Wednesday, June 19, 2013

அரசியல் எனக்குப் பிடிக்கும்

நூல்: அரசியல் எனக்குப் பிடிக்கும்
நயம்: அரசியல்
ஆசிரியர்:ச.தமிழ்ச்செல்வன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்


அரசியல் எனக்குப் பிடிக்கும். இந்த குட்டி வாக்கியம் சில காலத்திற்கு முன் நான் வாசித்த ஒரு சிறு நூலின் தலைப்பாகும். காரம் குறையாத கடுகை போன்றது தான் இந்த நூலின் தன்மையும். கவனிக்க தக்க இந்த நூல், வாசகனுக்கு தெளிவான விளக்கத்தை உதாரணங்களோடும் சம்பவங்களோடும் மிக சுவாரசியமாக படைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன்.

அரசியல், சமூகம், பொருளாதாரம் எனும் மூன்று கூறுகள் உலக வாழ்க்கையில் எல்லா மாந்தர்களுக்குமான முக்கிய அம்சமாகும். விரும்பினாலும் விரும்பாவிட்டாமும் இவற்றில் இருந்து எந்த ஒரு மனிதனும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. 

இன்றய நிலையில் அரசியல் ஒரு தீண்ட தகாத பொருளாகவே பார்க்கப்படுகிறது. பொது வெளியில் அரசியலின் இருண்ட பக்கம் மக்களிடையே ஒரு கசப்புத் தன்மையை ஏற்படுத்தி உள்ளது. உலகாளாவிய அரசியல் ஆனாலும் அல்லது உள்ளூர் அரசியல் ஆனாலும் அங்கிருக்கும் அரசியல் தன்மை என்பது ஏற்றமும் தாழ்வும் சேர்த்தே விமர்சிக்கப்படுவதை நாம் காணலாம். இதுவே அரசியலின் ஆரோக்கிய தன்மை என்பதாக நான் காருதுகிறேன்.

இப்புத்தகம் கிருஷ்ண பிரபுவால் எனக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு சில புத்தகங்களை வாங்க அவரிடம் உதவி கேட்ட பொழுது இன்னும் சில முக்கியாமாக புத்தகங்களையும் சேர்ந்து அனுப்பி வைத்திருந்தார்.

இந்த புத்தகத்தில் அரசியல் தொடர்பான ஒரு விரிவான பார்வையை வாசகனுக்கு வைக்கிறார் தமிழ்ச்செல்வன். அரசு, அரசியல், அரசாங்கம் என்பதன் விளகங்கள் இந்நூலினை வாசிக்க ஆர்வம் கெள்ள செய்கிறது. 

அரசியல் என சொல்லும் போது உங்கள் கண் முன் தோன்றும் காட்சி என்னவாக இருக்கும்? அரசியல் தலைவரின் முகமோ, அரசின் அலுவலகமோ உங்கள் மனக் கண்ணில் காட்சியளிக்கலாம். அரசியல் கட்சிகள் இல்லாத போதும் அரசாங்கம் நம்மை ஆட்சி செய்தே வருகிறது. 

இராணுவம், காவல்துறை மேலும் இதர அரசு நிர்வாகங்களும் நாட்டின் சட்ட திட்டங்களை பாதுகாக்க வழிவகுக்கிறது. நீதி, நிர்வாகம், இராணுவம், போலீஸ் இதையெல்லாம் நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதில்லை. இருந்தும் நமது விருப்பம், தேர்வுகளுக்கு அப்பால் இரும்புப் பிடியாக நம்மீது இடையறாது ஆட்சி செலுத்திக்கொண்டே இருக்கிறது அரசு என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இதுவே கம்யூனிச முறையில் நமது பார்வை இரண்டே சொல்லுக்குள் அடங்கிவிடுகிறது. ஒன்று இடது சாரி அரசியல் மற்றொன்று வலது சாரி அரசியல். ஆட்சி, அரசு, அரசாங்கம் என்பதை பொய்யாக்கும் ஒரு கோணத்தை கம்யூனிச மேதை கார்ல்மாக்ஸ் குறிப்பிடுகிறார். நாட்டின் சொத்துடைமை அல்லது பொருளாதாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதை அரசியல் நிர்ணயம் செய்கிறது.

அரசியல் என்பதன் கோனங்களையும் ஒரு விரிவான பார்வையையும் நமது புரிதலையும் சுயபரிசோதனை செய்து கொள்ள இந்த நூல் நிச்சயமாக நமது சேகரிப்பில் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

4 comments:

Unknown said...

ஈமெயில் மூலம் படிக்கும் வசதியை ஏற்படுத்தவும்
அ.ஆரிப் திருச்சி.தமிழ் நாடு

VIKNESHWARAN ADAKKALAM said...

Arif

@ நீங்கள் கேட்ட வசதியை செய்து விட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown said...

அரசியல் கட்சிகளின் அறிய வரலாறுகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் http://www.valaitamil.com/politics_history

Dhevendhiran M said...

அருமை