Tuesday, February 19, 2019

The Art of War- சான் ட்சுவின் போர்க் கலை

The Art of War (போர்க் கலை) பண்டைய சீனாவின் மிக முக்கியமாக நூல்களில் ஒன்று. இந்நூலை தோற்றுவித்தவர் Sanzi எனும் போர்க் கலை நிபுணர். சான்ட்சு வாழ்ந்த காலகட்டம் கி.மு544 முதல் கி.மு496 வரை. இக்காலகட்டத்தை சீனாவின் Spring and Autumn period எனக் குறிப்பிடுகிறார்கள். சான்ட்சு போர் முறைகளை மட்டும் இன்றி பல வாழ்வியல் தத்துவங்களையும் அந்நூலில் கூறுகிறார். போரின்றி வெற்றி காண்பதே சிறந்த போர் முறை வெற்றியாக சான்ட்சு கூறுகிறார். தற்போது சீனா மும்முரமாக செயல்பட்டு வரும் Belt and Road Initiative (BRI) மாபெரும் திட்டமும் இந்த போர்க் கலை நூலின் ஓர் அம்சமென கூறும் கருத்துக் கணிப்புகள் உண்டு.

சீன போர் முறைகளில் வில் எய்தல் பெரும்பாங்காற்றியுள்ளது. சீனப் பெருச்சுவர்களில் தொடர்ச்சியான அம்பெய்யும் துளைகளை காண முடியும். கோட்டை மதில்களும் காவற்கோபுரங்களும் வில் பாயும் தூரத்தை கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. வில் எய்யும் இராணுவ படையினர் தன் கொண்டையை இடப்பக்கம் முடிந்து கட்டி இருப்பார்கள் அது முதுகின் பின் இருக்கும் அம்புகளை எடுக்க எளிதாக அமையும். சீன பேரரசு காலத்தில் அரசு தேர்வில் தேர்ச்சி பெறவும் வில் வித்தை கற்றிருக்க வேண்டும். இது வில் முறை பற்றிய சிறு தகவலே.

The Art of War வில் வித்தையை மட்டும் கற்பிக்க வில்லை. அந்நூல் போர் வியூகங்களை 13 பகுதிகளாக நமக்கு விளக்குகிறது. இந்த நூல் 8-ஆம் நூற்றாண்டில் ஜப்பானிய மொழியிலும் 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இது வரை 29 மொழிகளில் இந்நூல் வெளியாகி உலக மக்களால் வாசிக்கப்பட்டுள்ளது. உறுதியான இராணுவ அமைப்பு நாட்டின் பலம். நமது நிலையின் தெளிவும், எதிரி பற்றிய தெளிவும் போர் வெற்றியின் திறவுகோல் என்கிறார் சான்ட்சு.

சான்ட்சு போர் தளபதியாகவும், போர் வீயூக நிபுணரகவும் பணியாற்றி இருக்கிறார். இருந்தும் சான்சு ஒருவரால் மட்டும் இப்படிப்பட்ட போர் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியிருக்க முடியாது என்பது ஆய்வாளர்களின் கருத்து. பல வெறு காலகட்டங்களிலும் சூழ்நிலைகளிலும் அமைக்கப்ப்ட்ட வீயூகங்களை சான்சு தொகுத்து அமைத்ததாகவும் தகவல் உண்டு. ஆனால் இந்த போர் களஞ்சியம் அமைந்ததில் சான்சுவின் பெரும் பங்கை யாரும் மறுக்கவில்லை.

No comments: