Thursday, June 12, 2008

மறந்து போன கவிதைகள்


உன்னை பார்த்து
கொண்டிருப்பதால் தானோ
இதயம் தினமும்
துடித்துக் கொண்டிருக்கிறது
என் இதயத்திற்கு
உயிர் மட்டும் இல்லை
விழிகளும் இருக்கிறது
உன் இதயத்தை
பார்த்துக் கொண்டே இருக்க

கவிதைகள் எழுதிடத்தான்
கைகள் துடிக்கின்றன
எழுதிட நினைத்தவுடன்
கவிதைகள் மறந்து போகின்றன
நினைத்த கவிதைகள் மறந்து போனாலும்
கனவில் தோன்றிய
உன் கவிதை கொண்ட கண்களை
மறக்கவும் முடியவில்லை
மறைக்கவும் முடியவில்லை

4 comments:

Anonymous said...

கவிதை மறந்திடிச்சுன்னா, இது என்ன? ;)

பாராட்டுக்கள் :)

VIKNESHWARAN ADAKKALAM said...

//Thooya said...
கவிதை மறந்திடிச்சுன்னா, இது என்ன? ;)

பாராட்டுக்கள் :)//

மறந்து போச்சுதான் ஆனா மறுபடியும் வந்துடுச்சு.

அகரம் அமுதா said...

கவிதை அருமை வாழ்த்துக்கள்!

VIKNESHWARAN ADAKKALAM said...

//கவிதை அருமை வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி...