Monday, February 20, 2012

கொசுறு 20-02-2012

நான் தவறு செய்கிறேன் என நினைப்பது நெகடிவ் அப்ரோச்... நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என நினைப்பது பாசிடிவ் அப்ரோஜ்... என தமது தத்துவ புத்தகத்தில் இருந்து இந்த வரிகளை எடுத்து வீசுகிறார் சாணியடி சித்தர்.

Positive approach for negative people எனும் தலைப்பில் படித்த ஒரு கட்டுரையின் சுவாரசியத்தை பகிர்ந்து கொள்கிறேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் டாக்டர்களும் மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனையில் வேலை சமயங்களில் புகைத்திருக்கிறார்கள். இதை தவிர்க்கும் படியும் புகை பிடிக்காத சமூகம் உருவாக வேண்டும் என்றும் ஒரு டாக்டர் வழியுருத்தினார். அந்த மருத்துவரும் ஒரு வெண்சுருட்டு விரும்பி என்பதால் அவரின் கருத்து சாத்தியமாகாத ஒன்றென அக்காலகட்டத்தில் நம்பினர்.
******

பாலகுமாரனின் எழுத்துகளை வாசித்தவர்கள் அவருடைய இரும்பு குதிரைகள் மற்றும் மெர்க்குரி பூக்கள் எனும் இரு நாவல்களையும் மாஸ்டர் பீஸ் என அடித்துக் கூறுவார்கள். அவர் எழுத்துகளில் நான் மிக இரசித்தது பயணிகள் கவனிக்கவும்.

குதிரைக்கு கட்டற்ற வேகம் அவசியம். இரும்பு குதிரை எனும் இச்சொல்லை எழுதும் போது ‘க்’ எனும் எழுத்தினை தவிர்த்திருக்கிறேன். இரும்புக்கு க் போட்டு எழுதும் போது அச்சொல்லின் வேகத்தை அது தகர்பதாக சொல்கிறார் பாலகுமாரன். இலக்கியவாதிகள் ஏற்க மாட்டார்கள் எனில் ஏற்காமல் போகட்டுமே என ஜாலியாக சொல்லி நாவலை முடிக்கிறார்.

இது பாலகுமாரனின் வாழ்வில் ஏற்பட்ட உண்மை நிகழ்வாக இருக்கக் கூடும் எனும் எண்ணம் நாவலின் ஒரு சில இடங்களில் நிரடுகிறது. நமது வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை நாம் பெரிதாக கருதுவது கிடையாது. ஆனால் இக்கதையின் முக்கிய பாத்திரமான விஸ்வநாதனின் வாழ்க்கைச் சம்பவங்கள் இயல்பானவை. அதை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் பாலகுமாரன்.
******

மூன்று புள்ளி ஒரு ஆச்சரியக்குறி எனும் கோட்பாட்டில் லட்சக்கணக்கான கவிஞர்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் கவிதையின் டிமாண்ட் அதிவேகமாக சரிந்துவருகிறது. இனி உங்கள் காதலிக்கு கவிதை எழுத மூலையை கசக்கிக் கொள்ள வேண்டாம். ஐந்து நிமிடங்களில் உங்களுக்கு தேவையான கவிதையை தயர் செய்து கொடுக்கும் குழு ஒன்றை அமைத்துள்ளேன். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. கிரேடிட் கார்ட்டு அசேப்டபல்.
******

சாபு வகை போதை பொருளை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா. இதை ஐஸ் என்றும் குறிப்பிடுவார்கள். வெளிச்சம் ஊடுருவும் சின்ன சின்ன கிரிஸ்டல் பொடிகளை போல் இருக்கும். பொதுவாக சிகரட்டு பாக்கெட்டில் இருக்கும் ஒரு வகை மஞ்சல் அல்லது சில்வர் காகிதத்தை தேய்த்து சமன்படுத்தி கொள்வார்கள். அதன் மேல் இப்பொடிகளை போட்டு சூடுகாட்டி ஸ்ட்ரா வைத்து மூக்கில் உறிஞ்சிக் கொள்வார்கள். ‘செர்கமே என்றாலும்’ போல் இருக்குமென இதன் அதி விரும்பிகள் கூறுகிறார்கள்.

இந்த ஐஸ் வகை போதை பொருள் இரண்டாம் உலகப் போரின் சமயம் அறிமுகமானது. போதை பொருள் தடுப்பு பிரிவினர் இதனை ‘designer drugs' என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் சமயம் போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் இதை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்கள் விமானிகள் உட்பட. இவ்வகை போதை பொருளானது அதை எடுத்துக் கொள்ளும் நபர் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் இருக்க உதவுமாம்!

அமேரிக்கா, சீனா, ஜப்பான் என எல்லா இராணுவமும் கலந்துகட்டி இதனை பயன்படுத்தி இருப்பதால் இதை கண்டுபிடித்த கனவான் யார் எனும் சர்ச்சை இன்னமும் ஆய்வில் உள்ளது. இருந்தும் இது சப்பை மூக்குகாரனின் சதி வேலை தான் என அடித்துக் கூறுகிறது ஒரு தரப்பு. மலேசியாவில் இதன் ஆதிக்கம் 90களின் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது. சபா மாநிலத்தில் பிலிபைன்ஸ் நாட்டின் கள்ளக் குடியேகளால் கொண்டுவரப்பட்டதாக சொல்கிறார்கள்.நாளடைவில் அதன் பயன்பாடு பரந்து விரிந்து பல பகுதிகளுக்கும் சென்றுவிட்டதாக கூறுகிறார்கள். மலேசியாவில் இது வரை இதன் வர்த்தகத்தில் பிடிபட்டவன் ஒரு ஈரானியன். அவன் ஒரு மில்லினியரும் கூட.

சமகால இலக்கியவாதிகளை போல் சமகால போதை பொருள் வகையில் குதிரை மாத்திரை கொஞ்சம் பேமஸ். இதை உட்கொண்டு நான்கு நாட்கள் கலவியில் ஈடுபட்ட ஒரு பெண்னை பற்றி அடுத்த பகுதியில் ஆவலுடன் எதிர்பாருங்கள்...
******

சமீபத்தில் கோவி கண்ணன் மற்றும் வெற்றிக்கதிரவன் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றிக்கதிரவன் பல கவிதைகளை பற்றி பேசினார். ஐபோனில் கவிதை பக்கங்களை படம் பிடித்து பத்திரபடுத்தி வைத்துள்ளார். ஓய்வு சமயங்களில் அதை எடுத்து படித்துக் கொள்வாராம். சரி நமக்கும் கவிதைக்கும் தான் ஏழாம் பொருத்தமாச்சே அதனால் என் தரப்பில் விவாதிக்க ஒன்றும் இல்லாமல் போனது. அது எப்படி சார் இந்த கவிதைனு சொல்லும் விசயம் உங்களுக்கு புரிகிறது என கேட்டேன். அது ஒரு அலைவரிசைதான் தம்பி, அந்த அலைவரிசை பிடிபட்டுச்சுனா நீ கண்டிப்பா கவிதாவை ’மன்னிக்க’ கவிதையை இரசிக்கலாம் என சொன்னார் அண்ணன்.

வெற்றி அண்ணனிடமிருந்து ‘திசை கண்டேன் வான் கண்டேன்’ எனும் சுஜாதாவின் புத்தகம் எனக்கு இலவசமாக கிடைத்தது. படித்து முடிக்காமல் வைக்க முடியவில்லை. அப்படி ஒரு ஸ்பீடான கதை. இந்த பூமி அழியுமாயின் மனிதர்களின் மாற்றம் எப்படி இருக்கும் எனும் கற்பனையை நகைச்சுவை கலந்த யதார்த்த தோடு எழுதியிருக்கிறார். ’மனிதர்கள் தத்தம் துரோகங்களுக்கு திரும்பினார்கள்’ எனும் இதன் கடைசி வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இது ஒரு மாய யதார்த்த கதைதான் சைன்ஸ் ஃபிக்‌ஷனின் சேர்த்தியாக கருத முடியாது என்றே கருதுகிறேன். சைன்ஸ் விசயங்களில் சுஜாதாவின் 21-ஆம் விளிம்பு புத்தகத்தின் ஒரு கட்டுரை இப்போது நினைவிற்கு வருகிறது. டி.என்.ஏ தொடர்பான ஒரு விசயம் என்னவெனில் எதிர்காலத்தில் தேவையில்லா அணுக்களை நீக்கி உடலில் உள்ள நோயை குணப்படுத்தும் முறை ஏற்ப்படலாம் என்பதே. இது சாத்தியமாகலாம்.
******

பொறித்த கோழி விற்பனை செய்யும் ஒரு துரித உணவகம். கொஞ்சம் பிசியான ஏரியா. மக்கள் விரும்பும் இடம் என்பதால் அதிக வாடிக்கையாளர்கள் செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக அன்று விற்பனை மிகுதியில் கோழி தீர்ந்து விட்டதாம். கடுப்பாகி போன ஒரு கஸ்டமர் சத்தம் போட ஆரம்பித்துவிட்டான். சத்தத்தின் அழுத்தம் தாங்காத வேலையால் கஸ்டமரை கை வைத்துவிட அது தேசிய பிரச்சனையாகிவிட்டது. தற்சமயம் இன பிரச்சனையாக பேசப்படுவது தகாத ஒன்று. 2012-ஆம் ஆண்டு கோழி துண்டு கிடைக்காததால் ஒரு நாட்டில் இன கலவரம் ஏற்பட்டது என சரித்திரம் பேசினால் கேவலம் அமைச்சரே.
******

’பையோ மெட்ரிக்’ பாஸ்போர்ட் எனப்படுவது சில டிஜிடல் அடையாள கோட்பாடுகளை கொண்டது. ஸ்கேனரின் ஒரு இழுப்பில் நமது சரித்திரத்தை கொட்டிவிடும். பையோமெட்டிக்கின் அடையாளம் நெருப்பு பெட்டியை போல் ஒரு சின்ன கட்டம். கட்டத்தை இரண்டாக பிரிக்கும் நடுவில் வட்டம் கொண்ட ஒரு கோடு. இந்த வகை அடையாளம் கொண்ட கடவுச் சீட்டுகள் (அதாம்பா பாஸ்போட்டு) மின் படிப்பி (பையோமெட்ரிக் சிப்ஸ்) வசிதிக் கொண்டதென அர்த்தமாகும்.

இன்னமும் சில நாடுகளில் இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. சீனா தேசம் இதில் அதிவேக அடைவை எட்டி உள்ளது. ஒருவரின் மருத்துவ குறிப்பு முதல் அந்த சிப்பில் அடக்கிவிடுகிரார்கள். வெளிநாட்டில் தவறு செய்து பிடிபடும் ஒரு சீன குடிமகன் வெளிநாட்டு தண்டனையோடு தன் நாட்டிலும் தண்டனை பெறுவான். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு வெளி நாடு செல்ல அனுமதியும் மறுக்கப்படும். இந்தியாவில் வெளிநாட்டில் பணி புரியும் டிப்லோமட்டிக் ஊழியர்களுக்கு பையோமெட்ரிக் பாஸ்போர்ட் கொடுக்கப்படுகிறது. சில திங்களுக்கு முன் எனது மாமாவின் கனடா பாஸ்போட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கனடா பையோமெட்ரிக் சிப்சை தனது கடவுச்சீட்டின் இரண்டாம் பக்கத்தில் புதைத்திருக்கிறது. பயோமெட்ரிக் பாஸ்போட் இல்லாத ஒரு நாட்டின் குடிமகன் ஜனவரியில் பிரம்படியும் சிறை தண்டனையும் பெற்று அனுப்பப்பட்டு மீண்டும் நவம்பரில் சந்தித்ததும் உண்டு. நவம்பரில் அவன் ஜனவரியை மறுபடியும் சந்தித்தான்.

பொதுவாகவே இந்த சிப்ஸ்கள் பாஸ்போட்டின் கடைசி பக்கத்தில் இருக்கும். மெல்லிய நெகிழி (பிளாஸ்டிக்) தாளை போல் இருப்பதால் பயனர்கள் இதை அவ்வளவாக அறிந்திருக்க மாட்டார்கள். உங்களது பயோமெட்ரிக் பாஸ்போடின் <<<< >>> போன்ற அடைப்புக் குறிக்குள் எழுத்துகளுக்கும் எண்களுக்கும் ஒரு கணக்கு விகிதம் உள்ளது. சிப்ஸ் பழுதாகினாலும் மெசின் வேலை செய்யாமல் போனாலும் இதில் கொஞ்சம் கூட்டல் பெருக்கல் வகுத்தலை போட்டு போலியா அல்லது நிஜமானதா என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

பயோமெட்ரிக் வகைகள் பல உண்டு. கால ஓட்டத்தில் இவை மாற்றம் அடைந்துக் கொண்டு வருவதிலும் வியப்பேதும் இல்லை. புலக்கத்தில் இருக்கும் பையோமெட்ரிக் வகைகள், கைரேகை பதிவு செய்யும் முறை, டி.என்.ஏ, கண்ணில் இருக்கும் பூபா, முகம் என நீல்கிறது. இதை பற்றி மட்டும் ஒரு தனி பதிவு எழுதலாம். மொத்தத்தில் இந்த பையோமெட்ரிக் அமலாக்கம் குற்றச் செயல்களின் ஃபோரென்சிக் விசாரனையின் ஆரம்ப கட்டத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.
******

சமீபத்தில் படித்து மனதை கவர்ந்த ENTER கவிதை:

யாருக்கோ காத்திருக்கும்
செய்து முடித்த
சவப்பெட்டியாய் நாம்
என்னில் நீயோ
உன்னில் நானோ
புதைக்கப்பட்டால்
பிரசவிப்போம்
பால் வீதியில்
சில நட்சத்திரங்களை

மழைக்கும் வெயிலுக்கும்
ஒரே குடை
வாழ்விற்கும் சாவிற்கும்
ஒரே மலர்
எனக்கும்
என் பிணத்திற்கும்
நீ
-பின்னிரவுப் பெருமழை தொகுப்பில் ரிலுவான் கான்
******

எனது முகபுத்தகத்திலிருந்து:
கண்ணதாசன் தனது வாழ்க்கையை மூன்று பாகங்களாக பிறித்து எழுத நினைத்த புத்தகங்கள் வனவாசம், மனவாசம் மற்றும் அஞ்ஞானவாசம். இதில் மனவாசம் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அவர் நோய்யினால் இறந்து விடுகிறார்.

மனவாசத்தில் அவர் எழுதிய ‘தாய்கிளி’ எனும் கவிதையே அவர் கடைசியாக எழுதியது. தாய்லாந்து சென்றிருக்கும் சமயம் அவரோடு இருந்த ஒரு தாய்லாந்து பெண்னை பற்றிய கவிதை. இது அந்த தாய்லாந்துகாரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை :-). ஆக வனவாசம் முழுவடிவிலும் மனவாசம் பாதியாகவும் அஞ்ஞானவாசம் எழுதப்படாமலும் போனது.

மறைவின்றி கூறப்படும் கண்ணதசனின் வாழ்க்கை வரலாறு எதற்கும் அடங்காத காட்டாறகவே தெரிகிறது. முன்னுரையில் அவரே செல்கிறார் '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழ முயற்சியுங்கள்''.
*********