Monday, February 20, 2012

கொசுறு 20-02-2012

நான் தவறு செய்கிறேன் என நினைப்பது நெகடிவ் அப்ரோச்... நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என நினைப்பது பாசிடிவ் அப்ரோஜ்... என தமது தத்துவ புத்தகத்தில் இருந்து இந்த வரிகளை எடுத்து வீசுகிறார் சாணியடி சித்தர்.

Positive approach for negative people எனும் தலைப்பில் படித்த ஒரு கட்டுரையின் சுவாரசியத்தை பகிர்ந்து கொள்கிறேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் டாக்டர்களும் மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனையில் வேலை சமயங்களில் புகைத்திருக்கிறார்கள். இதை தவிர்க்கும் படியும் புகை பிடிக்காத சமூகம் உருவாக வேண்டும் என்றும் ஒரு டாக்டர் வழியுருத்தினார். அந்த மருத்துவரும் ஒரு வெண்சுருட்டு விரும்பி என்பதால் அவரின் கருத்து சாத்தியமாகாத ஒன்றென அக்காலகட்டத்தில் நம்பினர்.
******

பாலகுமாரனின் எழுத்துகளை வாசித்தவர்கள் அவருடைய இரும்பு குதிரைகள் மற்றும் மெர்க்குரி பூக்கள் எனும் இரு நாவல்களையும் மாஸ்டர் பீஸ் என அடித்துக் கூறுவார்கள். அவர் எழுத்துகளில் நான் மிக இரசித்தது பயணிகள் கவனிக்கவும்.

குதிரைக்கு கட்டற்ற வேகம் அவசியம். இரும்பு குதிரை எனும் இச்சொல்லை எழுதும் போது ‘க்’ எனும் எழுத்தினை தவிர்த்திருக்கிறேன். இரும்புக்கு க் போட்டு எழுதும் போது அச்சொல்லின் வேகத்தை அது தகர்பதாக சொல்கிறார் பாலகுமாரன். இலக்கியவாதிகள் ஏற்க மாட்டார்கள் எனில் ஏற்காமல் போகட்டுமே என ஜாலியாக சொல்லி நாவலை முடிக்கிறார்.

இது பாலகுமாரனின் வாழ்வில் ஏற்பட்ட உண்மை நிகழ்வாக இருக்கக் கூடும் எனும் எண்ணம் நாவலின் ஒரு சில இடங்களில் நிரடுகிறது. நமது வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை நாம் பெரிதாக கருதுவது கிடையாது. ஆனால் இக்கதையின் முக்கிய பாத்திரமான விஸ்வநாதனின் வாழ்க்கைச் சம்பவங்கள் இயல்பானவை. அதை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் பாலகுமாரன்.
******

மூன்று புள்ளி ஒரு ஆச்சரியக்குறி எனும் கோட்பாட்டில் லட்சக்கணக்கான கவிஞர்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் கவிதையின் டிமாண்ட் அதிவேகமாக சரிந்துவருகிறது. இனி உங்கள் காதலிக்கு கவிதை எழுத மூலையை கசக்கிக் கொள்ள வேண்டாம். ஐந்து நிமிடங்களில் உங்களுக்கு தேவையான கவிதையை தயர் செய்து கொடுக்கும் குழு ஒன்றை அமைத்துள்ளேன். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. கிரேடிட் கார்ட்டு அசேப்டபல்.
******

சாபு வகை போதை பொருளை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா. இதை ஐஸ் என்றும் குறிப்பிடுவார்கள். வெளிச்சம் ஊடுருவும் சின்ன சின்ன கிரிஸ்டல் பொடிகளை போல் இருக்கும். பொதுவாக சிகரட்டு பாக்கெட்டில் இருக்கும் ஒரு வகை மஞ்சல் அல்லது சில்வர் காகிதத்தை தேய்த்து சமன்படுத்தி கொள்வார்கள். அதன் மேல் இப்பொடிகளை போட்டு சூடுகாட்டி ஸ்ட்ரா வைத்து மூக்கில் உறிஞ்சிக் கொள்வார்கள். ‘செர்கமே என்றாலும்’ போல் இருக்குமென இதன் அதி விரும்பிகள் கூறுகிறார்கள்.

இந்த ஐஸ் வகை போதை பொருள் இரண்டாம் உலகப் போரின் சமயம் அறிமுகமானது. போதை பொருள் தடுப்பு பிரிவினர் இதனை ‘designer drugs' என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் சமயம் போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் இதை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்கள் விமானிகள் உட்பட. இவ்வகை போதை பொருளானது அதை எடுத்துக் கொள்ளும் நபர் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் இருக்க உதவுமாம்!

அமேரிக்கா, சீனா, ஜப்பான் என எல்லா இராணுவமும் கலந்துகட்டி இதனை பயன்படுத்தி இருப்பதால் இதை கண்டுபிடித்த கனவான் யார் எனும் சர்ச்சை இன்னமும் ஆய்வில் உள்ளது. இருந்தும் இது சப்பை மூக்குகாரனின் சதி வேலை தான் என அடித்துக் கூறுகிறது ஒரு தரப்பு. மலேசியாவில் இதன் ஆதிக்கம் 90களின் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது. சபா மாநிலத்தில் பிலிபைன்ஸ் நாட்டின் கள்ளக் குடியேகளால் கொண்டுவரப்பட்டதாக சொல்கிறார்கள்.நாளடைவில் அதன் பயன்பாடு பரந்து விரிந்து பல பகுதிகளுக்கும் சென்றுவிட்டதாக கூறுகிறார்கள். மலேசியாவில் இது வரை இதன் வர்த்தகத்தில் பிடிபட்டவன் ஒரு ஈரானியன். அவன் ஒரு மில்லினியரும் கூட.

சமகால இலக்கியவாதிகளை போல் சமகால போதை பொருள் வகையில் குதிரை மாத்திரை கொஞ்சம் பேமஸ். இதை உட்கொண்டு நான்கு நாட்கள் கலவியில் ஈடுபட்ட ஒரு பெண்னை பற்றி அடுத்த பகுதியில் ஆவலுடன் எதிர்பாருங்கள்...
******

சமீபத்தில் கோவி கண்ணன் மற்றும் வெற்றிக்கதிரவன் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றிக்கதிரவன் பல கவிதைகளை பற்றி பேசினார். ஐபோனில் கவிதை பக்கங்களை படம் பிடித்து பத்திரபடுத்தி வைத்துள்ளார். ஓய்வு சமயங்களில் அதை எடுத்து படித்துக் கொள்வாராம். சரி நமக்கும் கவிதைக்கும் தான் ஏழாம் பொருத்தமாச்சே அதனால் என் தரப்பில் விவாதிக்க ஒன்றும் இல்லாமல் போனது. அது எப்படி சார் இந்த கவிதைனு சொல்லும் விசயம் உங்களுக்கு புரிகிறது என கேட்டேன். அது ஒரு அலைவரிசைதான் தம்பி, அந்த அலைவரிசை பிடிபட்டுச்சுனா நீ கண்டிப்பா கவிதாவை ’மன்னிக்க’ கவிதையை இரசிக்கலாம் என சொன்னார் அண்ணன்.

வெற்றி அண்ணனிடமிருந்து ‘திசை கண்டேன் வான் கண்டேன்’ எனும் சுஜாதாவின் புத்தகம் எனக்கு இலவசமாக கிடைத்தது. படித்து முடிக்காமல் வைக்க முடியவில்லை. அப்படி ஒரு ஸ்பீடான கதை. இந்த பூமி அழியுமாயின் மனிதர்களின் மாற்றம் எப்படி இருக்கும் எனும் கற்பனையை நகைச்சுவை கலந்த யதார்த்த தோடு எழுதியிருக்கிறார். ’மனிதர்கள் தத்தம் துரோகங்களுக்கு திரும்பினார்கள்’ எனும் இதன் கடைசி வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இது ஒரு மாய யதார்த்த கதைதான் சைன்ஸ் ஃபிக்‌ஷனின் சேர்த்தியாக கருத முடியாது என்றே கருதுகிறேன். சைன்ஸ் விசயங்களில் சுஜாதாவின் 21-ஆம் விளிம்பு புத்தகத்தின் ஒரு கட்டுரை இப்போது நினைவிற்கு வருகிறது. டி.என்.ஏ தொடர்பான ஒரு விசயம் என்னவெனில் எதிர்காலத்தில் தேவையில்லா அணுக்களை நீக்கி உடலில் உள்ள நோயை குணப்படுத்தும் முறை ஏற்ப்படலாம் என்பதே. இது சாத்தியமாகலாம்.
******

பொறித்த கோழி விற்பனை செய்யும் ஒரு துரித உணவகம். கொஞ்சம் பிசியான ஏரியா. மக்கள் விரும்பும் இடம் என்பதால் அதிக வாடிக்கையாளர்கள் செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக அன்று விற்பனை மிகுதியில் கோழி தீர்ந்து விட்டதாம். கடுப்பாகி போன ஒரு கஸ்டமர் சத்தம் போட ஆரம்பித்துவிட்டான். சத்தத்தின் அழுத்தம் தாங்காத வேலையால் கஸ்டமரை கை வைத்துவிட அது தேசிய பிரச்சனையாகிவிட்டது. தற்சமயம் இன பிரச்சனையாக பேசப்படுவது தகாத ஒன்று. 2012-ஆம் ஆண்டு கோழி துண்டு கிடைக்காததால் ஒரு நாட்டில் இன கலவரம் ஏற்பட்டது என சரித்திரம் பேசினால் கேவலம் அமைச்சரே.
******

’பையோ மெட்ரிக்’ பாஸ்போர்ட் எனப்படுவது சில டிஜிடல் அடையாள கோட்பாடுகளை கொண்டது. ஸ்கேனரின் ஒரு இழுப்பில் நமது சரித்திரத்தை கொட்டிவிடும். பையோமெட்டிக்கின் அடையாளம் நெருப்பு பெட்டியை போல் ஒரு சின்ன கட்டம். கட்டத்தை இரண்டாக பிரிக்கும் நடுவில் வட்டம் கொண்ட ஒரு கோடு. இந்த வகை அடையாளம் கொண்ட கடவுச் சீட்டுகள் (அதாம்பா பாஸ்போட்டு) மின் படிப்பி (பையோமெட்ரிக் சிப்ஸ்) வசிதிக் கொண்டதென அர்த்தமாகும்.

இன்னமும் சில நாடுகளில் இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. சீனா தேசம் இதில் அதிவேக அடைவை எட்டி உள்ளது. ஒருவரின் மருத்துவ குறிப்பு முதல் அந்த சிப்பில் அடக்கிவிடுகிரார்கள். வெளிநாட்டில் தவறு செய்து பிடிபடும் ஒரு சீன குடிமகன் வெளிநாட்டு தண்டனையோடு தன் நாட்டிலும் தண்டனை பெறுவான். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு வெளி நாடு செல்ல அனுமதியும் மறுக்கப்படும். இந்தியாவில் வெளிநாட்டில் பணி புரியும் டிப்லோமட்டிக் ஊழியர்களுக்கு பையோமெட்ரிக் பாஸ்போர்ட் கொடுக்கப்படுகிறது. சில திங்களுக்கு முன் எனது மாமாவின் கனடா பாஸ்போட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கனடா பையோமெட்ரிக் சிப்சை தனது கடவுச்சீட்டின் இரண்டாம் பக்கத்தில் புதைத்திருக்கிறது. பயோமெட்ரிக் பாஸ்போட் இல்லாத ஒரு நாட்டின் குடிமகன் ஜனவரியில் பிரம்படியும் சிறை தண்டனையும் பெற்று அனுப்பப்பட்டு மீண்டும் நவம்பரில் சந்தித்ததும் உண்டு. நவம்பரில் அவன் ஜனவரியை மறுபடியும் சந்தித்தான்.

பொதுவாகவே இந்த சிப்ஸ்கள் பாஸ்போட்டின் கடைசி பக்கத்தில் இருக்கும். மெல்லிய நெகிழி (பிளாஸ்டிக்) தாளை போல் இருப்பதால் பயனர்கள் இதை அவ்வளவாக அறிந்திருக்க மாட்டார்கள். உங்களது பயோமெட்ரிக் பாஸ்போடின் <<<< >>> போன்ற அடைப்புக் குறிக்குள் எழுத்துகளுக்கும் எண்களுக்கும் ஒரு கணக்கு விகிதம் உள்ளது. சிப்ஸ் பழுதாகினாலும் மெசின் வேலை செய்யாமல் போனாலும் இதில் கொஞ்சம் கூட்டல் பெருக்கல் வகுத்தலை போட்டு போலியா அல்லது நிஜமானதா என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

பயோமெட்ரிக் வகைகள் பல உண்டு. கால ஓட்டத்தில் இவை மாற்றம் அடைந்துக் கொண்டு வருவதிலும் வியப்பேதும் இல்லை. புலக்கத்தில் இருக்கும் பையோமெட்ரிக் வகைகள், கைரேகை பதிவு செய்யும் முறை, டி.என்.ஏ, கண்ணில் இருக்கும் பூபா, முகம் என நீல்கிறது. இதை பற்றி மட்டும் ஒரு தனி பதிவு எழுதலாம். மொத்தத்தில் இந்த பையோமெட்ரிக் அமலாக்கம் குற்றச் செயல்களின் ஃபோரென்சிக் விசாரனையின் ஆரம்ப கட்டத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.
******

சமீபத்தில் படித்து மனதை கவர்ந்த ENTER கவிதை:

யாருக்கோ காத்திருக்கும்
செய்து முடித்த
சவப்பெட்டியாய் நாம்
என்னில் நீயோ
உன்னில் நானோ
புதைக்கப்பட்டால்
பிரசவிப்போம்
பால் வீதியில்
சில நட்சத்திரங்களை

மழைக்கும் வெயிலுக்கும்
ஒரே குடை
வாழ்விற்கும் சாவிற்கும்
ஒரே மலர்
எனக்கும்
என் பிணத்திற்கும்
நீ
-பின்னிரவுப் பெருமழை தொகுப்பில் ரிலுவான் கான்
******

எனது முகபுத்தகத்திலிருந்து:
கண்ணதாசன் தனது வாழ்க்கையை மூன்று பாகங்களாக பிறித்து எழுத நினைத்த புத்தகங்கள் வனவாசம், மனவாசம் மற்றும் அஞ்ஞானவாசம். இதில் மனவாசம் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அவர் நோய்யினால் இறந்து விடுகிறார்.

மனவாசத்தில் அவர் எழுதிய ‘தாய்கிளி’ எனும் கவிதையே அவர் கடைசியாக எழுதியது. தாய்லாந்து சென்றிருக்கும் சமயம் அவரோடு இருந்த ஒரு தாய்லாந்து பெண்னை பற்றிய கவிதை. இது அந்த தாய்லாந்துகாரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை :-). ஆக வனவாசம் முழுவடிவிலும் மனவாசம் பாதியாகவும் அஞ்ஞானவாசம் எழுதப்படாமலும் போனது.

மறைவின்றி கூறப்படும் கண்ணதசனின் வாழ்க்கை வரலாறு எதற்கும் அடங்காத காட்டாறகவே தெரிகிறது. முன்னுரையில் அவரே செல்கிறார் '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழ முயற்சியுங்கள்''.
*********

Tuesday, January 10, 2012

கொசுறு 10/01/2012

நெடுநாட்களுக்கு பின் எழுதுவது சிரம காரியமாக தான் உள்ளது। பலரும் எழுத்தில் சொல்லியதை தான் நான் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கின்றேனோ என்ற மன விஷ்க்கி என்னை ஆட்கொள்கிறது. இதையே சாணியடி இப்படி சொகிறார்; எழுதிட்டு குடிச்சா பாசிடிவ் அப்ரோஜ், குடிச்சிட்டு எழுதினா நெகடிவ் அப்ரோஜ்.
*********

செப்டம்பர் முதல் நவர்பர் வரை தலைநகர் வாசம்। கல்வி முடித்து தலைநகரில் வேலை செய்த சில காலம் பொது வாகன சேவையை மட்டுமே கதியென்றிருந்தேன். பணி நிமித்தம் இம்முறை வாகனத்தில் வந்தேன். வந்து நான் பட்ட அவஸ்தைகள் நிச்சயமாக சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என பரிந்துரைக்கிறேன்। ஜி।பி.எஸ் போன்ற வஸ்த்துகளை பயன்படுத்தியும் பல முறை பாதைகளை தவறவிட்டு விட்டேன். அடித்து பிடித்து ஜெய பக்தி புத்தக கடையை அடைந்தேன்.

பலமுறை அவ்விடம் சென்றிருப்பினும் இம்முறை ஓர் அதிர்ச்சி. சமகால இலக்கிய புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியை கொடுக்கும் செய்திதான். நான் சமகால இலக்கியம் என குறிப்பிட்டவற்றில் அதிகமானவை உயிர்மையின் புத்தகங்கள். மேலும் சில பெரிய பதிப்பகங்களின் புத்தகங்கள் வைக்கப்படில் இன்னும் சிறப்பாக இருக்கும்
************

கடந்த திங்கள் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் எனும் நாவலை வாசித்தேன்। எழுத்தாளர் பாலகுமாரனால் முன்மொழியப்பட்ட புத்தகபட்டியலில் இந்நாவல் இருந்ததை குறித்து வைத்திருந்தேன்। பிறகொருநாள் நண்பர் கிருஷ்ண பிரபுவும் இந்நாவலை பற்றி என்னுடன் உரையாடி இருந்தார் இருப்பினும் இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது। அருமையான எழுத்து நடை। தன்னை முற்போக்கு வாதியாக கருதும் ஒரு கேரக்டர் இறுதியில் சொல்லும் “என் தங்கையை காதலிப்பவனின் பல்லை உடைப்பேன்” எனும் வாக்கியம் நச்.

*********
***

தற்சமயம் நான் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளம்। முகப்புத்தகம் மட்டுமே. அதிகமாக என் நேரத்தை விழுக்கி கடிப்படிக்கிறது. ‘ச்சே’ என்னிருப்பினும் என் போன்ற பிரம்மச்சாரிகளால் இதை தவிர்க்க முடியவில்லை. இலச்சிமல ஆத்தா தான் கப்பாற்ற வேண்டும். இந்த பேஸ்புக் பைத்தியத்தை New Mental Health Disorder என குறிப்பிடுகிறார்கள். இந்த டிஸார்டர் பல கோடி மானுட ஜென்மங்களுக்கு ஏற்பட்டுள்ளது போல. நிச்சயம் உலகம் அழிந்துவிடுமோ எனும் மனோபாவ நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறேன்.
**************

சமீபத்தில் படித்த அருமையான Non Fiction முகில் எழுதிய யூதர்கள்। யூதர்கள் தொடர்பான சரித்திரத்தை கொஞ்சமும் சலிப்பில்லாமல் படிக்க முடிகிறது. இம்மாதிரியான புனைவு சார புத்தகங்கள் தமிழ் வாசகர்களால் அதிகம் விரும்பப்படுவதில்லை எனும் நிலையை கிழக்கு பதிப்பகத்தார் உடைத்துள்ளார்கள். கிழக்கின் பல புத்தகங்கள் வாசகர்களின் விருப்பத்திற்கேற்றபடி கொடுக்கப்பட்டுள்ளது.
************

ஐபோனின் பயன்பாடு மிக ஏதுவாக அமைந்துள்ளது। நோக்கியா மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் பேசிகளில் ஒபேராவின் குறைந்தபட்ச சேவையில் தமிழை படிக்க மட்டுமே முடிந்தது. இது முற்றினும் மாறுபட்டு ஐபோனின் தமிழ் ஒபேராவின் துணை இல்லாமல் படிப்பதுமட்டுமின்றி முரசு போன்ற இலவச மென்பொருள் வழி ‘டைப்’பவும் முடிகிறது. நன்றி முரசு.

************


இடைபட்ட காலத்தில் நான் பார்த்த படங்கள் மற்றும் புத்தகங்களை பற்றி எதையும் எழுதவில்லை। சளிப்பும் சோம்பலும் தான் இதற்கு காரணம். படித்ததையும் பார்த்ததையும் எழுதும் போது கிடைக்கும் ஆழமான நோக்கும் பதிவும் அதைச் செய்ய தவறும் போது மறந்து போகிறது.

இந்த ஆண்டின் புத்தக கண்காட்ச்சியில் ஆர்டர் செய்யப்பட்ட புத்தக பட்டியலை பிறகு கொடுக்கிறேன். அதில் நான் மிகவும் எதிப்பார்த்திருக்கும் புத்தகம் அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் எனும் சொக்கன் எழுதிய நூல். பிரிட்டீஸ் ஆட்சியின் கொடூர தன்மை உச்சகட்டத்தில் இருந்த இடங்களில் அந்தமான் சிறையும் அடங்கும். அதில் நமக்கு கொஞ்சமாக வெளிச்சம் போட்டு காட்டியது பிரபு மற்றும் மோகன்லால் நடித்த சிறைச்சாலை எனும் திரைப்படம். அதை தாண்டி வேறு வாசிப்புகள் எனக்கு கிட்டியதில்லை. ஆகவே, படிக்கும் வரிசையில் அது முதலிடத்தில் உள்ளது.
***********
சமீபத்தில் படித்ததில் ஹைலைட்டான ஒற்றை வரி: வாசிப்பு மட்டும் அறிவல்ல। இதை வேறு கோணத்தில் கிருபானந்த வாரியார் சொல்கிறார்: வாசிப்பு என்பது அறிவை வளர்க்காது. வாசிப்பு அறியாமையை நீக்கும் என்பதே சரி.
******

பொய் சரித்திரம்
எதிர்கால முட்டாள்களுக்கு

நிகழ்காலத்தில்
சாயம்பூசப்படும்
இறந்தகாலம்

-கவிஞர் விக்கி (யாரென கேட்பவர்கள் தனிமடல் அஞ்சவும்)

********


சாவாவிலுள்ள சோலோ ஆற்றங்கரையில் மாந்தனின் மண்டையோடும் இடது தொடை எழும்பும் இரண்டு பற்களும் சென்ற 1884 ஆண்டு யூகின் துபாயீசு என்பாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன। இவனையே சாவா மாந்தன் என்று கூறினர். மாந்த உடற்கூடுகளை ஆய்ந்தவர் இம்மாந்தனின் அகவை 10 இலக்கம் ஆண்டுகள் என கணித்துள்ளார். இந்த உடற்கூட்டுக்கு முந்திய கால அளவில் எவையும் கண்டெடுக்கபடவில்லை. சிலவிடங்களில் கண்டெடுக்கப்பட்ட மாந்த உடற்கூடுகள் சாவா மாந்தனுக்கும் காலத்தால் பிற்பட்டவை என கருதுகிறார்கள்.

- குமரிக்கண்டம் எனும் நூலில் முதல் மாந்தன் எனும் தலைப்பில் இப்படி தொடங்குகிறார் ம।சோ.விக்டர். முதற் பக்கத்தில் சொல்லாய்வு அரிமா எனும் பட்டத்தை சேர்த்து பெயர் அச்சிடப்பட்டுள்ளது. ஆசிரியர் இப்புத்தகத்தை எழுதியதற்கு சுமார் 61 புத்தகங்களை மேற்கோல் காட்டி இருக்கிறார். உள்ளடக்கம் யாவும் கிரந்தம் கலக்காத அக்மார்க் தமிழில் உள்ளது என் போன்ற கடைநிலை வாசகனுக்கு வாசிப்பு தடையாக மட்டுமல்லாது. கூறினார் குறிப்பிட்டுள்ளார் எனும் சொற்கள் பக்கத்துக்கு பத்து முறை எழுதப்பட்டிருப்பது இது தொகுப்பு நூலோ எனும் சந்தேகத்தையும் கொடுக்கிறது.