Monday, February 11, 2019

இந்தப் பொருட்களை சீனர்கள் பயன்படுத்தக் கூடாது


சீனப் பேரரசுகளின் ஆட்சி காலத்தில் பல பொருட்களை மக்கள் பயன்படுத்தக் கூடாது. அதில் முக்கியமாக 9 வகையான மிருக சின்னங்களும் அடங்கும். அப்படியான பொருட்கள் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்த முடியும். அரச மரபில் அந்த 9 வகையான மிருகங்கள் சுவர்கத்தின் பிள்ளைகளாக கருதப்பட்டன. அரசனும் சுவர்கத்தின் பிள்ளை என கருதப்பட்டது கூடுதல் தகவல். சரி, அந்த மிருகங்கள் யாவை எனப் பார்த்தால் டிராகன், ஃபினிக்ஸ் பறவை, ஆமை, புலி, ஒரு ஜோடி க்ரேன் பறவை, ஒரு ஜோடி சிங்கம், ஒற்றைக் கொம்பு குதிரை என இதன் பட்டியல் செல்கிறது. தெய்வீக மிருகங்கள் என்பதால் இம்மிருகங்களின் சின்னம் பொறித்த பொருட்களை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள். அச்சமும் கொண்டார்கள். இம்மிருகங்களுக்கு அதீத சக்தி இருப்பதாகக் கருதினார்கள்.

1899-ல் சீனாவின் Xiaotun எனும் பகுதியில் நடந்த ஒரு சம்பவம். அங்குள்ள விவசாய நிலத்தில் சில எழும்புகளும் ஓடுகளும் கிடைத்தன. அவை சகல நோய் நிவாரனியான டிராகன் எழும்புகளெனக் கருதினார்கள். அவற்றை மறைமுகமாக தரகர்களிடமும், தரகர்கள் அவற்றை வைத்தியச் சாலையிலும் விற்றுவிடுகிறார்கள். அச்சமயம் Wang Yirong எனும் கல்வெட்டு நிபுணருக்கு கடுமையான மலேரியா காய்சல் ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்காக எழும்புகளை வாங்கிய அவர் அற்றில் ஓவியம் போன்ற வடிவங்களை கண்டார். பரிசோதனையில் அவை பண்டைய சீன எழுத்து வடிவங்கள் என்பதை கண்டறிந்தார்.

மேலும் சில நிபுணர்களோடு அந்த எழும்புகள் கிடைத்த தடையத்தை தேடினார். தரகர்கள் பொய் உரைத்தார்கள். அவை ஹெனான் எனும் பகுதில் கிடைத்தகாத கூறினார்கள். வாங் யீரோங் அதிக விலை கொடுத்து சித்திர எழுத்துகள் கொண்ட பல எழும்புகளை வாங்கினார். Luo Zhenyu எனும் அவரின் நண்பர் சில பல முயற்சிகளுக்குப் பின் அவை கிடைத்த இடத்தைக் கண்டறிந்தார். அந்த இடம் Yin Ruins. ஆராய்சியில் அவை ஷாங்க் பேரரசு காலத்திலான குறிப்புகள் செதுக்கப்பட்ட எழும்புகள் என அறியப்பட்டது.

ஷாங்க் பேரரசு மிக தொன்மையான அரசாகும். கி.மு 14-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அரசு. உலகின் மறு பக்கத்தில் அப்போது தான் யூத மதத்தை தோற்றுவித்த மோசஸ் (கி.மு 1400) பிறந்திருக்கிறார். சீனா எனும் பொரும் தேசத்தை இணைத்த சின் அரசனும் பிறந்திருக்கவில்லை. அந்த எழும்புகளில் கிடைத்த குறிப்புகள் அரசர்களின் பெயர் ஆட்சியமைப்பு முறை என்பன அடங்கியதாக இருந்த்து. அவற்றில் பல எழுத்துகள் வாசிக்கக் கூடியதாக இருந்தது. அந்த குறிப்புகள் சிமா ஜியனின் குறிப்புகளோடு ஒன்றி அமைந்தன. (சிமா ஜியன் யார் என்பதை தனி பதிவில் எழுதுகிறேன்.)

பாக்சர் பிரச்சனையால் ஆராய்ச்சி முடிவுகளுக்கு முன் வாங் யீரோங் போருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சமயம் 8 கூட்டணி நாடுகள் சீனாவின் மீது போர் தொடுத்திருந்தன. சீனா போரில் தோல்வி கண்டது. வாங் யீரோங் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் ஜப்பானுடனான போரில் மீண்டும் Yin Ruins நாசம் செய்யப்பட்டது. 1949க்கு பிறகே சீன அரசால் அங்கே முழு ஆராய்ச்சியில் ஈடுபட முடிந்தது.

3300 ஆண்டு பழமை கொண்ட Yin Ruins சீன வரலாற்றில் இன்றியமையாதது. 30 சதுர கிலோமீட்டர் அளவைக் கொண்ட அப்பகுதியில் சுமார் 1.6 மில்லியன் சித்திர எழுத்துகளைக் கண்டு பிடித்தார்கள். அது போக மேலும் பல பொருட்களும் உட்படும். ஆமை ஓட்டிலும், அகலமான எழும்புகளின் மீதும் செதுக்கப்பட்டதால் அவ்வெழுத்துகள் அழியாமல் காலத்தை வென்று நமக்குக் காண கிடைத்துள்ளன.

No comments: