Thursday, April 24, 2008

மனித நேயம்- குட்டிக் கதை!!!

மார்கழி மாத கடும் குளிர் நாட்டு மக்களை ஆழ்ந்த தூக்கத்தில் தாளாட்டிக் கொண்டிருந்தது. தம் உடலை கனத்த ஆடைகளில் புகுத்திக் கொண்டு நகர்வலத்திற்கு ஆயத்தமானார் வாமனபுரி ராஜா (சும்மா-அர்புதத் தீவு மகா ராசாவ நினைச்சுக்குங்க). அரண்மனை வாயில் தனக்கென (special-ஆக Benz) நிருத்திவைக்கப் பட்டிருந்த வண்டியில் ஏரி பயணிக்கலானார்.
வண்டிப் போகும் வழியில் பாதையோரமாக ஸ்ரீ விஜயன் என்ற துறவி கோவணம் மட்டுமே அணிந்து உறங்கிக் கொண்டிருப்பதை கண்டார் மகாராஜா (feelings) மனதில் கருணை கசியவே வண்டியை நிறுத்தி விட்டு(parking) கிழே இறங்கினார். தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த போர்வையை அமைதியாக துறவியின் மீது போர்த்தினார்.
ஸ்ரீ விஜயன் யாரிடமும் எதையும் கைநீட்டிப் பெற மாட்டார் என்பது ராஜாவுக்குத் நன்றாவே தெரியும். எனவே அவர் தூக்கம் தெளிந்து எழுவதற்குள் அங்கிருந்து புரப்பட்டார்.
சற்று நேரத்தில் கண் விழித்தத் துறவி தன் மீது போர்வை போர்த்தியிருந்ததை பார்த்துத் திடுக்கிட்டார்.
“எனக்கு இந்தக் கோவணம் போதாது என்று யாரோ போர்வையைப் போர்த்திவிட்டு போயிருக்கிறார்களே! துறவியான எனக்கு எதற்கு இந்த சுகமெல்லாம்”, என்று கூறியவாரு நாலா புறமும் பார்வையை ஓட்டினார். சற்று தூரத்தில் ஒரு நாய் குளிரால் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார்.
“எனக்காவது கோவணம் இருக்கிறது. இதனிடம் எதுவும் இல்லை. தன் துன்பத்தை யாரிடமாவது சொல்லித் தீர்க்கலாம் என்றாலும் முடியாது. பாவம் வாயில்லா ஜீவன்”. என்று கூறியபடியே நாய் மீது அந்தப் போர்வையை போர்த்தினார் ஸ்ரீ விஜயன்.


(இது அந்த காலம். இரக்க குணம் அனைவரிடமும் மேலோங்கி இருந்தது. இக்காலத்தில் அந்த துறவி பாதையோரத்தில் தூங்கியிருந்தால் அக்கோவணமும் இருந்திருக்குமா என்பது கேள்விக் குறிதான். இரக்க குணத்தை நீர் ஊற்றி வளர்ப்போம்.)
(ஆரம்பப் பாட சாலையில் என் ஆசான் கூறிய கதையிது. கதா பாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இல்லை. பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டும்).

Saturday, April 19, 2008

அவள் என் தேவதை...



தந்தையின் கட்டாயத்திற்காக தான் கணினி கற்கும் இடத்திற்கு வந்தேன். கணினி வகுப்பு வரும் போது மனதில் எத்தனை முறை வெடித்துக் கொண்டேன் தெரியுமா..... தேவதை நீ அங்கு வந்து சேர்ந்த பிறகு தான் நான் அங்கு சேர்ந்ததற்கு அர்த்தம் பிறந்தது.


கணினி கற்க வந்த எனக்கு கன்னி மனதை கற்க ஆவல் வந்தது. கன்னி மனதை படிப்பதற்கு உலகத்திலே இதற்கு மட்டும் தான் எந்த கல்லூரிகளும் இல்லை, பல்கலைக்கழகங்களும் இல்லை. அவரவர் சொந்த முயற்சியில் கற்கிறார்கள். எந்த தேர்வில் தோல்வி அடைந்தாலும் வருந்தாத இளைஞர் படைகள் இதற்கு மட்டும் வருந்தும்.


ஐய்யோ...தோல்வியா ... இதில் மட்டும் தோல்வியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எதிலும் தோற்றாலும் அடுத்த முயற்சியில் வென்று விடலாம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்..... காதலில் அடுத்த முயற்சி என்பது வெறோரு பெண்ணாகத் தான் இருக்கும்.... அவளை மறந்து வேறொரு பெண்ணா...? அப்படி நினைத்து கூட பார்க்க முடியவில்லை....


பெண்ணை காதலித்து தோல்வி அடைந்தால் காதலிக்க வேறொரு பெண்ணை தேடலாம். தேவதை காதலித்து தோற்றவன் வேறோரு தேவதையை எங்கு போய் தேடுவது. கிளியோபட்ரா அழகில் கூட மூக்கு நீளம் என்ற குறை உண்டு. உன் அழகில் நிறைகள் மட்டுமே உள்ளன. எனக்கு தெரிந்து இந்த மண்ணில் இருப்பது ஒரு தேவதை .... அதுவும் அவள் மட்டும் தான்.... இதில் தோல்வியே இருக்க கூடாது... தோற்றாலும் என் மரணத்திலே தான் முடிய வேண்டும்.


நீ தீண்டுவதற்கு அந்த Keyboard என்ன தவம் செய்ததோ.... உன் விரல் நுணி படுவதற்கு ஒவ்வொரு ஆங்கில எழுத்துக் கூட தமிழ் கற்குமடி.... உன்னிடம் பேசுவதற்காக... தமிழை வளர்க்க சங்கங்கள் தேவையில்லை. உன்னை போல் தேவதை போதும் தமிழ் வளர்ந்து விடும். உன்னால் எல்லோரும் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள்..... உலகம் முழக்க தமிழ் பறப்புவதற்கு உன்னை போன்ற தேவதைகளே மண்ணில் பிறக்க வேண்டும்.


வீட்டில் எலி என்றால் அஞ்சுவாய் என்று சொன்னாவளே.... ஆனால் கணினிப்பொறி முன் எலியைத் (Mouse) தான் பிடித்துக் கொண்டு இருக்கிறாய். உன்னை பயமுட்டிய எலி, பல்லி, பூச்சிகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும்.... உன்னை பய முட்டியதற்காக ! அவைகள் எல்லாம் உன்னை தரிசிக்க வந்தது என்று உனக்கு புரியவில்லையா... எலி, பூச்சிகளுக்கு வாயில்லை உண்மையை சொல்வதற்கு.... அதற்கு வாய் இருந்தால் அது கூட உன்னை பற்றி கவிதை பாடும்...இந்த கணினி கூட ஐந்து நிமிடத்தில் பதில் அளிக்கும். ஆனால் நீ ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவேளை விடுவது தான் என்னை பாதிக்கும்.


நாவலில் கூட அடுத்தது என்ன நடக்கும் என்று கனித்து விடலாம். நீ அடுத்தது என்ன பேசுவாய் என்று கனிப்பதே மிகவும் கடினம். கணினி இயங்கும் வேகம் தெரியும். ஆனால், உன் இதயம் இயங்கும் வேகத்தை அறிய கணினிக் கூட தோற்கும்.


உன் அறிமுகம் கிடைத்தற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால்..... நீ எனக்கு கிடைத்தால்... உலகில் இருக்கும் அத்தனை ஆண்களின் பொறாமைக்கும் நான் தான் சொந்தக்காரனாக இருப்பேன். நீ எனக்கு கிடைத்த பிறகு மற்றவர் பொறாமை என்னை என்ன செய்யும்.


மானிடனாய் பிறத்தல் அறிது என்ற வாக்கியம் உண்மை என்று இன்று தான் புரிந்துக் கொண்டேன். இந்த பல்லி, எலிகளுக்கு இல்லாத பாக்கியம் எனக்கு கிடைத்தே.....!பெண்ணைப்பார்த்தால் காதல் கவிதை தான் வரும்.... தேவதை உன்னை பார்த்தால் காதல் காவியமே வரும். உன்னை பார்த்த இக்கணம் தோன்றிய கவிதை இது...


246 தமிழ் எழுத்துக்கள் வாடுது....'நீ' என்ற எழுத்து மட்டும் புன்னகை சிந்தியது...உன் பெயரை விட அதிகம் உன்னிடம் உச்சரிப்பவர்கள் அந்த எழுத்தை தானே ...


கவிதை எழுத கற்று தந்த உன் அழகு.... கொடுக்க தைரியத்திற்கும் தடைப் போட்டது. தடைகள் எல்லாம் தகர்க்கும் வரை உன்னை வர்ணிக்கும் என் கவிப்பணி தொடரும்.....

Wednesday, April 16, 2008

பூவும் பாசமும்- குட்டிக் கதை

(தந்தையின் பாசம்)

தமிழ்ப் பள்ளி ஒன்றில், ஆசிரியர் நன்னெறிக் கல்வி பாடத்தை போதித்துக் கொண்டிருந்தார். அன்பு செலுத்துதல் சம்மந்தமான தலைப்பை ஒட்டி விவாதித்த சமயத்தில், வகுபிலிருந்த மாணவனொருவன் சந்தேகத்துடன் ஒரு கேள்வியை கேட்டான்.


மாணவன்: ஐயா, நம் மீது அதிக பாசம் கொண்டவரை நாம் எப்படி அடையாலம் கண்டு கொள்வது? அதே சமயம் எவ்வாரு அவர்களின் பாசத்தை நீடிக்கச் செய்வது?

ஆசிரியர்: உண்மையான பாசத்தை நீ அறிந்துக் கொள்ள விரும்புகிறாயா? சரி முதலில் நான் சொல்வதைச் செய். பிறகு அதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்வாய்.

மாணவன்: சொல்லுங்கள் ஐயா செய்கிறேன்.

ஆசிரியர்: நம் பள்ளி தோட்டத்திற்குச் செல். அங்கு இருக்கும் பூக்களை பார்த்துக் கொண்டு நட. அதில் மிக அழகாக காட்சியலிக்கும் ஒரு பூவை தேர்வு செய்து கொண்டுவா. ஆனால் நீ நடந்து முடித்த பாதையை திரும்பி பார்க்காதே. உன் முன்னால் இருக்கும் பூவை மட்டுமே தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும்.

மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்த அம்மாணவனின் கையில் எந்த ஒரு பூவையும் காணவில்லை.

ஆசிரியர்: நான் கொண்டு வரச் சொன்ன பூ எங்கே?

மாணவன்: ஐயா, நான் பூக்களை பார்த்தபடி நடந்துக் கொண்டிருந்தேன். என் கண்களில் நிறைய அழகான பூக்கள் தென்பட்டன. ஆனால் நீங்கள் கேட்டதோ மிக அழகான பூவை அல்லவா. ஆகயால் நான் தொடர்ந்து நடந்தேன். பின் இருந்த பூக்கள் சில அழகாக இருந்தன ஆனால் நிபந்தனை படி நான் பின் நோக்கிப் பார்க்கக் கூடாது. இறுதியில் என்னால் எந்தப் பூவையும் தேர்வு செய்ய முடியாமற் போனது.

ஆசிரியர்: அதுதான் நீ கேட்ட கேள்விக்கான பதில்.

மாணவன்: விளங்கவில்லை ஐயா.

ஆசிரியர்: நம் மீது அன்பு காட்டும் ஒருவர் நம் அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது. அவர்களின் பாசத்தை மாரியாதை செய்ய வேண்டும். வாழ்க்கையை பின் நோக்கிப் பார்த்து பாசத்தை எடை போட கூடாது. இறந்த காலத்தை நாம் சரி செய்ய இயலாது. நம்மோடு நிகழ்காலத்தில் இருப்பவரோடு கருத்து வேருபாடுகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள முடியும். அவர்களது பாசத்தை நிலைக்கச் செய்ய முடியும். நம் மீது அன்பு செலுத்த பலர் இருந்தாலும், நிகழ்காலத்தில் இருப்பவரே சிறந்தவர். நம் வாழ்க்கையின் சுக துக்கங்களை பகிர்துக் கொண்டு நம் மீது பாசம் காட்டுபவருக்கு, நேர்மையாக நடந்துக் கொள்வதே சிறந்த குணமாகும்.