வரலாற்றில் முதல் முறையாக வட துருவம் ஒரு தீவாக உருமாறி வருவதாக அண்மைய தகவல் கூறுகிறது.சமீபத்தில் 'நாசா'வால் சில தொலை நோக்கு புகைப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அப்புகைபடங்களின் அடிப்படையில் ஆராயப்பட்ட சில தகவல்கள் திடுக்கிடும் வண்ணம் உள்ளன. வட துருவத்தில் உறைந்து இருக்கும் பணிக்கட்டிகள் பெரும்பான்மையாக உருகிவிட்டன.
மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த அதீத பாதிப்பு எப்படி பட்டது தெரியுமா? அதாவது ஆர்டிக் பணி படலத்தை ஒரு சுற்றில் வலம் வந்துவிடும் அளவில் உள்ளது.
கவலை தரும் இச்செய்தி சில பன்னாட்டு கப்பல் நிறுவனங்களின் காதில் தேன் வார்த்துள்ளது. இம்மாறுதலினால் நெடுந் தூர பயணங்களை சுருக்கிக் கொள்ள முடியும். இதனால் எரி பொருள் மற்றும் நேரமும் மிச்சப்படுமென மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.
அறிவியல் வல்லுநர்கள் இது பூமிப் பந்தை நாசப்படுத்த ஏற்பட்டிருக்கும் ஒரு கண்டமெனவே கருதுகிறார்கள். இதனால் ஒட்டு மொத்த பூமிக்கும் பாதிப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது என கருத்துரைக்கிறார்கள்.
புவி வெப்பத்தைப் பற்றிய விழிப்புணர்வுகள் நெடுங்காலமாக நடத்தியும் மனித குலத்தினரிடையே அது எடுபடாமல் போயிருப்பது மிகவும் வேதனைக்குரியதே. இனியும் நாம் செய்யப் போகும் தவறுகள், நமக்கே நாம் பறித்துக் கொள்ளும் சவக் குழி என்பதை அறிந்து செயல்பட்டால் நன்மை பயக்கும்.பணிகட்டிகளின் ஆராய்ச்சி நிபுணரான மார்க் சீரீஸ் கூறுகையில், இப்போது எற்பட்டிருக்கும் மாற்றமானது சரித்திரத்தில் முக்கிய அங்கமெனவும், மனிதர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
125000 வருட பூவியியல் வரலாற்றில் முதன் முறையாக அட்லாந்திக் மற்றும் பசிஃப்பிக் கடல் பகுதிகள் ஒன்றென கலந்து சந்தித்துக் கொள்ளப் போகிறன. கரை பகுதிகள் மேலும் கரைந்து போக போகின்றன. இப்பாதிப்பு சூனாமியின் பாதிப்பை விட மோசமானதாக இருக்குமோ?