Monday, June 17, 2013

'பிக்கினி' அழகிகளின் சூரிய குளியல்

விரைவு படகில் இருந்து எடுக்கப்பட்ட படம்
சொகுசு கப்பல்களில் பயணம் செய்வதை நான் கொஞ்சமும் நினைத்துப் பார்த்ததில்லை. அதில் பயணம் செய்ய சில ஆயிரம் ரிங்கிட்டுகளையாவது செலவு செய்ய வேண்டும். அது போக அப்படியான சொகுசு பயணங்களில் நாட்டமும் குறைவாகவே இருந்தது. கப்பலில் ஏறி சுற்றி முற்றி கடலை தானே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். 5/6 நாட்கள் செலவளித்து கடலை பார்த்து மறை கழண்டு போக வேண்டுமா என்ற எண்ணமும் இருந்தது.
 
இப்படியாக இருந்த எண்ணத்தில் எனது பணியானது பல திருப்பு முனைகளை ஏற்படுத்தியுள்ளது. நான் பணி புரிந்த கிழக்கு கரை மாநிலத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி வரையினும் தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக சுற்றுலா துறைக்கு விடுப்பு கொடுத்துவிடுவார்கள். இம்மாதங்களில் அதிக அளவில் மழை பெய்யும் . மேலும் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும்.


நீச்சல் குளத்தை ஒட்டிய ‘பார்’ வசதி
கற்றின் அழுத்தம் கூடுவதால் கடல் அலைகள் உயர்ந்து இருக்கும். அக்டோபரின் இறுதிகளில் இதன் தாக்கத்தை காண முடியும். அப்படி ஒரு முறை பயணம் செய்து கடல் மயக்கத்திற்குட்பட்டேன். 'புவி ஈர்ப்பின்’ நிலையின்மையால் இப்படி ஏற்படுவதாக அறிகிறேன். அதிகமான அலைகளின் தாக்குதலுகுற்படும் படகில் இருப்பவர்களுக்கு இப்படி ஏற்படும். மிக மோசமாக கடல் மயக்கத்திற்குட்படுவோர் வாந்தி, பேதிக்கு ஆளாகலாம். அடிக்கடி பயணம் செய்வோர் கடல் மயக்கத்தில் இருந்து தன்னை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள முடியும். ‘NOVOMIN' எனும் மாத்திரை இப்படியான பயண மயக்கங்களை தடுக்க உதவும்.

நீச்சல் குளத்தின் ஒரு பகுதி
மார்ச் முதல் அக்டோபர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருவார்கள். திரங்கானுவில் பயணிகளின் கவனத்தை ஈர்த்த இரு முக்கியமன தீவுகள் ‘ரெடாங்’ மற்றும் ‘ஹெந்தியான்’ ஆகும். மலேசியாவில் நிச்சயமாக பார்க்க வேண்டிய இடங்களில் இந்த இரு தீவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

‘ரெடாங்’ தீவினில் விடுமுறையை கழிக்க செலவு சற்று அதிகமாகும். ‘ஹெந்தியன்’ தீவில் இதை காட்டினும் குறைந்த விலையில் விடுமுறையை கழிக்கலாம். இங்கு வருகை புரியும் பயணிகளில் அதிகமானோர் வெளிநாட்டினர். பள்ளி விடுமுறையற்ற காலங்களில் உள்நாட்டு பயணிகளை காட்டினும் வெளிநாட்டு பயணிகளே அதிகம் இருப்பார்கள்.

ரெமி மார்ட்டின்
‘ரெடாங்’ தீவுக்கு சிங்கபூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து நேரடி விமான போக்குவரத்து உள்ளது. தரை வழி பயணம் மேற்கொள்வோர் ’குவாலா திரங்கனு’ அல்லது ‘மாராங்’ போன்ற படகு துரைமுகத்தை அடைந்து விரைவு படகு ஏறி இந்த தீவுகளுக்குச் செல்ல முடியும். அப்படி பயணிப்பது நிச்சயமாக அதிகமான நேரத்தை எடுக்கும். கரையிலிருந்து இத்தீவை அடைய 2 மணி நேரங்கள் ஆகும். பொதுவாக வெளி மாநிலங்களில் இருந்து தரை வழி பயணம் செய்து வருவோர் தனது அரை நாள் அல்லது ஒரு நாளை அத்தீவை சென்றடைய பயன்படுத்த வேண்டி இருக்கும்.

சுழழுந்து இறங்குமிடம்
STAR CRUISE சொகுசு கப்பல் வாரத்திற்கு இரு முறை தென் சீன கடல் வழி பாதையை பயன்படுத்தும். சிங்கப்பூரில் இருந்து புரப்படும் இக்கப்பல் ‘ரெடாங்’ தீவில் ஒரு நாள் சுற்றுப் பயணிகளுக்காக நிறுத்தப்படும். பிறகு அங்கிருந்து வியட்நாமுக்கு பயணித்துவிடும். ரெடாங் தீவினில் நிறுத்தப்படும் சமயம் அக்கப்பலை பரிசோதனை செய்ய சில அதிகாரிகளுடன் செல்வேன்.


13 மாடிகள் கொண்ட இக்கப்பலில் கிடைக்காதது எதுவும் இல்லை என்ற இரகத்தில் தான் அமைத்திருக்கிறார்கள். மலேசிய கடல் எல்லையில் இமிகிரேஷன் சோதனைகள் முடிந்தவுடன் அதன் பயணிகள் ரெடாங் தீவின் கடற்கரைகளுக்கு விரைவு படகேறி செல்வார்கள். இக்கப்பலில் இருக்கும் போது ஒரு 5 நட்சத்திர விடுதியில் இருப்பதை போலவே நீங்கள் உணர்வீர்கள். அதன் சன்னலின் வழி எட்டி பார்த்தால் மட்டுமே நீங்கள் கடலில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். இதன் 13-வது மாடியில் ஒரு நீச்சல் குளமும் அதனை ஒட்டிய ‘பார்’ வசதியும் இருக்கும். அதே போல் அதன் இடது பக்கம் கூடை பந்து மைதானமும், சுழழுந்து இறங்கும் இடமும், சிறிய ’கோல்ப்’ மைதானமும் இருக்கும்.


மீன்களுக்கு தீனியிடும் சிறுவன்
இந்த கப்பலின் முக்கிய அம்சமாக சூதாட்டமும் உள்ளது. அது போக அரை நிர்வான நடனங்களும், கேலிக்கை விளையாட்டுகளும் இன்னும் பிற மேட்டுக்குடி வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. பணி நிமித்தம் வரும் அதிகாரிகளுக்கு இலவச தங்கும் அறையும், உணவும் கொடுக்கப்படும். கப்பலில் இருக்கும் வணிக பொருட்களை வாங்கினால் சிறப்பு கழிவும் உண்டு. இதில் என்னை கவர்ந்தது வாசனை திரவியங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிய வாசனை திரவியங்கள் மிகையாகவே சேர்ந்துவிட்டது.


விமான பயணம் செய்து இங்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் முதலிடம் வகிப்பது இந்தாலி மற்றும் இங்கிலாந்துகாரர்கள். வெகுவான எண்ணிக்கையில் ஜப்பானியர்களும் வருகை புரிகின்றனர். பெர்ஜாயா விடுதி வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய புகழிடமாக உள்ளது. இதன் கடற்கரையும் விடுதியினால் நிர்வகிக்கப்படுகிறது. தனியாரினால் நிர்வகிக்கப்படும் கடற்கரை நெடுகினும் வெளிநாட்டு பயணிகள் குப்புர படுத்து சூரிய குளியல் எடுக்கிறார்கள்.


எழில் மிகு கடற்கரை
ரெடாங் தீவின் கடற்கரை மிக மிக எழிலாக அமைந்துள்ளது. மூன்று பக்கம் மலைகள் சூழ்ந்திருக்க கடல் நீர் கிரிஸ்டல் கற்களை போல் மின்னுகிறது. உலர்ந்த வெள்ளை மணல் இள நீல வண்ண கடல் நீருக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

கடல் குளியலை தவிர்த்து, ஸ்னுர்கலிங், டைவிங் நடவடிக்கைகள் இங்கு பிரபலம். நீச்சல் தெரிந்தவர்கள் மீன்களுக்கு தீனி போட்டு அவற்றோடு நீந்தி இரசிக்கலாம். டைவிங் தெரிந்தவர்களுக்கு பல வண்ண கோரல்களை ஆழ்கடலில் மூழ்கி இரசிக்க வாய்ப்பு கிட்டும்.
படகு துரை

கப்பலின் மேல் மாடி நீச்சல் குளம்












இரவு வேளைகளில் ‘லாங் பீச்’ எனும் பகுதி குதுகல மனிதர்களின் கூச்சலில் கலைகட்டும். ஆடல் பாடல் என கடற்கரையோர மதுபான கடைகளில் விருந்துண்டு மகிழ்கிறார்கள். இந்த மாதிரியான கடல் நடவடிக்கைகள் 8 மாதங்கள் மட்டுமே ரெடாங் தீவினில் நடைபெறுகிறது. எதிர் வரும் நான்கு மாதங்கள் காற்றும் மழையுமாக இத்தீவு தன்னை தானே சுத்தம் செய்துகொள்கிறது. 

பயணங்கள் தொடரும்... 

1 comment:

A N A N T H E N said...

பெர்ஹெந்தியான் தீவு மீது பல காலமாக ஆர்வம். வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக போய்ட்டு வரனும்.
நீச்சல் தெரியாட்டி அந்த கடற்கரையில குளிக்க முடியாதோ? ரொம்ப ஆழமா?