Friday, July 12, 2013

சிங்கம் 2 - பாக்குறியா பாக்குறியா


பிருமாண்டமான ஆங்கில திரைப்படங்களை கடந்த நூற்றாண்டில் கண்டு கழித்து இன்புற்றிருக்கிறோம். 'வெள்ளைக்காரன் நம்மல விட 20 வருஷம் முன்னுக்கு இருக்கான் டா' என பேசிக் கொள்வார்கள் அப்போதைய சமூக வலைத்தளம் இல்லாத விமர்சகர்கள். அரை குறை ஆடைகளை கண்டால் கண்னை மூடிக் கொள்ளும் நல்ல பிள்ளையாக இருந்த காலம். 

சில படங்கள் பார்ட் 1 பார்ட் 2 என வெளியிடப்பட்டு தூள் கிளப்பும். என்னளவில் அர்னால்டின் பிரடேட்டர், டெர்மினேட்டர் போன்ற படங்கள் 'வாவ்' சொல்ல வைத்த படங்களாகும். அவ்வேளைகளில் ஏன் தமிழ் படங்கள் மட்டும் இப்படி பாகம் பாகமாக வருவதில்லை என ஏங்குவதுண்டு. 

ரஜினியும் கமலும் பாட்ர்1 பார்ட்2 என மீண்டும் மீண்டும் ஒரே தலைப்பிலான படங்களில் நடித்திருந்தால் பள்ளி மாணவனான நானும் நண்பர்களோடு வீர தீரமான சில விமர்சனங்களை செய்திருப்பேன். முன் ஜென்ம பாவத்தால் அப்படியான வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விட்டது.

மூத்த விமர்சகர்கள் சொன்னது உண்மையோ என்னவோ 20 ஆண்டுகள் கழித்து இப்போது தமிழ் திரைப்படங்களை பாகம் வாரியாக பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. அப்போதய நிலையில் தமிழில் நீயா மற்றும் கல்யாண ராமன் போன்ற திரைப்படங்களே இரண்டு பாகங்களில் வெளிவந்ததாக நினைக்கிறேன். 

சிங்கம் 2 வந்த தினமே வலையுலக விமர்சகர்கள் அதை கிழிந்து பிழிந்து தோரணம் கட்டிவிட்டதால் அதை விரிவாக விமர்சிக்க அவசியமில்லை என்றே கருதுகிறேன். இதற்கு ஏன் இவ்வளவு வரவேற்பு. முண்டியடித்து பார்க்கச் செல்கிறார்கள். பார்க்கிறார்கள் பார்க்கிறார்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். 

அரி எனும் மாமனிதனுக்குள் ஒரு காலாச்சார கவலன் எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கிறான். 'பாக்குறியா பாக்குறியா' என சூரிய கார்ஜிப்பதை போல் படமெடுக்கும் போதெல்லாம் அந்த கவலனும் வசனத்தை பொழிந்து தள்ளிவிடுகிறான். நல்லவன் வல்லவன் பாசம் நேசம் என எல்லாமே குடும்ப கூட்டத்துக்கு ஏற்றதாய் அமைத்து வாயில் ஈ போவது அறியாமல் படத்தில் மூழ்கச் செய்கிறார். எது எப்படியோ சந்தானத்தின் காமெடி லீலைகள் பச்சையான அசைவ வகையே. 

நாக்கில் பாம்பை கொத்த வைத்து போதை ருசிக்கிறான் ஒரு கிங் காங் வில்லன். அவன் ஒரு ஆப்பிரிக்க கடத்தல் டானாம். முதல் பாகத்தில் உள்ளூர் ரௌடியுடனும் இரண்டில் வெளி நாட்டு டானுடனும் மூன்றில் வேற்று கிரகவாசிகளுடனும் சிங்கம் சண்டையிடும் என நம்பப்படுகிறது. 

என் இதயம் இது வரை துடிக்கவில்லை என முதல் பாகத்தில் ஒரு பாடல் இருக்கும் அதில் அனுஷ்காவில் நெஞ்சில் வட்ட வட்ட வானவில்லை விட்டு கடுபெற்றி தொலைத்தார்கள். அதே வேலையை இரண்டாம் பாகத்திலும் செய்து வயிற்றெரிச்சலை கொட்டி திர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

அப்பட்டமாக சொல்லலாம் இது நிச்சயமாக விஜயகாந்த் நடித்திருக்க வேண்டிய திரைப்படம். இதன் கதைக் கருவினை சில யுகத்திற்கு முன் அவர் யோசித்துவிட்டார். அப்போது கொண்டாடி நெகிழாத தமிழினம் இப்போது ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. 

இந்த படம் வெற்றியடையளாம். அதனால் மூன்றாம் பாகமும் வெளியாகலாம். நானும் இப்படி இன்னொரு மொக்கையை போடலாம். 

பி.கு: இப்பதிவு முழுக்க ஐ-பேட் நான்கில் தட்டச்சு செய்து பதியபட்டுள்ளது :-)

4 comments:

Anonymous said...

என்ன கிரகத்தில் டைப்படித்து எழுதினாலும் தப்பில்லாமல் அடித்து எழுத வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

Anonymous
Sollithingale... Seinjiduvom....

Anonymous said...

really nice...keep it up...:-)

RAHAWAJ said...

நல்லா இருந்தது விமர்சணம், உங்களின் பயணம் பற்றி ஒரு விரிவான பதிவு போடுங்க பாஸ்