Thursday, October 14, 2010

கொசுறு 14-10-2010

ஃபிகரோடு கோவிலுக்கு போவது நெகட்டிவ் அப்ரோச்,
ஃபிகர் பார்க்க கோவிலுக்கு போவது பாசிடிவ் அப்ரோச்,
- என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
****
நெடுநாட்களாக விடுபட்டிருக்கும் பாகம் இது. நேரம் கிடைக்கும் போது எழுதுவதற்கு சுலபமாக அமைவதும் இந்த பகுதி தான். காரணம் இப்பகுதியில் தகவல் திரட்டுகள் குறைவு, யாவும் என் சிந்தனை பகிர்வுகளாக அமைகின்றன.

நாம் படிக்கும் சில கவிதைகள் நமக்குள் டக்கென ஒரு ஃப்ளாஸ் அடிச்சிட்டு போகும் பாருங்க அம்மாதிரியான கவிதைகளே எவ்வளவு நாட்களுக்கு பிறகு படிச்சாலும் புதிதாக படிப்பதை போலவே அனுபவத்தை கொடுக்கும். கற்றது தமிழ் எம்.ஏ எனும் திரைப்படத்தில் வரும் ஒரு கவிதையை கீழே கொடுத்திருக்கிறேன்:

புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரர்

என்னிடம் இருந்து பறிக்கிறார்

பூனை வளர்க்கும் சுதந்திரத்தை


வாசிப்போரின் புரிதலுக்கு ஏற்ற மாதிரி இக்கவிதை வேறுபடலாம். நியூட்டனின் விதியை இதில் காண முடிகிறது. ஒரு செயலுக்கான எதிர்வினை. மற்றது வண்ணத்து பூச்சியின் விளைவு. பட்டம்பூச்சி சிறகடிப்பிற்கும் சுனாமி வருவதற்கும் ஒற்றுமை இருப்பதாக சொல்வார்களே, அதைப் போல். ஒபாமா சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கணத்திலும் உங்கள் பாக்கெட் பணம் காலியாகி கொண்டிருக்கிறது. புரிஞ்சவன் தான் புத்திசாலி.
****

பிக் பேங் தியோரி பற்றி ஏற்கனே எழுதி இருக்கிறேன். பிரபஞ்ச விளைவுகள் தொடர்பான கட்டுரைகள் பலவும் டாக்டர். ஜெயபாரதன் இணையத்தில் எழுதி வருகிறார். இவரின் பல கட்டுரைகள் புரிதலுக்கு சற்றே சிரமமானதாக இருக்கிறதெனினும் இப்படியான தகவல் களஞ்சியத்தை நமக்கு தொகுத்தளித்திருப்பது சிறப்பு.

Dark Matter என்பதை அண்ட சராசரத்தின் மாபெரும் அமைப்பு என்பதாக விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள். இன்றய டெக்னாலஜியின் துணைக் கொண்டு இதனை அறிந்துக் கொள்வதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 2012க்கு இன்னும் ரெண்டு வருஷம் தானே இருக்கு அதுக்குள்ளாவது இதை பற்றி நாம் அறிந்துக்கொள்ள முடியுமா?
****
ஓரிரு மாதங்களுக்கு முன் நான் வித்யா எனும் திருநங்கையரின் சுயசரிதை புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. லிவிங் ஸ்மைல் எனும் வலைபதிவின் உரிமையாளரான இவரின் புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. திருநங்கையர் தொடர்பான புத்தகங்கள் தமிழில் வெகு குறைவானவையே. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் மத்தியில் விளிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் ஊடகங்கள் முயற்சித்து வருகின்றது. நல்ல விசயம் தான்.

என்னுள் எழுந்த சில சந்தேகங்களை இங்கு முன் வைக்கிறேன். தனது பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன், பிச்சை எடுத்தாவது தனது பாலியல் மாற்றத்தை செய்துகொள்ள நினைக்கும் வித்யா அது நடந்த பின் திருநங்கையர் பிச்சை எடுக்கக்கூடாது அங்கீகாரம் வேண்டும் எனும் புரட்சிகர பெண்மணியாகிவிடுகிறார். அது தவறென சொல்லவில்லை. அச்சிந்தனை அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவருக்கு தோன்றாமல் போன காரணம் என்ன? தன்னை மற்றவர் அவமானபடுத்திவிடக்கூடாது என்பதற்காகவே திருநங்கையர் அருவறுப்பாக நடந்துக் கொள்கிறார்கள் என சொல்கிறார்.

தன் இனத்திற்கு இழுக்கு செய்கிறார்கள் என்பதற்காகவே ஆண்கள் திருநங்கையரை கேலி செய்கிறார்கள். நம்புங்கள் இதுவும் உண்மை தான்.
******

மனித கடத்தல் தொடர்பான எனது தகவல் சேமிப்பின் போது படிக்க நேர்ந்த ஒரு செய்தி. ஒரு ஆண், ஒரு பெண்னை திருமணம் செய்துக்கொள்வதென்றால் கடத்திச் சென்றுவிட வேண்டுமாம். பிறகு அந்த ஆணின் பெற்றோர் கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடையே அனுமதி கேட்டு திருமணம் செய்து வைப்பார்களாம். இது ஒரு நாட்டில் ஓர் இனக் குழுவினரிடையே நடக்கும் செயல். என்ன நாடு என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
*****

தமிழ்த்திரையுலகில் மாற்றங்களை அமைத்தவர்கள் எனும் பட்டியலில் மணிரத்தினமும், ஷங்கரும் இடம் பெற்றிருப்பவர்கள். ஒரு படைப்பாளியிடம் அதீத எதிர்ப்பார்ப்புகள் இயல்பாகவே எற்படும். அதுவே பலரையும் ஏமாற்றமடையவும் செய்கிறது. மணிரத்தினத்தின் இராவணன் படம் வரும் முன்பும் சரி வந்த பின்பும் அதன் பால் எனக்கு அதீத ஈர்ப்பு ஏற்படவில்லை. பல படங்களில் இருட்டு இயக்குநராக இருந்த மணி, இராவணனில் ஐஸை மழையில் கரையவிட்டு ஜில் ஜில் இயக்குநராக மாறி இருக்கிறார்.ஷங்கரின் சிவாஜி படம் எதிர்ப்பார்த்த அளவில் இல்லை என்றாலும் ஏமாற்றத்தை கொடுக்கவில்லை. அரைத்த மாவு ருசியாகவே இருந்தது. சமீபத்திய ரோபோ மிக சாதாரண கதையம்சம் கொண்டது. ஹாலிவுட்டில் இது சென்ற நூற்றாண்டில் சிந்தனை வடிவம். அதை தமிழ் சினிமா இப்போது தான் எட்டிப்பிடித்திருக்கிறது என்றால் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு காட்சியையும் ஒரு வாரம் சிந்தித்து படம் பிடித்திருப்பார்கள் போல. கொள்ளை அழகாக உள்ளது. பின்நவீனதுவ வியாதிகள் என்னத்தான் கீபோர்ட் உடைய தட்டச்சு செய்தாலும் படத்தின் வெற்றியை தவிர்க்க இயலாது. ஏன் அவர்கள் கூட படத்தின் குறையை கண்டுபிடிக்க இரண்டு மூன்று முறை ஓசி டிக்கட்டில் படம் பாத்திருக்கலாம். நல்ல வேலை காசு கொடுத்து பார்த்திருந்தால் தியேட்டரை எழுதி கொடுக்க சொல்லி இருப்பார்கள் போல.
****

சென்ற ஆண்டின் இறுதில் வேலை நிமித்தம் திரெங்கானு எனும் இப்பொழுது இருக்கும் மாநிலத்துக்கு வந்தேன். இங்கு வருவது அதுவே முதல் முறையும் கூட. தெரிந்தவர் அறிந்தவர் என யாரையும் தெரியாது. தங்கியிருப்பது கவர்மெண்ட் குவாடர்ஸ். வந்த முதல் நாளே இரவானால் ஏதோ கோலி விளையாடுவதாகவும், நாட்காலியை பரபரவென இழுப்பதாகவும், துணி துவைப்பதாகவும் சந்தம் கேட்கும் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தூங்கு என சொன்னார்கள்.

எவ்வளவோ ஆச்சு இதையும் பார்க்கலாமென இருந்துவிட்டேன். கிட்டதட்ட ஓர் ஆண்டு காலமாக போகிறது எந்த சத்தத்தையும் கேட்டதில்லை. நேற்று மலாய் நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். என் பதவியில் இருப்பவர். இந்தோனேசியாவின் மலேசிய தூதரகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு வந்திருக்கிறார். வந்ததும் நான் இருக்கும் இடத்தில் டிரான்ஸ்வர் போட்டிருக்கிறார்கள். இரவானால் உன் வீட்டில் ஏதும் சத்தம் கேட்கிறதா என கேட்டார். இல்லை என்றேன். ஏதோ தவறாக இருப்பதை உணர்கிறேன் என்றார். நான் ஏதும் சொல்லவில்லை. அதுதான் நல்ல பொறுமைசாளிக்கு அழகுனு குருநாதர் சொல்லியிருக்கார்.

பேய் பிசாசுகள் இருப்பதாக சொல்பவர்களே அதிகமான கடவுள் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள்.
*****
மழைகாலம் ஆரம்பித்துவிட்டிருக்கிறது. என் பணியிட மாநிலத்தின் தீவுகளை நான்கு மாதங்களுக்கு சுற்றுலா தடா செய்யப் போகிறார்கள். இந்த நான்கு மாதங்களில் தான் இந்தத் தீவுகள் தன்னை சுத்தம் செய்து கொள்கிறதோ என சிந்தித்ததும் உண்டு. கடந்த ஒரு வாரமாக மாலை வேளைகளில் மழை பொழிகிறது. இங்கு வந்த சமயம் எப்போது நான் வெயில் காலத்தை காண்பேன் என்றிருந்தேன்.

மீண்டும் மழை வந்துவிட்டது. மழைச் சமயங்களில் இயல்பாகவே சாலையில் கார்களின் எண்ணிக்கையும் அதிகமிருக்கும். டிராபிக் லைட். பார்க்கிங் தேட வேண்டும். இதனால் வேலைக்கு மோட்டார் செலுத்துவதையே விரும்புவேன். தற்போதய சூழல் என் காலை தூக்கத்தின் பல நிமிடங்களை விழுங்கிவிட்டது.
****

விடுகதை:
புல்வெளி பகுதி ஒன்றில் சில ஆடுகளும் கோழிகளும் உள்ளன. இவற்றின் தலைகள் மொத்தம் 20. கால்கள் 50. அப்பகுதியில் எத்தனை ஆடுகள் உள்ளன?
******

நளதமயந்தியின் சுயம்வரம் காண்டத்தில் உள்ள வெண்பா ஒன்று:

‘அஞ்சல் மடவனமே! உன்றன் அணிநடையும்
வஞ்சி அனையார் மணிநடையும்-விஞ்சியது

காணப் பிடிததுகாண்,’ என்றான் களிவண்டு

மாணப் பிடித்தார் மன்

அடுத்ததாக இன்னொன்று தருமிக்கு இறையனார் எழுதி கொடுத்தது:

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே


முதல் பாடலில் நளன் ஓர் அன்னத்தைப் பிடித்து, அன்னமே உன்னைவிட அழகிய நடை கொண்ட பெண் உலகில் உண்டோ என கேட்கிறான். இரண்டாம் பாடலில் காதலியின் கூந்தல் மனத்தைக் காட்டினும் மனம் மிக்க பூ உள்ளதோ என காதலன் தும்பியிடம் கேட்கிறான். லூசு பசங்களா இருப்பாங்களே. அந்த காலத்திலயும் ஒரு மார்கமாதான் சுத்திக்கிட்டு இருந்திருக்காங்க பாருங்களேன்.

****

14 comments:

மனோவியம் said...

நீண்ட நெடிய எழுத்துப் படிவம். நீங்களும் ஒரு மார்க்கமாதான் எழூதியிருக்கிங்க...சில விஷயங்கள் அருமை.

thiyaa said...

சூப்பரா இருக்கு

மாதேவி said...

"கொசுறு" நிறைந்த தகவல்கள்.

வெண்பூ said...

ந‌ல்லாத்தான் இருக்கு கொசுறு...

உங்க‌ புதிருக்கு ப‌தில் 15 கோழி + 5 ஆடு...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மனோகரன்

என்ன மார்க்கம் பாஸ்... சொல்லுங்க... சொல்லுங்க...

@ தியா

நன்றி மீண்டும் வருக...

@ மாதேவி

நன்றி... :)

@ வெண்பூ

செல்லாது செல்லாது... வழிமுறைய காட்டுங்க...

வெண்பூ said...

அட‌ விக்கி, ரொம்ப நாளாச்சேன்னு டிரை ப‌ண்ணினேன்..

கோழி எண்ணிக்கை X வெச்சிக்குவோம். ஆடு Yந்னு வெச்சிக்குவோம். கோழி ஆடு ரெண்டுக்கும் ஒரே த‌லைதான்.
அத‌னால‌
x+y = 20

கோழிக்கு ரெண்டு கால், ஆட்டுக்கு நாலு.. அத‌னால‌

2x+4y=50

சால்வ் ப‌ண்ணினா கிடைக்குது.. :)

VIKNESHWARAN ADAKKALAM said...

முடியாது... முடியாது... சின்ன பசங்களுக்கு புரியற மாதிரி சொல்லுங்க...

வெண்பூ said...

யோவ் போய்யா... :))))

☀நான் ஆதவன்☀ said...

கொசுறா இது? முழுச்சாப்பாடு :)

நட்புடன் ஜமால் said...

ஆதவன் சொன்னதையே
நானும் சொல்லிக்கிறேன்

A N A N T H E N said...

aadu 5, kozhi 15... aadu pasicha kozhi saapidumaa???

கிஷோர் said...

நீண்ட நாட்கள் கழித்து பதிவுகள் பக்கம் வந்திருக்கிறேன். நன்றாக இருக்கிறது நண்பா :)

மீனாட்சி சுந்தரம் said...

அண்ணே வெண்பா நல்லாயிருக்கு

அதற்கு இன்னும் சிறப்பான பொருளுரை எதிர்பார்க்கிறேன்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆதவன்

நன்றி பாஸ் :)

@ ஜமால்

நன்றி.

@ அனந்தன்

வழிமுறை காட்டுங்க. பதில் மட்டும் ஏற்கப்படாது :)

@ கிஷோர்

நன்றி தோழர். :)

@ மீனாட்சி சுந்தரம்

தம்பீ... நல்லாருக்கியாப்பா? வச்சிக்கிட்டா வச்சகம் பண்ணுறோம். நமக்கு தெரிஞ்சது அவ்வளோதான் :)