Wednesday, July 22, 2009

நானும் டெரர் தான்... ஜீப்புல ஏறிக்கிறேன்... பார்த்துக்கோங்க...

ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் ஐயர் கடைக்கு ‘டீ’ அடிக்கப் போனேன். ஐயர் கடை டீ மிகவும் சுவையாக இருக்கும். ஐயர் இந்தியாவில் இருந்து தேத்தூள் இறங்குமதி செய்து டீ போடுறாராம். ஒரு டீ அடிச்சா அதை முடிக்கறதுக்குள்ள அடுத்த டீக்கு ஆடர் கொடுத்துடுவவீங்க. ஐயர் கடை டீக்கு அப்படி ஒரு ‘இம்ம்ம்ப்ப்ப்’ இருக்கு.

அன்று டீ குடிக்க சென்ற போது கொஞ்சம் தள்ளி இருந்த மேசையில் ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்து தலையசைத்து சிரித்தார். யாரென தெரியாமல் என் மூளையை கசக்கியபடி நானும் சிரித்து வைத்தேன்.

”விக்னேஷ் தானே?” ஆமாம் என்றேன்.

”நான் மனோகரன். நீங்க பிளாக் எழுதுவீங்க தானே?” என்றார். சிரித்துக் கொண்டே ஆமாம் என்றேன்.

டீ வந்ததும் அருந்திக் கொண்டிருந்தேன். அவர் சாப்பிட்டுவிட்டு கைகழுவிட்டு வந்தார். என்னிடம் கைகுழுக்கிவிட்டு பேசினார்.

“ரொம்ப நல்லா எழுதுறீங்க சார். உண்மைய சொல்லனும்னா நீங்க எழுதுறத பார்த்து தான் எனக்கும் எழுதனும்னு ஆசையே வந்துச்சு. மனோவியம் என் பிளாக்கு தான். ஒவ்வொரு பதிவும் வித்தியாசமா எழுதுறீங்க. படிக்க நல்லா இருக்கு. இன்னும் நிறைய எழுதனும் நீங்க. எனக்கு எழுத சிரமமா இருக்கு சரியா எழுத முடியல. நிறைய படிக்கனும்” என்றார். ”ஆர்வம் இருந்தால் நிச்சயம் எழுதலாம் சார். தொடர்ந்து எழுதுங்கள்” என்றேன்.

மகிழ்ச்சியோடு அவரிடம் விடைப்பெற்றுவந்தேன்.

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....

*******************

பிரபாகரன் தீவிரவாதி ஒசாமா போராட்டவாதி என ஒரு பதிவு எழுதி இருந்தேன். இஸ்லாமிய சகோதரர் ஒருவர் வெகுண்டெழுந்து இஸ்லாத்தை நீ புரிந்துக் கொள்ளாமல் பேசிவிட்டாய் என கேள்விகளை அடிக்கி வைத்து ஒரு மின்மடல் அனுப்பி இருந்தார். அதில் நான் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளும் பொருட்டு சில தொடுப்புகளையும் கொடுத்திருந்தார்.

சகோதரர் எனது பதிவை தொடர்ந்து படிக்கிறாராம். அவர் மத தீவிரவாதம் கொண்ட ஆள் இல்லையாம். என் கட்டுரையில் உண்மை இல்லாததால் மடல் எழுதி இருக்கிறாராம். ஏன் அந்த கட்டுரைக்கு மட்டும் என புரியாமல் பல நாள் தூக்கம் இழந்து தவித்து போனேன். சகோதரருக்கு பதில் கொடுக்க விரல்கள் துருதுருத்துக் கொண்டிருக்கின்றன.

நானே எனக்கு ஆப்படித்துக் கொள்ள முடியுமா? யாராவது எனக்கு வெளிநாட்டில் ஒரு வேலையும் பாதுகாப்பும் தருவதாக இருந்தால் சொல்லவும் வகை வகையாக பதில் எழுதுகிறேன்.

மன்னிக்கவும் சகோதரர் சபீர் கான் உங்கள் கேள்விக்கான பதில் சொல்ல முடியாமல் மீளா துயரத்தில் வாடுகிறேன். மின்மடலில் ‘think first' என நீங்கள் போட்டிருந்த தலைப்பை மிக இரசித்தேன். இஸ்லாமிய நாகரீக கல்வியில் நான் சிறப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறேன். அதனால் நீங்கள் அனுப்பிய தளங்கள் எல்லாம் சுத்த ’வேஸ்ட்’. ஏன் நேரத்தை வீணாக்கிக் கொள்கிறீர்கள். போய் புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாருங்க.

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....

*****************

ஒரு இலக்கிய சந்திப்பில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு லேகியம்... மன்னிக்கவும்... இலக்கியம் தெரியாது என்றாலும் கார வடையும் கோப்பி தண்ணியும் இலவசமாக கொடுப்பதாக கூறி இருந்ததால் நிச்சயம் கலந்துக் கொண்டே ஆக வேண்டும் எனும் ஆளாதியான எண்ணம் கொந்தளிக்க இனிதே கலம் கைகொடுக்க கலந்துக் கொண்டேன். மேற்கானும் வாக்கியம் லேகியம் பிசகாமல் வந்திருக்கிறதா என சங்க இலக்கியங்களை எடுத்து சரி பார்த்துக் கொள்ளவும்.

ந என ஆரம்பிக்கும் நான்கெழுத்து தோழர் பத்திரிக்கையின் ( அட எனக்கும் கிசுகிசு எழுத வருது) ஆசிரியர் ஒருவர் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசலானார். எனது வெறு வாய்க்கு அவில் கொடுத்தமைக்கு நன்றி. இலக்கியம் அப்படி இருக்கனும். எதிர்காலத்துல வெள்ளைக்காரன் ஆராய்ச்சி பண்ணினா நம்ம மொழி நாசமா போய்டும் (எதிர்கால வெள்ளைக்காரனுக்கு இப்பவே வாய்ப்பு கொடுத்துட்டாரு). மரபு படிங்க. என பேசி ஒரு சில சங்க பாடல் வரிகளைச் சொல்லி சிலாகித்துக் கொண்டார்.

அவர் பேசி முடிந்ததும் அவர் வேலை செய்யும் பத்திரிக்கை தர்மத்தை எடுத்துரைத்தேன். நான் அனுப்பிய கட்டுரை மற்றும் சிறுகதைகளில் உள்ள எழுத்துப் பிழைகளைக் கூட உங்கள் பத்திரிக்கை சரி செய்ய முற்பட்டதாக தெரியவில்லை. ஆசிரியரிடம் விசாரித்தால் நீங்கள் கவனமாக எழுதி அனுப்ப வேண்டும் என்கிறார். இதை பற்றி வலையில் எழுதிவிட்டால் புரக்கணிப்புகள் ஏற்படுகின்றன. இதை என்ன சொல்வதென்றேன்.

நான் இப்போது பத்திரிக்கையில் வேலை செய்பவன் அல்ல என்ற முறையில் பார்த்தால் மிகவும் வருந்துகிறேன் என சொல்லி உள் நடக்கும் சில ஆமை கதைகளை சொன்னார். அது நமக்கு தேவையற்றது. முதலில் நம்மைச் சுற்றியுள்ள சூழலை கவனிக்க வேண்டும். அதைவிட்டு நீ இப்படி எழுதனும் இதை செய்யனும் என ஊருக்கு உபதேசம் செய்வது, தமிழ் நலம் காக்கும் ஆசான் தம் பிள்ளையை மலாய் பள்ளிக்கு அனுப்பிய கதையாக தான் இருக்கிறது.

மேலும் அவர் சொன்ன ஒரு விடயம் கொச்சையாக எழுதாதீர்கள் என்பது. இந்த கொச்சை வார்த்தை, கச்சை வார்த்தை எல்லாம் எப்படி தீர்மானிக்கிறீர்கள் தெரியவில்லை. பட்டிணத்தார் பாடல்களில் இல்லாததையா இப்போது எழுதப்பட்டுவிடுகிறது. புரியவில்லை...

சரி அதை விடுவோம், கூட்டம் முடிந்ததும் என்னிடம் சொன்னார். உள்ளுக்குள் வேலை அப்படி. நாம தான் கவனமா இருக்கனும் என முன்பு சொல்லியவரை போலவே சொன்னார். அச்சமயம் அவர் பத்திரிக்கை ஆசிரியராக மாறிவிட்டார். இவருக்கு அடிக்கடி அந்நியனாகும் நோய் இருக்கிறது. என் உயிருக்கு ஏதும் ஆபத்தாகிவிடுமோ என நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பேராசிரியர் அவர்கள் எனது வலைப்பதிவை பார்வையிடுகிறார் என அறிய முடிகிறது,

பாதியில் கலந்துக் கொண்டாலும் அவர் உரை இரசிக்கும் படியாகவே இருந்தது. சில கருத்து முரண்பாடுகளும் எனக்கு இருக்கவே செய்கிறது. அவர் இறுதியாக சொன்ன ஒரு விடயம்: பத்திரிக்கையை நாம் அனுசரித்து போக வேண்டும் என்பது. இதில் கிஞ்சித்தும் உடன்பாடுகிடயாது. இதை நான் விளக்கவும் தேவை இல்லை என்று கருத்துகிறேன்.

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....

******************************
சமயமெனும் சாக்கடை உலகம் எனும் எனது கட்டுரைக்கு வந்த ஓர் எதிர்பதிவு:

ஆரம்பக் கால ஆசிரியரை
'இடி அமீன் வாத்தி'என
நினைவு கூர்ந்தார்
பட்டதாரி எழுத்தாளர்
இதுவா பண்பு
இதுவா நன்றிக்கடன்
வலைபகுதியில்
எப்படி வேண்டுமானாலும்
எழுதலாமா - சுகந்தினி (மேலும் படிக்க இங்கே சுட்டவும்)

ஆசிரியர்களை அவ்வரி பாதித்திருந்தால் பொறுத்தருள வேண்டும் அதை மாற்றி விட்டேன்.

நன்றி
விக்னேஸ்,
எழுத்து வேகம்,
விவேகம், வியூகம்
உம்மிடம் கண்டேன்
இனிய தமிழ்ச் சொற்களைப்
பயன்படுத்தினால்
உம் கிறுக்கல்கள்
மேலும் சிறப்படையும்
தொடரட்டும் உம் பணி.

கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு தவறுகளை பார்க்கிறீர்கள். ம்ம்ம் ஆகட்டும்....

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....
*****************

நண்பர் அப்பாவி முரு எனக்கு விருது வழங்கி இருக்கிறார். அவரது அன்புக்கு மிக்க நன்றி.

மற்றவர்களுக்கு விருது வழங்கும் அளவுக்கு நான் இன்னும் வளராததால் தற்சயம் என் வசமே இருக்கட்டும். இதுவும் கொஞ்சம் கொஞ்சம் 32 கேள்வி தொடர் விளையாட்டு மாதிரியே இருக்கு.

என்னை வச்சு காமிடி கிமிடி பண்ணலையே?

நானும் விருது வாங்கிட்டேன்.

(பிற்சேர்க்கை: எனக்கு இவ்விருதை வழங்கி இருக்கும் மேலும் இருவர் கோமா மற்றும் தமிழ் பிரியன் ஆகியோருக்கு நன்றி.)

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....

Monday, July 20, 2009

ஒரு கொலை முயற்சி

பாலைவனங்கள் பல புதிர்களை அடக்கிக் கொண்ட பூமி. முக்கியமாக சஹாரா போன்ற இடங்கள் ஒரு காலத்தில் செழிப்பான பூமியாகவும் அங்கு உயிரினங்கள் வாழ்ந்த ஒரு சில குடில்களையும் கண்டறிந்திருக்கிறார்கள். பின் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தில் பல நிலப் பிரிவுகள் உண்டாகி இருப்பதாக சரித்திர மற்றும் அறிவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மணல்
பறக்கும் பாலைவனத்தில் அதிசயத்தக்க ஒன்று பிரமிடுகள். சரித்திரச் சுவடுகளை அறிய பேருதவியாக இருந்தவற்றுள் ஒன்று. பிரமிடுகளை பற்றி சொல்லும் போது அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த அரசர்களையும் உயர்குடியினரையும் தவிர்க இயலாது. பிரமிடுகள் முக்கியமாக அமைக்கப்பட்டதே இந்த அரச குடியினர்களின் பிணங்களை பதப்படுத்தி 'மாற்று உலகத்துக்கு' அனுப்ப தான் என்பது பொதுவாக அறிந்த ஒன்றே.

'மம்மி'கள் பற்றிய ஆராய்ச்சிக்களும் ஆய்வுகளும் வியகதக்கவை. மம்மிகள் மற்றும் பிரமிடுகள் சம்பந்தமான எனது தகவல் சேமிப்புகளுக்கு என்னை கட்டி இழுத்தது தூத்தன்கமன் எனும் பாரோ மன்னனின் ஆய்வுகள் தாம். இது சம்பந்தமான கட்டுரை போதுமான விளக்கங்களுடன் முன்னமே எழுதியிருக்கிறேன்.

இன்றய திரையுலகம் மம்மிகளை பேய்களாகவே காட்ட முற்படுகின்றன. மம்மிகள் என்றாலே வெறுக்கத்தக்க ஒன்றாகவும், அகோரமான மர்ம பொருள் எனவும் மக்கள் கருதுகிறார்கள். மம்மிகள் புதைக்கப்பட்ட கல்லறைகள் திறக்கப்படும் போது பல வருடங்கள் அழுத்தத்தில் இருந்த மைக்ரோஸ்போராக்கள் அதீத செயல்பாடுகளோடு இயங்கச் செய்கின்றன. இதன் காரணமாக குறைவான நோய் எதிர்ப்புச் சத்தியைக் கொண்டவர்கள் மம்மிகள் அறையப்பட்ட கல்லறையை அணுகிய சில காலத்தில் இறக்க நேரிடுகிறது. இது மம்மிகளின் பழி வாங்கள் என மேலும் மக்களிடம் பீதியை கிளப்பிவிடுகிறார்கள்.

பிரமீடு திருட்டு வெள்ளையன் ஆரம்பித்து வைத்த ஒன்றல்ல. அரசன் வேற்றுலகில் மிகுந்த சுகத்துடன் வாழ வேண்டுமென பிரமிடுகள் சொல்வம் கொழிக்க நிறப்பப்படுகிறது. துத்தன்கமன் அரசனின் கல்லறயில் கண்டெடுத்த அவனது செருப்பு கூட தங்கத்தில் செய்யப்பட்டிருக்கிறது. எகிப்தியர்களின் நம்பிக்கைபடி கடவுளர்களாகிய அரசர்கள் பூமியில் தமது ஆட்சியை முடித்து வேற்றுலகிற்கு செல்கிறார்கள். அரசரை நன்முறையில் வழி அனுப்ப தங்கத்தால் ஆன பொருட்கள் கல்லறையில் நிறப்பப்படுன்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின் தைரியம் கொண்ட சில எகிப்திய திருடர்களாலும் பிரமீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் ஆராய்ச்சி எனும் பெயரில் கால் பதித்த வெள்ளையன் இவ்வேலைகளில் கொஞ்சம் தீவிரம் செலுத்தி கொள்ளையடித்திருக்கிறான். இப்படிபட்ட திருட்டுக்களை தவிர்க்கவும் பிரமிடுகள் மற்றும் மம்மிகள் சம்பந்தமான பீதியான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கலாம்.

எகிப்திய அரசன் ஃபாரோ என அறியப்படுவான். துத்தன்கமன் ஃபாரோவின் மம்மி கண்டெடுக்கப்பட்டது 'தி வேளி ஆப் கிங்' எனப்படும் பகுதியாகும். துத் சரித்திரத்தில் சொல்லப்படுபவர்களுள் ஹைதித் எனப்படும் அரசகுமாரனும் ஒருவன். துத் அரசனின் மரணத்தைப் போலவே இவனது மரணமும் சில மர்மங்களுக்குறியது.

முன்பு ஹித்தித்தின் உடல் என கூறப்பட்ட மம்மியும் பின்னாட்களில் அதுவல்ல என அறியப்பட்டது. கஹேராவில் இருந்து சுமார் 460 கிலோமீட்டர் தூரத்தில் Deir El Bahri எனப்படும் பள்ளத்தாக்கு இருக்கிறது. கால்கள் இருக்கக்கட்டப்பட்டு, இதயத்தை இருகைகளில் பற்றியபடியும், கடுமையான முகத்தோடு கத்திக் கதற வாய் திறந்த தோற்றத்தில் ஒரு மம்மி கண்டெடுக்கப்பட்டது. 'கதறும் மம்மி' என அடையாளப்படுத்தப்பட்ட அவ்வுடல் பலமான ஆராய்ச்சிகளுக்குட்பட்டது. ஆரம்ப நிலை ஆராய்ச்சிகள் அந்த மம்மியிடன் உடல் துத்தன்கமன் காலத்தில் வாழ்ந்த ஹித்தித் எனும் அரசகுமாரனுடையது என குறிப்பிட்டன.

1881-ஆம் ஆண்டு கதறும் மம்மி கண்டெடுக்கப்பட்டது. ற்சமயம் கஹேராவில் அமைந்துள்ள எகிப்திய தொல்பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த மம்மியில் செய்யப்பட்ட மேலாதிக்க ஆராய்ச்சிகள் எகிப்திய நாகரீகத்தில் திட்டமிட்ட ஒரு கொலை முயற்சியை வெளிக்கொனர்ந்தது.

எகிப்திய நாகரீகத்தில் குறிப்பிட தக்க அரசருள் ஒருவர் 3-ஆம் ரம்சேஸ் ஃபாரோவாகும். அவரின் மகனான Pentewere எனும் அரசகுமாரன் ஆட்சியைப் பிடிக்க தந்தையை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறான். ஆராய்ச்சியில் கி.மு 12-ஆம் நூற்றாண்டின் பைப்ரஸ் படிவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 3-ஆம் ரம்சேசின் மனைவி அவரைக் கொலை செய்யும் சதித் திட்டத்தில் சம்பந்தப்பட்ட விசாரனை குறிப்பு அப்படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.சதி திட்டம் விரைவாக குட்டுடைக்கப்பட்டது இளவரசனின் போராத காலம். சதிகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அரச துரோகம் செய்பவர்களை மம்மியாக்க்கி கல்லறையில் வைக்கப்படுவதில்லை. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் அவ்வுடல் அழிக்கப்பட்டுவிடும். அது ராஜ வம்சத்தவராக இருப்பினும் விதி விளக்கு கொடுக்கப்படவில்லை. 3-ஆம் ரம்ஸேசின் ஆட்சியை ஆதரித்தவர்களைப் போலவும் Pentewere அரசகுமாரனை ஆதரித்தோரும் இருந்திருக்கிறார்கள்.

Pentewere அரசகுமாரனுக்கு இரண்டு தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று அரசனை கொல்ல திட்டமிட்டது. இரண்டு தந்தையை கொல்ல திட்டமிட்டது. முதல் குற்றத்திற்கு விஷத்தை அருந்த தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாம் குற்றத்திற்கு அவனது உடல் கல்லறையில் வைக்க தடை செய்யப்பட்டிருக்கிறது. கல்லறையில் வைக்கப்படாத உடலுக்கு மறுபிறப்பு இல்லை என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை.

அரசகுமாரனின் ஆதரவாளர்கள் அவன் உடலை கைப்பற்றி அவசர அவசரமாக பதப்படுத்தி இருக்கிறார்கள். மம்மியாக்கப்படுவதற்கான வேலைபாடுகள் முழுமையடையவில்லை என்றே சொல்ல வேண்டும். கதறும் மம்மியின் உடல் முழுமையாக உலர்வடையவில்லை. மூலை மற்றும் உள்ளுறுப்புகள் அகற்றப்படாமல் ஒன்றும் பாதியுமாக செய்திருக்கிறார்கள்.

அது போக அவ்வுடல் ஆட்டுத் தோலில் சுற்றி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. பழங்கால எகிப்தியர்களின் நம்பிக்கைபடி ஆட்டுத் தோலில் சுற்றப்பட்டது புனிதமற்றது எனப் பொருள்படும். தீயவர்களின் உடலை இப்படி ஆட்டுத் தோலில் சுற்றி வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.

Pentewere-யின் உடல் ஏன் தூக்கியெறியப்படமால் பதப்படுத்தப்பட்டது எனும் கேள்ளி எழும் சாத்தியங்கள் உண்டு. பிரபுக்களின் சபையினரில் யாரேனும் இதை விரும்பாமல் இருந்திருக்கலாம். அவர்கள் அரசகுமாரனின் பக்கம் இருந்தவர்களாக இருந்திருக்கலாம்.

சில ஆராய்ச்சியாளர்கள் அது Pentewere-யின் மம்மிதான் என்பதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். 3-ஆம் ரம்சேஸ் அரசனின் மம்மிக்கும் கதறும் மம்மிக்கும் இருக்கும் ஒறுமைபாடுகளை பற்றிய மரபணு சோதனைகள் பல கட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

Sunday, July 12, 2009

சமயமெனும் சாக்கடை உலகம்

கேமரன் மலையில் இருந்த சமயம் திருவிழா கொண்டாட்டங்களை அதிகமாகவே கண்டிருக்கிறேன். அதிகமான இந்தியர்கள் அப்போது அங்கிருந்தார்கள். திருவிழா ஆரம்பிக்க நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே தோட்டத்தைவிட்டுச் சென்றவர்களும், ஏனையோரின் உறவுகளும் என மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும். எக்கச்சக்கனமான பலகாரக் கடைகளும், அலங்காரங்களும் ஒரு புதிய மகிழ்ச்சியை எய்தச் செய்யும். பள்ளிக்கு விடுமுறைவிட்டிருப்பார்கள். சில நல்லாசிரியர்கள் மட்டும் பாடத்தை கொடுத்து 'செய்துட்டு வாங்கடா' என சொல்லி வில்லத்தனமான புன்முறுவலிட்டுச் சென்றுவிடுவார்கள். சில சமயம் அதை செய்து முடித்தும் பல சமயம் அதைச் செய்யாமலும் அடிவாங்கிய கதைகள் தனி.

நண்பர்களிடையே அச்சமயத்தில் எல்லாமே காவடிகள் தாம். காவடி பார்க்க போகிறோம் என்று சொல்லிவிட்டு தான் கிளம்பி இருக்கிறோம். பின்னாட்களில் தைப்பூசத்துக்கு எடுப்பது மட்டும் தான் காவடி என புரிந்து கொள்ள முடிந்தது. 'அருள்'!? வந்தவர்களை அருகில் இருந்து பார்க்க நான் துணிந்ததில்லை. இன்று வரை இப்படி அருள் வந்தவர்களை எதிர்பாரா விதமாக அருகில் காணும் போது அடி வயிறு கலங்கிவிடும். அந்த பயம் விலகியதில்லை.

கேமரன் மலையில் மேட்டின் மேல் இருக்கும் பாறையில் அமர்ந்தபடி அருள் வந்த 'ஆசாமிகள்' ச்சே சாரி 'சாமிகள்' பூக்குழி எனப்படும் தீக்குளியில் இறங்கி வருவதை பார்த்துக் கொண்டிருப்பேன். அங்கிருந்த கோவில்களில் மிக பெரிதாக இருந்தது அம்மன் கோவில். அதனால் தான் என்னவோ வரும் சாமிகளில் பலவும் அம்மனாகவும் (கையில் நெருப்பு மூட்டப்பட்டு புகைந்துக் கொண்டிக்கும் தீச்சட்டியோடு), காளியாகவும் (முதுகு முழுக்க கொக்கி மாட்டி கயிற்றில் பிடித்து இழுத்துக் கொண்டிருப்பார்கள்), முனியாண்டி, மதுரைவீரன் எனவும் இருக்கும். இது போக அனுமன், நாகம்மாள்(இரண்டு கைகளை படம் எடுக்கும் பாம்பு போல் தலைக்கு மேல் உயர்த்தி 'புஸ் புஸ்' என்றிருப்பார்கள்) என சில சாமிகளும் வருவதுண்டு.இந்த காளி சாமிகளுக்கு மட்டும் நாக்கு வெளி தள்ளிப் போய் கண்கள் மிரண்டு இருக்கும். 'இதுகளை' ச்சே சாரி 'இவர்களை' பார்த்தவுடன் பக்தியில் கையெடுத்து கும்பிடுகிறார்களோ இல்லையோ பயத்தில் கும்பிடு போட்டு போய்விடுவார்கள் போலும். இந்த 'கேடு கெட்ட ஆசாமிகளுக்கு' ச்சே மீண்டும் சாரி 'முற்றும் உணர்ந்த மேன்மக்களுக்கு' கிஞ்சித்தும் மரியாதை என்பதே இருப்பதில்லை. 'டேய் இங்க வாடா', 'ஏய் இங்க வாடி' என்று தான் அழைத்து தொலையுங்கள். இந்த சாமிகளை வளர்த்தோரை சொல்ல வேண்டும். மரியாதை தெரியாமல் வளர்த்து மக்கள் 'நலனுக்கு' அனுப்பி இருக்கிறார்கள்.

காளி சாமிகளின் உடல் முழுக்க குங்குமம் அப்பிக் கிடக்கும். இவற்றுக்காகத் தனியாக பெட்டி பெட்டியாக குங்குமம் வாங்குவார்கள் போல. குங்கும கம்பெனிக்காரர்களுக்கு நல்ல நெத்தியடி வியாபாரம் தான். சில சாமிகள் நாக்கில் கூட குங்குமம் ஒட்டி உமிழ் நீரில் கலந்து ஒழுகிக் கொண்டிருக்கும். பக்கத்தில் இருக்கும் 'பக்தர்களை' அழைத்து கட்டை விரலில் நாக்கில் இருக்கும் குங்குமத்தை தொட்டு நெற்றியில் ஒரு இழுப்பு இழுப்பி விட்டு கொஞ்சம் குங்குமத்தை அவர்கள் கையில் போட்டு அனுப்ப, அந்த பக்த பெருமக்களும் அதை பவ்யமாக வாங்கி கொண்டு வருவார்கள்.

சில 'காஸ்ட்லி' காளி சாமிகள் கயிறு இழுக்கும் ஆள் போக பக்கத்தில் விளக்கு பிடிக்க (தட்டில் சூடம் ஏற்றி இருப்பதைச் சொன்னேன்) ஆள் வைத்திருப்பார்கள். அந்த தட்டில் குங்குமமும், நன்கு பழுத்த எழுமிச்சையும் இருக்கும். சில பெண்டீர்கள் குடும்ப பிரச்சனையை வீதிக்கு கொண்டு வந்து சாமிகளிடம் முறையிட சாமி எழுமிச்சையை வலது கையில் எடுத்து நெற்றி புருவ மத்தியில் வைத்து முனுமுனுத்து குடும்ப பிரச்சனையைத் தீர்த்து வைக்கும். இந்த எழுமிச்சை பிரச்சனைகளில் புட்டுக் கொண்ட குடும்பங்களும் உண்டு.

இதுவும் இந்த சமுதாயத்தில் ஏற்பட்ட வன்முறை கலாச்சார சீர்கேடு தான். இந்த அருள் பார்க்கும் கலாச்சாரம் தோட்டப்புரங்களில் இருந்து கொஞ்சம்‍ கொஞ்சமாக நகர்ந்து இப்பொழுது நகர்ப்புரங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. சில பத்திரிக்கைகளில் கூட இதன் விளம்பரத்தைக் காணலாம். சாமி பார்க்க விரும்புபவர்கள் 'அப்பாய்ண்மெண்ட் ஆர்டர்' வாங்கிக் கொண்டு போக வேண்டும். இலங்கை பிரச்சனையைத் தீர்க்க இவர்களிடம் வழி கேட்டிருக்கலாம். என்ன செய்ய அச்சமயம் யாருக்கும் சரியான சமயோசிதம் வருவது இல்லை. இந்த சாமிகளை பார்த்தவுடன் மறந்து தொலைத்துவிடுகிற‌து.

சில மெத்தப் படித்த மக்களும் இவ்விடங்களில் போய் ஆங்கிலத்தில் பேசி ஆசி பெற்று வருவது அதிர்ச்சியான விடயம். மேலும் அருள் பார்க்கும் ஆசாமிகள் பெரும்பாலும் கையில் சுருட்டும், பீர் புட்டியோடும் தான் இருப்பார்கள். அதிகமானோர் இயல்பு நிலையில் படிக்காத ஆட்களாகவும், குடிகாரர்களாகவும் பேர் போனவர்களாக இருப்பார்கள். இப்படி இருப்பவர்களுக்குத் தான் சாமி வருகிறது. சாமி விருப்பப்பட்டு அருள் இறக்கும் ஆட்களைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

தெருவுக்கு ஒரு கோவிலைக் கட்டி வைத்துக் கொள்வதும் உடைத்துவிட்டால் குய்யோ முறையோ என கத்துவதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது. சிறு தெய்வ கோவில்கள் என பரவலாக அறியப்படும் இவை தன் சொந்த நிலங்களில் கட்டிக் கொள்ளப்படுபவை அல்ல. 'கோப் கிடைத்தால் ஆப்படிக்கும்' கதையாக இருக்கும் இடத்தில் சிறு கொட்டகையை போட்டு ஆரம்பிக்க வேண்டியது. பிறகு கிடைக்கும் நிதி வசூலில் கொஞ்சம் மேம்பாடுகள் செய்துக் கொண்டு அதே வாழ்கை என அங்கேயே இருந்துவிட வேண்டியது. பின்னாட்களில் நிலத்தின் சொந்தக்காரன் தமது பயன்பாட்டிற்கு நிலத்தைக் கேட்கும் போது ஆரம்பிக்கும் பிரச்சனை. இத்தனை காலம் இங்கிருந்தோம் எங்களுக்கே இவ்விடம் சொந்தம் என ஆரம்பித்துவிட வேண்டியது. இப்படிச் செய்பவர்கள் சொந்த நிலத்தில் கட்டிக் கொண்டு கூத்தடிக்க வேண்டியது தானே. எதிர்காலத்தில் இப்பிரச்சனைகள் இருக்குமென இவர்கள் ஏன் சிந்திப்பதில்லை?திட்டு திட்டாக ஆங்காங்கே இருக்கும் இவ்விடங்களில் கொட்டும் நிதிகளை படிப்பு வசதிக்கு சிரமப்படும் மாணவர்களுக்கு பயன்படுத்தினால் கூட போதும். அவற்றை கவனிக்க இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இங்கு வசூலாகும் பணம் என்னானது என கணக்கு காட்டிட அவசியம் இருப்பதில்லை. கிடைக்கும் பணத்தை குடித்து கும்மாள‌ம் போட்டுவிட்டாலும் கேட்க ஆளில்லை. இப்படி இருக்க குண்டர் கும்பலில் கீழ் எவ்வளவு மையங்கள் சாமி பார்க்கிறேன் எனும் கதையாக இப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என அறிவார் இல்லை. நல்லது செய்கிறேன் எனும் மாயையில் மக்களின் மன பிரழ்வுகளுக்குக்கு மட்டுமே இவர்கள் வித்திடுகிறார்கள். இதற்கு காரணம், மக்களை சமயம் எனும் போர்வையில் ஒடுக்கி வைத்திடும் நெடுங்கால திட்டம் என சொல்வதில் என்ன தவறு இருக்கக்கூடும்.

இது தான் இப்படி என்றால் எண் ஜோதிடம், கல் ஜோதிடம், வாஸ்த்து சாத்திரம் என ஒரு கூட்டம் இன்னொரு பக்கம் மக்களை சுரண்டி கொண்டிருக்கிறது. இதை பற்றி சொல்வதற்கு ஒரு பெரும்பதிவே எழுதலாம். மொத்தத்தில் பணம் பண்ணுவதற்கு சம்யம், பலருக்கும் பகடைக் காயாக விளங்குகிறது. சதி திட்டவாதிகளுக்கு அதை விட்டுக் கொடுக்கும் எண்ணம் ஏற்படும் என நினைப்பது பகல் கனவு தான். சிந்திக்க முற்படாத மக்களை தமக்கு சாதகமாகவும், ஆபத்து நேரங்களில் கருவியாகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தன் தலையில் மிளகாய் அரைக்கப்படுவது தெரியாமல் முட்டாளாக போய்க் கொண்டிருக்கும் இன்றய தலைமுறை பரிதாபத்துக் குறியது.

இதையெல்லாம் சொல்லும் பட்சத்தில் சில பெரியவர்களுக்கு கோபம் தான் மிஞ்சுகிறது. இப்ப வந்தவன் இவன் என்னத்தைக் கண்டுவிட்டான் என்பதாகவே இவர்களின் குரல் எழுகிறது. இச்செயல்கள் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு தொடரும் என்பது இம்மக்களின் மனமார்ந்த சிறு தெய்வங்களுக்கே வெளிச்சம். சமய போதனை பல கலவைகளுக்கு உள்ளாகி சாக்கடை போதனையாகவே பலரிடமும் சொன்றடைகிறது. அதைப் பற்றி பிடித்த வாழ்க்கையே இன்னமும் நீடிக்கிறது. சில மேன்மக்கள் அரசியலில் குப்பை கொட்டுவதற்குக் கூட இது அவசியமாகிறது.

பேராக் மாநிலத்தில் (மலேசியா), தைபிங் எனும் இடத்தில் பன்றி கோவில் படு துரிதமான வியாபார வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஒரு சீனருக்கு சொந்தமான நிலத்தில் சீன மூனீர்வர சிலையை வைத்து வழிபடுகிறார்கள். அது ஹிந்து மத முன்னீஸ்வரன் போலும் இருக்கிறது அலங்காரம் செய்யப்பட்டு. காட்டுப்பகுதில் இருக்கும் இவ்விடத்திற்கு தூக்கி போடும் உணவுகளைத் தின்ன காட்டுப் பன்றிகள் வந்து போகவும் நாள்டைவில் அதை மக்களிடம் நன்கு பழக்கிக் கொண்டார்கள். மக்கள் அதை தொடவும் உணவளிக்கவும் இப்போது அவை மனிதர்களிடம் பயப்படுவதில்லை. தற்சமயம் இப்பன்றி கூட்டம் தெய்வ தூதுவனாக மாறிவிட்டிருக்கிறது. அவற்றின் உடம்பில் பண நோட்டுகளைக் கொண்டு தேய்க்கவும் பின் பண நோட்டில் இருக்கும் கடைசி நான்கு எண்களை சூதாட்ட மையங்களில் எடுக்கவும் என செய்தி பரவி மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கிறது. பன்றி உடலில் இருக்கும் சேற்றினை சந்தனம் என சொல்லும் அளவுக்கு பக்தி முற்றிவிட்டது. அதை சேறு எனச் சொன்னால் தெய்வ குற்றமாம். அதன் நாற்றம் எல்லாம் ஒரு பெருட்டற்று போய்விட்டது. நாடெங்கினும் இருந்து பல பேருந்துகள் தினம் இவ்விடம் வந்து போய்க் கொண்டிருக்கின்றன.மிருகத்தை துதிக்கும் இச்செயல் ஒரு பக்கம் என்றால். நேர்த்திக்கடன் எனும் பெயரில் மிருக வதைகள் நம்மை பதற வைக்கிறது. ஆட்டின் கழுத்தை அறுத்து அதன் இரத்தத்தை பச்சையாக அப்படியே உறிஞ்சி குடிக்கிறது சில சாமிகள். மிருக வதை சட்ட போதனைகளை பூசாரிகளுக்கும் அருள் வரும் ஆசாமிகளுக்கும் வகுப்பெடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் போல. கேட்டால் தெய்வ காரிய பலிகள் சொர்கத்தை அடையும் என்பார்கள். இந்த பூசாரிகளை ஏன் சொர்கத்துக்கு அனுப்பக் கூடாது? இல்லை தான் சொர்கத்துக்கு போகிறேன் என அந்த ஆட்டுக்கு தான் தெரியுமா?

(மிருக வதை சமய வழிபாட்டினை திருமதி சுபா அவர்கள் எழுதிய இப்பதிவில் காணலாம். கொடூரமாக இருக்கும் இப்படங்களை இளகிய மனம் கொண்டோர் பார்க்காமல் இருப்பது நலம்.)

அடுத்த படியாக இருப்பது எம்.எல்.எம் சிஸ்டம். நாட்டில் சில பகவான்கள் உதித்திருக்கிறார்கள். இந்த பகவான்களை பார்க்க மட்டும் 500, 750 ரிங்கிட் என குறிப்பிட்ட தொகை வசூழிக்கப்படுகிறது. மற்றபடி தீட்சை வாங்கவும், யோகம், போகம், ரோகம் என சில கற்றல் திறன்களை அறிந்துக் கொள்ளவும் தனி 'ரேட்டில்' பணம் வாங்கப்படுகிறது. பல்புகளையும், கண்ணாடி துண்டுகளையும் கடித்து தின்ன கூட பயிற்சி அழிக்கப்படுகிறதாம். பணம் செலுத்த சிரமம் உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் நான்கைந்து புதிய பக்தர்களை பகவானுக்கு தேடி கொடுக்க வேண்டும். இப்படிச் செய்பவர்களுக்கு ஏனையோரை திட்சை வாங்க வாய்ப்பளித்த புண்ணியமும் சேருமாம். மக்கள் நலன் காக்க வந்த பகவான்களுக்கு இவ்வளவு தொகையில் பணம் வசூழிக்க என்ன கேடு வந்தது என கேட்பார் இல்லை. கேட்டால் முறைப்பார் உண்டு.

புதிய புதிய சமய யுக்திகள் பிரமிக்க வைக்கின்றன. இன்னும் எவ்வளவு வளரும். காத்திருப்போம்.

(பி.கு: இந்த பதிவை எழுதி தொலைத்து சிறு தெய்வங்களின் சாபத்தை வாங்கிக் கொண்ட விக்கியை அந்த இலச்சி மல ஆத்தா தான் காப்பாத்தனும்)