சாக்லெட் அதிகம் விரும்பி சாப்பிடுவது ஆண்களா பெண்களா? பெயர் தன்மையைப் போல ’சக்’கென மனதில் ஒட்டிக் கொள்கிறது சாக்லெட். ஆண்கள் தன் காதலிக்கோ மனைவிக்கோ சாக்லெட் வாங்கிக் கொடுப்பது இன்றய நாட்களில் இயல்பாகி விட்டது.
சாக்லெட் சாப்பிடுவது காம உணர்ச்சியைத் தூண்டுமா? Montezuma மகாராஜா அஸ்டெக் (Aztec) ஆட்சிகால மன்னன் ஆவன். ஒரு நாளைக்கு 50 கோப்பை சாக்லேட் அருந்துவானாம். சக்லெட் அருந்துவதுவதினால் ஒரு புதிய வகை உற்சாகம் பிறக்க்குமாம். அதன் பிறகே தன் இணைகளுடன் கூடுவானாம். சாக்லெட் அருந்துவதை அஸ்டேக் கால உயர்குடி மக்கள் ஒரு கலாச்சாரமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
Casanova, உலகமறிந்த காதலன். தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்ள தினமும் சாக்லெட் அருந்துவானாம். champagne அல்லது சாக்லெட் எனக் கேட்டால். சாக்லெட் என்பது தான் அவரின் பதிலாக அமையுமாம். இந்தக் கதைகள் உண்மை தானா? தெரியாது. ஆனால் ஒரு சுவாரசியம் அதில் இருப்பதாக அறிகிறேன்.

சாக்லெட் சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் எனும் தகவலை முன்பு படித்ததாக நினைவு. காமத்திற்கும் சாக்லெட்டுக்கும் இருக்கும் தொடர்பு இன்னமும் பல விதமாக அலசப்பட்ட வண்ணமே இருக்கிறது. அதனால் தான் என்னவோ அதை நம்பியோ நம்பாமலோ சக்லெட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
சாக்லட் காதலின் அடையாளமாக இன்று கருதப்படுகிறது. காதல், காம உணர்சியை மேலிட செய்வதற்கு மட்டும் இன்று சாக்லட் பயன்பாட்டிற்கு இல்லை. புதிய நட்புபையும் பாசத்தை வெளிப்படுத்தவும் சாக்லெட் கொடுக்கப்படுகிறது.
சாக்லெட் தொடர்பான ஆய்வுகளை செய்வதற்கு ஆராய்ச்சியாளர்கள் சளைத்ததாக தெரியவில்லை. தெ மெசேஜ் ஆப் லவ் என சாக்லெட்டின் தனித் தன்மையைக் குறிப்பிடுகிறார்கள். அது போக சாக்லெட் 2000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (திருவள்ளுவர் சாக்லெட் பற்றி ஏதும் எழுதி இருக்கிறாரா) இந்த எண்ணம் தன் உடனே எழுந்தது. நக்கலாக தோன்றினால் மன்னிக்கவும். :)
சாக்லெட்டில் phenylethylamine(PEA) எனும் வேதிப் பொருள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது மனிதனின் ஆனந்த உணர்ச்சியை தூண்டுகிறது. அதாவது ஒரு மனிதன் ஆனந்தம் அடையும் போது வெளிப்படும் ஹார்மோன் போலவே இது செயல்படுகிறது. இந்த வேதிப் பொருள் மனிதனின் காம உணர்சியை தூண்ட தக்கது. காதல் வயப்படும் ஒரு மனிதனின் மன நிலையை தர வள்ளது.

உணவுப் பொருட்களில் இருக்கும் PEA வேதிப் பொருள் நிலைத் தன்மையற்று என்பதால் அதை மனித உணர்வோடு ஒப்பிடுவதை பொரும்பாலும் தவிர்க்க முனைகிறார்கள். இன்றய நிலையில் சாக்லெட்டின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ரொட்டி, கேக், ஐஸ் கிரிம், குளிர் பானம் என பல உணவுப் பொருள்களில் சாக்லெட் கலக்கிறார்கள்.
சாக்லெட்டை பரிசளிப்பது இன்று இயல்பாகிவிட்டது. மனதிற்கினியவர்களுக்கு சாக்லெட்டை பரிசளிப்பது உறவை வளர்க்கும் செயலாகக் கருதப்படுகிறது. பெரு வணிக அங்காடிகளில் சாக்லெட்டிற்காக தனியொரு பகுதியை ஒதுக்கி இருப்பதைக் காணலாம். பொதுவாக குழந்தைகளுக்கு அது தான் விருப்ப இடமாக இருக்கும். சில பொற்றோர்கள் குழந்தைகள் இனிப்பு பண்டங்கள் தின்பதை விரும்ப மாட்டார்கள். திருட்டு ‘தம்’ போல குழந்தைகளுக்கு திருட்டு மிட்டாய் என்ற கதையாகிவிடுகிறது.
அங்காடிகளில் கவரும் ஒரு விடயம் ஹெம்பர் என பொட்டலங்களாக மடிக்கப்படும் விதம். இது 100 முதல் 10000 ரிங்கிட் வரையிலும் ஹெப்பர்களில் விற்பனைச் செய்யப்படுகிறது. இது சாக்லெட்டிற்கான வரவேற்பையே குறிக்கிறது.
சாக்லெட் ஆரோக்கியமான பண்டம் அல்ல அதனால் உடல் நலம் பாதிப்படையும் என்பதே பொதுவாக மக்களிடையே நிலவும் கருத்தாகும். இதனால் சாக்லெட் சாப்பிடுவோரிடையே தமக்கு நீரிழிவு நோய் ஏற்படுமோ, உடல் எடை கூடுமோ, பல் பழுதடையுமோ என்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன.
ஒரு ஆய்வறிக்கையின் தகவல் சாக்லெட் வியாதிகளுக்கு வித்திடுவதில்லை என்பதை தெரிவிக்கிறது. அது போக சாக்லெட் சாப்பிடாதவரைக் காட்டினும் சாக்லெட் சாப்பிடுபவர்கள் ஒரு வருடம் அதிகபடியான ஆயுளை கொண்டிருப்பார்கள் என்பது அவ்வறிக்கையின் கூடுதல் தகவலாகும்.
கொக்கோ பழத்தில் பற்களைப் பாதுக்காக்கும் கிருமி எதிர்ப்பு சத்து நிறம்ப உள்ளன. சாக்லெட்டில் சேர்க்கப்படும் இனிப்பு வகைகள் அவற்றை சேதமுறச் செய்வது மட்டுமின்றி பற்களையும் பாழடையச் செய்கின்றன. இது ஜப்பானிய ஒசாக்கா பல்கலைக்கழத்தின் ஆய்வறிக்கையாகும்.
சக்லெட்டினால் முகப்பரு ஏற்படுவதில்லை. ஆனால் அதிகமான பால் கலந்த சாக்லெட் முகப்பரு ஏற்பட காரமாகிறது. சாக்லெட்டின் வாசனை மன அமைதியை ஏற்படுத்த வல்லவை.

மாயா மற்றும் அஸ்டெக் கால கட்டங்களில் மக்கள் கசப்பு மிகுந்த சாக்லெட்களை உணவாகக் கொண்டிருக்கிறார்கள். 1500 வருடங்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டினரால் ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஐரோப்பியர்கள் இனிப்பு வகை சாக்லெட்டை விரும்பி சாப்பிட்டிருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவிலும் சாக்லெட் மேல்மட்ட மக்களுக்கு மட்டுமென சட்டங்கள் இருந்திருக்கின்றன.
சாக்லெட் Theobroma என அறிவியல் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. அது இறைவனின் உணவு என பொருள்படும். இரண்டாம் உலகப் போரின் சமயம் அமேரிக்க இராணுவத்தினரால் ஜப்பானில் சாக்லெட் அறிமுகப்படுத்தப்பட்டது. சராசரியாக 1.7கிலோ சாக்லெட் வருடந்தோரும் ஒரு ஜப்பானியரின் உணவாகக் கொள்ளப்படுகிறது.
சாக்லெட் பற்றிய தகவல்கள் எண்ணிலடங்கா. நாளுக்கு நாள் புது தகவல்கள் நிறைந்து காணப்படுகிறது. சாக்லெட் உறுகுவதைப் போல் அதை பரிசாக பெறுவோரின் மனமும் உருகிவிடுகிறது. உலகளாவிய நிலையில் சாக்லெட் காதலோடு தொடர்புடைய பண்டமாகவே மக்கள் கருதுகிறார்கள்.
தொடர்புடைய சுட்டிகள்: