Showing posts with label பாசம். Show all posts
Showing posts with label பாசம். Show all posts

Saturday, November 08, 2008

பாசமும் பற்றி மற!!!


கண்ணீர் விட்டது போதும்
தேசம் நீரில் மிதப்பதை பாரும்
வெண்ணிற மலர்கள் தேடும்
பாசம் தேனினும் உயர்வது கேளும்

தாயிடம் பெற்ற பாலினில் பாசம்
தந்தை தந்திட்ட அறிவினில் பாசம்
சேயாய் உன்னை அனைத்து
செர்க்கம் புவியினில் தந்தது பாசம்

அண்ணன் தம்பியாய் வாழ்வில்
அழியா நட்பைக் கொண்டே
பண்பாய் பாரினில் வளர
பழியா உணர்வும் பாசம்

புதியதோர் உலகம் செய்ய
பாயும் நதியாய் நேசம் பிறக்க
புவி மாந்தர்க்கு வேண்டும் பாசம்
தேயும் நிலவாய் பண்பிருப்பின் நாசம்.

Sunday, July 06, 2008

ஒரு தாயின் மனம்


நினைவுகளை சுமக்கிறாள்
ஒரு தாய்!
பசிக்கு அழுதிடுவானோ
எனக் கனவு
கலைந்த
பச்சை உடல் காலம்!
விளையாடுகையில்
விழுந்திடுவானோ எனப்
பதறிய மாலைப் பொழுதுகள்!
தேர்வுக்காகத்
தேக்கி வைத்த
தூக்கத்தோடு
தேனீர் கலக்கிய இரவுகள்!
கல்லூரியில்
சேர்த்த போது
கண் கலங்கிய
இள நரைக் கிழவி,
திருமணம் செய்வித்து
கடமை முடிந்த
நெகிழ்ச்சியில் திளைந்திருந்தாள்!
இன்று அவள்
இறுதி மூச்சை
சுவாசிக்க மறந்து போனாள்
முதியோர் இல்லத்தில்.