நண்பர்களே பின்னூட்ட சுனாமி வால்பையன் நமக்காக மனம் திறந்து பேசுகிறார். படித்து ஆனந்தம் அடையுங்கள்...
(தமது ஒற்றைக் கரத்தால் தொடர் வண்டியை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கும் வால்)
வால்: அண்ணே நான் அவ்வளவு வொர்த் இல்லைணே!
பலமான பார்வையெல்லாம் பெரிய வார்த்தைண்ணே!
யாருடா இவன் குரங்கு சேட்டை பண்றான்னு நாலு பேரு பாக்குறாங்க! பண்ற சேட்டைக்கு ஏத்தா மாதிரி அடி விழுது!
கே: பதிவெழுதுவதனால் முன், பின், பக்க விளைவுகள் ஏதும் திரைக்குப் பின்னால் உள்ளனவா?
வால்: ஆரம்ப காலங்களில் பதிவெழுதுவதற்காக நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது! எல்லாவற்றிலும் பதிவுக்கான கருவை தேடி அதை முழுமையாக ரசிக்க மறந்தேன்! மன உளைச்சலுக்கு ஆளானேன்! இது என்னடா வம்பா போச்சுன்னு பதிவை குறைச்சு பின்னூட்டம் மட்டும் போட்டு கொண்டிருக்கிறேன்! நிம்மதியாக இருக்கிறேன்.
கே: தமிழ்மண நட்சத்திர பதிவராக இருந்த அனுபவத்தைப் பற்றி ஓரிரண்டு வரிகள்.
கே: ஏகப்பட்ட பதிவுகளில் உங்களின் கலக்கலான பின்னூட்டங்களைக் காண முடிவதாக பதிவுலக மக்கள் திருவாய் மலர பேசிக்கொள்கிறார்கள். பின்னூட்டங்களைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?
கே: வாசகர்கள் இல்லாமல் ஒரு பதிவர் வெளிச்சத்துக்கு வந்துவிடுவதில்லை. கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள நினைக்கும் ஒரு சில வாசகர்களே பின்னூட்டமிடுகிறார்கள். சில பதிவர்களிடையே அதற்கான தகுந்த மறுமொழி இல்லாதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
வால்: பதிவுலகம் கண்ணாடி மாதிரி நாம என்னை கொடுக்குறோமோ அது தான் திரும்ப கிடைக்கும்! சிலர் வாங்கிட்டு திரும்பி தரமாட்டாங்க! அவுங்க விதிவிலக்கு லூஸ்ல விடுங்க! அதுக்காக பின்னூட்டம் இடுவதையே பாவ செயல்னு ஒதுங்கிறாதிங்க! பின்னூட்டம் சுவாரஸ்யமாக இருந்தால் மற்ற நண்பர்கள் கவனிப்பார்கள்!
கே: பின்னூட்டங்களை சுயசொறிதல் என கருதுகிறீர்களா?
வழக்கம் போல கலக்கல் அசத்தீடிங்க சூப்பர்சான்சே இல்ல :) என டெம்ப்ளெட் பின்னூட்டங்கள் இடத்தை அடைக்கின்றன! கருத்துகளத்தில் ஜால்ரா சத்தம் தான் அதிகமா கேட்குது!
கே: உன்னை யாரும் வெத்தலை பாக்கு வச்சி அழைக்கல. பிடிக்கலனா என் பதிவ படிக்காதே என சொல்பவர்களைப் பற்றி.
கே: சாருவின் பதிவை தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள். இதனால் ஒவ்வொரு முறையும் சரக்கடிப்பது வேஸ்ட் ஆகிவிடுவதாக சொல்கிறீர்கள். அப்படி என்றால் சரக்கடிக்காமல் அவர் பதிவுகளை படிக்க வேண்டும் என சொல்கிறீர்களா?
கே: நான் எழுதும் வரை தான் இந்த எழுத்து எனக்கு சொந்தம் எழுதிய பிறகு யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என சொல்லும் சாரு, சில விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளமுடியாமல் கபடியாடிவிடுகிறாரே?
வால்: சாரு தன்னம்பிக்கையை தாண்டி தலைகண லெவலுக்கு சென்று விட்டார். அவரை விமர்சிப்பவர்கள் சாத்தான்களின் தூதுவர்கள் ரேஞ்சுக்கு தான் அவரது பேச்சு இருக்கிறது. ஆனால் இவர் மட்டும் சகட்டு மேனிக்கு அனைவரையும் விமர்சிப்பார்! இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவரது சிஷ்ய கோடிகளும் அதே போல் இருப்பது
கே: திரைப்படம் பார்ப்பது எப்படி என பதிவுகள் வந்திருக்கும் பட்சத்தில் உலக திரைப்படம் பார்ப்பது எப்படி என்ற ஒரு பதிவை உங்களிடம் இருந்து கோடான கோடி மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். எழுதினால் என்ன?
கே: சரக்கடித்துவிட்டு பதிவிடுவது நல்லதா இல்லை பின்னூட்டமிடுவது நல்லதா?
கே: சமீப காலமாக புதிய பதிவர்கள் அதிகரித்து வருவதப் பற்றி?
வால்: வாசிப்பனுபவம் உயர்ந்து கொண்டே வருவது நல்ல ஆரோக்கிய சூழல் தானே! வரவேற்கிறேன்! அனைவரையும்
கே: தமிழ்மண திரட்டியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில தலைப்புகளுக்கே மவுசு இருப்பதாக தெரிகிறது. சலிப்படைந்தது உண்டா?
கே: குறுகிய காலத்தில் தமிழிஷின் வெற்றி பற்றி?
கே: நெல்லைத் தமிழ் திரட்டியின் நிர்வாகி நீங்கள் என பேசப்படும் கிசுகிசுக்களைப் பற்றி?
கே: சில பதிவர்களிடையே கருத்து மோதல் எனும் பெயரில் தனிமனித தாக்குதல் நடத்திக் கொள்கிறார்களே?
வால்: ஆழ்ந்து நோக்கினால் தனிமனித தாக்குதலுக்கு ஆரம்ப காரணம் தனிமனித துதி என்பது தெரியும்! யாரும் யாரையும் வரும்போதே எதிரியாக பார்ப்பதில்லை! ஒருவருடைய தனிமனித துதி, கருத்து வேறுபாடுகளால் வாதம் ஏற்படுகிறது! தனிமனித துதியை ஆதரிப்போர் பெரும்பாலும் குறுகிய மனம் படைத்தவர்களாக தான் இருக்கிறார்கள் . அதனாலேயே அவர்களது வாதம் விவாதமாகி பாதியில் முடக்கு வாதமாகி அவரது ப்ளாக்கில் இவரை திட்ட, இவரது ப்ளாக்கில் அவரை திட்ட, அவருக்கு சில ஆதரவு, இவருக்கு சில ஆதரவு என பல குழுக்கள் இன்று தமிழ் வலையுலகில் இருக்கின்றன! (விதிவிலக்குகளும் உண்டு)
கே: சில பதிவர்கள் யாருக்கும் பின்னூட்டம் போடுவதில்லை ஆனால் ஏன் எனக்கு நீ பின்னூட்டம் போடவில்லை என கேட்பது பற்றி?
கே:
//நீ யாரடா ஒரு எழுத்தாளனுக்கு ஆர்டர் போட! கேரளாவில் போய் பார் எல்லாம் எப்படி புட்டு சுடுறாங்கன்னு!
அப்படின்னு தேவையற்ற வார்த்தைகளை இடையில் சேர்த்து பெருக்கி நாலு பக்கத்துக்கு ஒரு கட்டுரை வரும்
வராட்டி ஏண்டா நாயேன்னு கேளுங்க!//
இந்த யுக்தியை எப்படி கண்டு பிடிச்சிங்க? :)
கே: விரும்பிப் படிப்பது?
வால்: தமிழ் வலைப்பூக்கள்
கே: பிடிக்காதது?
வால்: தற்புகழ்ச்சி
கே: உங்கள் பார்வையில்:
அதிஷா- எழுத்தில் திரிஷா
குசும்பன் - எழுத்து கலைவாணர்
லக்கிலுக் - நகைச்சுவையாக எழுதியவர்(தற்பொழுது தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்)
கோவி.கண்ணன் - பகுத்தறிவு கருத்து கந்தசாமி!
வடகரை வேலன் - மரியாதைகுறிய அண்ணாச்சி
கார்க்கி - பெண் ரசிகைகளை ஏராளமாக கொண்டவர்(கனவில் மட்டும்)
கே: பதிவர் சந்திப்பு?
கே: பதிவுலக சாதனை?
வால்: ஏராளமான நண்பர்கள்
கே:பிடித்த எழுத்தாளர்?
வால்:ஒன்றை போல் ஒன்று இருப்பதில்லை! யாரை சொல்ல!
(கேள்வியும் பதிலும் நீங்களே)
அய்யனார்
குசும்பன்
ச்சின்னபையன்
மற்றும் உங்களை
(பி.கு: பேட்டி கொடுத்த வால்பையனுக்கு நன்றி. அடுத்தபடியாக ஃபிட்டுபடம் with அதிஷா எனும் பதிவை விரைவில் எதிர்பாருங்கள். அதிஷாவிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை எனக்கு மின்மடலில் அனுப்பி வைக்கலாம்).