள் …. பிரதிபலன் எதுவும் எதிர் பாராத காதல் தன்னுடையது என்று நிரூபிக்க ஒரு தருணம் வாராதா என்று வாடி வருந்திக்கொண்டிருந்தாள் …
அத்தகையவனை …ஒரு நாள் கடல் கொண்டு விட்டது !! என்ற செய்தி வந்தால்? … அதை அவள் காதுகள் கேட்டனவா ? இல்லை , அதற்கு முன்னமே அவள் உயிர் அவளிடத்தில் இல்லை என அறிந்து கொண்டாள் … இனி யோசிக்க என்ன இருக்கிறது ? இந்த உடம்பேனும் கூட்டைப்பற்றி இனி என்ன கவலை ? அவனோடு வானவெளியில் நட்சத்திரமாக ஜொலித்திருக்கவும் , சோலைத்தென்றலோடு கூடவே சேர்ந்து வரும் பூக்களின் நறுமணம் போல , அவன் ஆவியோடு சுற்றித்திரிந்திருக்கவும் அவள் தயாராகி விட்டாள் …
ஓடையில் பாய்ந்து தன் உயிரை விட்டுவிட துணித்து விட்டாள் … ஐயோ பாவம் , … அது கைகூடவில்லையே … தன்னைக் கரை ஏற்றிக்காப்பாற்றி, தன் உள்ளம் கவர்ந்தவனோடு தன்னை சேர விடாமல் பிரித்தது யார் என்று தெரிந்து கொள்ள அவள் விரும்பாததில் என்ன ஆச்சரியம் ? ஆனால் …அவனை கடல் கொண்ட செய்தி உண்மையல்ல என்று அறிந்ததும் உண்டான இன்பத்துக்கு அளவே இல்லை … ஆஹா … ஒரு நொடியில் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம் என எண்ணி மகிழ்வதற்குள் … அவன் இன்னொரு பெண்ணை நேசித்துக்கொண்டு இருக்கலாம் என்று கேட்கும் படி நேர்ந்ததே … என்ன கொடுமை !!! போகட்டும் … அவன் யாரை விரும்பினாலும் … என் காதல் மாறாது … அவன் உயிரைக்காத்த பெண்ணை அவன் விரும்புவதில் தவறு ஒன்றுமில்லை …. ஆனாலும் , தான் தன் தூய அன்பைக்காட்ட ஒரு வாய்ப்புக்கூட கிடைக்கவில்லையே என்று எண்ணி அவள் இன்னும் வேதனைப்பட்டாள் …
அன்று ஒரு நாள் , காவிரித்தாய் , கரை புரண்டு பொங்கி வந்த தன் அன்பினால் , அவளை குடந்தை ஜோதிடர் வீட்டுக்கூரையோடு சேர்த்துக்கொண்டு சென்ற போதும், தன் உயிரைப்பற்றிய கவலை சிறிதும் அவளுக்கு இல்லை … ஆனால் , தன்னை மீட்க வெள்ளத்தில் குதித்த அந்த ஓடக்காரப்பெண்ணை தான் காப்பாற்ற வேண்டும் , அவள் இளவரசருக்கு செய்த உதவிக்கு , பிரதி உதவியாக தான் அவளைக்காப்பற்றியாக வேண்டும் , இளவரசரின் மேல் உள்ள தன் மெய் அன்பை நிரூபிக்க இது போல் ஒரு பொன்னான தருணம் என்றும் அமையப்போவதில்லை … அந்த முயற்சியில் தான் இறக்க நேரிட்டாலும் , மரணத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் , அதை இளவரசர் உணரும் போது அவர் கண்களில் துளிர்க்கும் ஒரு சொட்டு கண்ணீர் மட்டுமே தனக்குப்போதும் … என்று எண்ணியே பூங்குழலியை அவள் முதலை வாயினின்று காப்பாற்றினாள்…
ஆனால் அவள் விஷயத்தில் விதியின் விளையாட்டுகள் இனிதாகவே இருந்தன …. தன் மனம் கொண்ட நாயகனும் தன்னை நினைத்து அல்லும் பகலும் மருகுகிறான் என்று அறிவதை விட ஒரு இனிய செய்தி வேறு என்ன இருக்க முடியும் ? அதை அவன் வாயினாலேயே கேட்கும் போது , அந்த நொடிக்க்காகவே தான் உயிர் வாழ்ந்திருப்பதாக அவள் நினைப்பதில் வியப்பொன்றும் இல்லையே ?
தன் காதலன் இறந்த செய்தி கேட்டு தன்னுயிரை விட்டுவிடத்துணிந்தவள் , தன் காதலனைக் காப்பாற்றியவளை தான் காப்பாற்றி, அவன் நன்றிக்கடனை தீர்க்க தன் உயிரையும் கொடுக்க முன்வந்தவள், தன் காதல் அவன் மீது தானே ஒழிய அரியாசனத்தின் மீதில்லை என்ற சபதத்தில் இருந்து வாழும் வரை வழுவாமல் இருந்தவள் … அந்த உத்தமியின் காதல் சாலச்சிறந்தது என்பதில் சந்தேகம் என்ன? ….
முற்றும்..
பொன்னியின் செல்வன் ஒரு அமுத சுரபியை போன்ற நாவல்… எழுதுவதற்கு இன்னும் நிறைய உள்ளன…
எ.கா: 1) மணிமேகலை வந்தியதேவன் மேல் கொண்ட காதல்
2) ஊமை ராணி சுந்தர சோழர் மேல் கொண்ட காதல்
3) பூங்குழலியின் காதல்
4) நந்தினியின் காதல்
இன்னும் நிறைய உள்ளன. காதலை தவிர்த்து மற்ற கண்ணோட்டதிலும் எழுதலாம்.
எ.கா: 1) மணிமேகலை வந்தியதேவன் மேல் கொண்ட காதல்
2) ஊமை ராணி சுந்தர சோழர் மேல் கொண்ட காதல்
3) பூங்குழலியின் காதல்
4) நந்தினியின் காதல்
இன்னும் நிறைய உள்ளன. காதலை தவிர்த்து மற்ற கண்ணோட்டதிலும் எழுதலாம்.
நன்றி.
Wednesday, June 18, 2008
பொன்னியின் செல்வன்-யாருடைய காதல் உயர்ந்தது ? (2)

குந்தவை வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல்
ஆனால் விதி யாரை விட்டது … எந்த நொடியில் அவள் வந்தியத்தேவனைச் சந்தித்தாளோ குடந்தை ஜோதிடர் வீட்டில்… அப்போது தான் அவள் “பெண்மை” பூத்ததை அவளே அறிகிறாள். வியப்பால் அகன்று விரிந்த தன் பெரிய கண்களால் அப்படியே வந்தியதேவனை விழுங்கி விடுவதுபோல் பார்க்கிறாள் … அவனது களை ததும்பும் திருமுகத்தைக்கண்டதும் தன்னையே இழக்கிறாள் … தன்னையும் அறியாமல் மெல்லிய இளம் காதல் துளிர் விடுவதை உணர்கிறாள் …
ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறதே ? அது என்ன ?… பாராளும் மன்னன் மகள் தான், அவனோ ஒரு வழிப்போக்கன் அவ்வளவே … தங்கள் காதல் பொருத்தமானதா என்று மனதுக்கும் , புத்திக்கும் ஒரு பெரும் போராட்டம் அவளுக்குள் தொடங்குகிறது ….
ஆனாலும் மனமே வெல்கிறது … தன்னுடைய நிலையில் இருந்து அவள் ஒரு போதும் இறங்கி வர இயலாது … தனக்கு இருக்கும் பொறுப்புகளை அவள் தட்டிக்கழிக்க முடியாது … எல்லா சாதரண பெண்களையும் போல காதலனே உலகம்… என்று அவனை நினைப்பதையே முழு நேர தொழிலாக (வானதி, மணிமேகலை மற்றும் பூங்குழலி போல்) அவள் செய்ய முடியாது … அதனால் அவள் காதலை மறைத்து வைக்க முயல்கிறாள் … அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறாள் … காதல் வயப்பட்ட தன் மனதை வந்தியத்தேவனிடம் பெரும்பாலும் அவள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை … ஆனால் , சரியான தருணங்களில் , அதை அவள் வெளியிட தயங்கவும் இல்லை … (சிறைச்சாலையில் , பொன்னியின் செல்வனுக்கு ஓலை கொடுத்து அனுப்பும் போது , சின்னப்பழுவேட்டரயரை தேடிச்சென்று திரும்பி வந்து வந்தியத்தேவன் அவளை பார்க்கும்போது … )
ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறதே ? அது என்ன ?… பாராளும் மன்னன் மகள் தான், அவனோ ஒரு வழிப்போக்கன் அவ்வளவே … தங்கள் காதல் பொருத்தமானதா என்று மனதுக்கும் , புத்திக்கும் ஒரு பெரும் போராட்டம் அவளுக்குள் தொடங்குகிறது ….
ஆனாலும் மனமே வெல்கிறது … தன்னுடைய நிலையில் இருந்து அவள் ஒரு போதும் இறங்கி வர இயலாது … தனக்கு இருக்கும் பொறுப்புகளை அவள் தட்டிக்கழிக்க முடியாது … எல்லா சாதரண பெண்களையும் போல காதலனே உலகம்… என்று அவனை நினைப்பதையே முழு நேர தொழிலாக (வானதி, மணிமேகலை மற்றும் பூங்குழலி போல்) அவள் செய்ய முடியாது … அதனால் அவள் காதலை மறைத்து வைக்க முயல்கிறாள் … அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறாள் … காதல் வயப்பட்ட தன் மனதை வந்தியத்தேவனிடம் பெரும்பாலும் அவள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை … ஆனால் , சரியான தருணங்களில் , அதை அவள் வெளியிட தயங்கவும் இல்லை … (சிறைச்சாலையில் , பொன்னியின் செல்வனுக்கு ஓலை கொடுத்து அனுப்பும் போது , சின்னப்பழுவேட்டரயரை தேடிச்சென்று திரும்பி வந்து வந்தியத்தேவன் அவளை பார்க்கும்போது … )

(குந்தவை)
தான் சோழ நாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அவள் வந்தியத்தேவனைப்போல் ஒரு அனாதையைக்காதலிக்கவில்லை … அவன் தனக்கு அடிமை போல் இருப்பான் என்று அவனை மணம் செய்து கொள்ள விரும்பவில்லை … அவ்வளவு சுயநலம் பிடித்தவளும் இல்லை அவள் … ஆனால் சோழ நாட்டின் மீது கொண்ட அன்பால் அவள் கட்டுண்டு கிடந்தாள் … அது அவளே அவளுக்கு இட்டுக்கொண்ட விலங்கு …
பெரிதாக பிரஸ்தாபித்தால்தான் காதல் உயர்ந்ததா என்ன ? இது இரு ஜோடி கண்களின் மௌன கீதம் … ஒரே எண்ணம் உடைய இரு மனங்களினின்று எழும் இனிய ராகம் … அவர்கள் பேசிக்கொள்ளத்தேவை இல்லை … அவர்களின் மனங்கள் இணைந்து விட்டதை அவர்கள் இருவருமே நன்கு அறிவார்கள் … இது ஒரு மென்மையான, மேன்மையான காதல் ….
தொடரும்…
Subscribe to:
Posts (Atom)
