Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Monday, April 13, 2009

இலங்கையைச் சாம்பலாக்கு

தமிழினம் அழுகிறது அனுமனே
உன்
வால் சுமந்த தீயினாலல்ல
இலங்கையை எரியூட்டாததால்

நிழல் கூட
தலைதெரிக்க ஓடுகிறது
அகதியாக அல்ல
மரணத்தில் விடுதலை தேடி


முக்கால அழுகுரல் இன்னும்
முழுதாய் ஓயவில்லை
சமுத்திர திட்டமாம்
பாலத்தில் பிரச்சனையாம்
சாகிற மக்களுக்காய்
உண்ணாமல் போராட்டமாம்
யாரை நம்ப
?

எங்கே
உன் வாலைக் கொடு
தீயிட்டனுப்புகிறேன்
இம்முறேயேனும் மிச்சமின்றி
இலங்கையைச் சாம்பலாக்கு


கருத்துப்படம்: நன்றி வினவு.காம்