Monday, February 04, 2019

மலேரியா காய்ச்சலை தீர்க்கும் டிராகனின் எலும்புகள்

பெக்கிங் மனிதன்- source: a short history of china
சார்ல்ஸ் டார்வின் தொடர்பான புத்தகத்தை வாசித்தேன். பரிணாம வளர்ச்சி குறித்து தனது கருத்தை முன் வைக்க பலமாகவே யோசித்திருக்கிறார் டார்வின். ஆதாம் ஏவால் என மதங்கள் நிறுவிட்ட கருத்தை தகர்ப்பது சுலபம் இல்லை என கருதினார். 

அது போக அறிவியல் ஆராய்ச்சிகளின் வெளியீடுகள் மாதத்திற்கு எதிராக இருக்கக் கூடது என்பதில் மதம் உறுதியாக இருந்தது. அகிலவியல் தொடர்பாக தனது ஆய்வை வெளியிட்ட ப்ரூனோவை 1600-ல் (Giordano Bruno) உயிரோடு எரித்துக் கொன்றனர் மத சபையினர். அதற்காக கடந்த 2000-ம் ஆண்டில் தனது மன்னிப்பை முன் வைத்தார் போப். 

இது போன்ற சம்பவங்கள் டார்வினை நிச்சயமாக பாதித்திருக்கக் கூடும். பரிணாமம் தொடர்பான டார்வினின் முதல் புத்தகம் On the Origin of Species by Means of Natural Selection. இப்புத்தகத்தில் மிருகங்கள் தொடர்பாகவே டார்வின் அதிகம் எழுதி இருந்தார். 

பரிணாமம் குறித்த கருத்தை வெளியிடுவதில் டார்வினுக்கு போட்டியாக அமைந்தவர் Alfred Russel Wallace. இவருக்கு co-discoverer of natural selection என்ற அடையாளத்தை மட்டுமே அறிவியல் உலகம் கொடுத்தது. டார்வினுக்கும் அல்ஃப்ரட்டுக்கும் கடித தொடர்பு இருந்துள்ளது. போர்னியோ தீவுகளில் அவர் பார்த்த ஓராங் ஊத்தான் குரங்குகளே இவரை பரிணாம வளர்ச்சியின் ஆராய்ச்சியில் ஈடுபட செய்தது. ஆராய்ச்சியில் போது இவர் அந்நாளைய மலாயாவில் வசித்தார் (1858). பரிணாம வளர்ச்சி மிருகங்களுக்கு மட்டுமே பொருந்தும் என வல்லஸ் கருதினார். 

அ்து தவறு என்றும், மனிதர்களும் மிருக குழுமத்தைச் சார்ந்தவர்கள், மனிதர்களும் பரிணாம வளர்ச்சியின் ஒரு எச்சமே என டார்வின் தனது கருத்தை முன் வைத்தார். மனிதனின் பரிணாமம் குறித்து அவர் எழுதிய புத்தகம் The Descent of Man (1871). இதன் பிறகே டார்வின் மதத்தை தூக்கி எரிந்து கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றார்.

டார்வினை முடித்து சீனா தொடர்பான சரித்திர நூல் ஒன்றை வாசிக்க தொடங்கினேன். அதில் முதல் அத்தியாயத்தில் Peking Ape-man -ல் இருந்து சரித்திரம் தொடங்குகிறது. டார்வின் நமக்கு விட்டுச் சென்ற அறிவியல் தான் எவ்வளவு மகத்தானது.

சீனர்களுக்கு டிராகன் மீது அதிக மோகம் இருந்திருக்கிறது. காடுகளில் டிராகன்களின் எலும்புகள் கிடைம்கும் என்றும் அவை சிறந்த நோய் நிவாரணி என்றும் நம்பினார்கள். அவற்றை தேடி எடுத்து வந்து மலாரியா போன்ற நோய்களுக்கு சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள்.

அப்படி அவர்கள் எடுத்து வந்தது டிராகனின் எலும்புகள் அல்ல. அவை பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குரங்கு மனிதனின் எழும்புகள். Peking Ape-man கண்டுபிடிக்கப்பட்டது 1925-1927 ஆண்டுகளில். Peking Ape-man வயது ஏறக்குறைய 780000 என கணக்கிடுகிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.

சுமார் 40 பெக்கிங் மேன்களின் எலும்புகளை கண்டெடுத்தார்கள். அவற்றில் 1 விழுக்காடு மட்டுமே 50 வயது வரை வாழ்ந்திருக்கிறார்கள். ஏனையவை பதின்ம வயதினரின் எழும்புகள். குரங்கு மனிதனின் மூலை அளவும் சற்று சிறியதே. சராசரி மனிதனின் மூலை அளவு 1400 மில்லி லிட்டர். குரங்கு மனிதனின் அளவு 1050 மி.லி.

பெக்கிங் மேன்களுக்கு முன்பாகவே Jawa Man கண்டுபிடிக்கப்பட்டது. ஜாவா மேன் இந்தோனேசியவில் 1891ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு கண்டுபிடிப்புகளும் homo errectus குழுமத்தில் அடையாளப்படுத்தப்பட்டன.

* தக்கது தப்பி பிழைக்கும்

No comments: