Monday, January 21, 2019

THE LAST EMPEROR- சீனாவின் கடைசி ராஜா

Forbidden Cityயைக் காணச் செல்லும் முன் அந்த அரண்மனைத் தொடர்பான விவரிப்புகளையே அதிகமாக வாசிக்க நேர்ந்தது. ஒவ்வொரு இடத்தின் பயன்பாடும், கட்டிட அமைப்புகளையும் மட்டுமே திகட்ட கொடுத்திருந்தார்கள். ஒரே நாளில் நடந்து கடக்க முடியாத தொலைவு. அதன் ஈர்ப்பு குறைவாகவே இருந்தது. அந்தக் கோட்டையில் இருந்த சமயம் இதன் கடைசி ராஜா யாரக இருந்திருக்க கூடும் எனும் யோசனை எழுந்தது. அங்கு விற்பனையில் இருந்த நூல் ஒன்றை வாங்கினேன். ஃப்போர்பிடன் சிட்டி நூலில் கடைசி ராஜாவாக பூ யீ யின் பெயரை வாசிக்க நேர்ந்தது. 24 ராஜாக்களின் வரிசையில் பூ யீயின் படம் மட்டுமே கருப்பு வெள்ளையில் இருந்தது. மற்றவை சுவர் சித்திரங்கள்.


கம்யூனிஸ்ட் நாடக மாறிய சீனாவில் கடைசி ராஜ வாரிசின் நிலை என்னவாகி இருக்கும் எனும் ஆவள் மேலிட பூயீ தொடர்பான செய்திகளைத் தேடி பிடித்து வாசித்தேன். The Last Emperor பூயீ தொடர்பாக எடுக்கப்பட்ட படமாகும். வரலாற்றுப் பிரியர்களை இந்தப் படம் நிச்சயமாக கட்டிப் போடும். இந்தப் படம் ஃப்போர்பிடன் சிட்டிக்குள் காட்சியமைக்க அனுமதிக்கப்பட்டதால் அதன் வாழ்வியல் நம் கண் முன் நிற்கிறது. பூ யீ பேரரசனின் வாழ்க்கை சிறை வாசம் நிறைந்ததாகவே தோன்றுகிறது. பூ யீ மீதான பரிதாபமே மிஞ்சுகிறது.

தனது மூன்றாவது வயதில் முடிசூட்டப்பட்டார் பூ யீ. ஏதும் அறியாத பூயீயை செர்கத்தின் வாரிசாக அறிவிக்கிறார் மரணப் படுக்கையில் இருக்கும் அரசி. ஒவ்வொரு கணமும் பூயீ பேரரசர் என்பதை அவரைச் சுற்றி இருக்கும் அடிமைகள் நிரூபிக்கிறார்கள். பேரரசனாக இருப்பினும் கோட்டையை தாண்டி வெளியே செல்ல முடியாத நிலை. பாலகன் பூ யீ விளையாட்டுப் பிள்ளையாக வளர்கிறார். உலகின் அரசியல் சூழல் தமக்கு எதிராகத் திரும்பிக் கொண்டிருப்பதை பூ யீ கொஞ்சமும் உணரவில்லை.

அரண்மனைச் சடங்குகளில் மூழ்கிவிட்ட ராஜா பூ யீ யிடம் நவீன மாற்றங்கள் ஏற்பட காரணம் அவரின் ஆங்கிள ஆசிரியர் Reginald Johnston. ஜோன்ஸ்டன் Twilight in the Forbidden City எனும் புத்தகத்தை எழுதி உள்ளார். பூ யீ தொடர்பாக பல செய்திகளை அதில் விளக்குகிறார். பின்நாட்களில் பூ யீ போர் குற்றவாளியாக காவலில் இருக்கும் சமயம் இந்த புத்தகத்தின் தகவல்களும் அவருக்கு எதிரானதாக திரும்புகிறது.

பூ யீ ஒரு நாள் கெடுவில் ஃபோர்பிடன் சிட்டி அரண்மனையை விட்டு வெளியேறச் சொல்லப்படுகிறார். தன் மனைவிகளோடு பெக்கிங்கில் இருந்து தியான் ஜின் (Tianjin) செல்கிறார். ராஜாவக வாழ்த்துவிட்ட பூ யீக்கு தன் அரியனையை விட்டுக் கொடுக்க மனமில்லை. தியான் ஜினில் பூ யீ தனது பெயரை ஹென்ரி பூ யீ என்றும் மற்றிக் கொள்கிறார். பூ யீக்கு ஜப்பானியர்களின் ஆதரவு கிடைக்கிறது. மன்ஞ்சு பரம்பரையில் வந்த பூ யீயை ஜப்பானியர்கள் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். மஞ்ச்சூரியாவின் ராஜாவாக பூ யீ தன்னை முடி சூட்டிக் கொள்கிரார். ஜப்பானியரின் கை பொம்மையாக பூ யீ. அவரால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை. ஜப்பானியரின் கட்டுப்பாட்டில் ஆட்சி நடக்கிறது. மீண்டும் அரண்மனை கைதியாக வாழ்கிறார் பூ யீ.

ஹீரோசிமா & நாகாசாக்கி குண்டு வீச்சிக்கு பிறகு ஜப்பான் சரணடைகிறது. பூ யீ சோவியத் யூனியன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சீனாவுக்கு அனுப்பப்படுகிறார். சீனாவில் போர் குற்றவாளியாக பூ யீ சிறை வைக்கப்படுகிறார். சிறையில் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்து காப்பாற்றப்படுகிறார். சீன தேசத்துக்கு எதிராக ஜப்பானியர்களோடு செயல்பட்டதால் அவர்களின் சதிதிட்டங்களை ஒப்புதல் வாக்கு மூலம் கேட்கிறார்கள் சிறை அதிகாரிகள். பூ யீ தான் ஜப்பானியர்களால் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டதாக கூறுகிறார். அந்த ஒப்புதல் வாக்குமூலம் பொய் என்பதை பின்நாட்களில் தான் எழுதிய From Emperor to Citizen எனும் புத்தகத்தில் எழுதியுள்ளார் பூ யீ. தான் தண்டிக்கப்படுவடை தவிர்க்க அப்படிச் செய்ததாக சொல்கிறார்.

சிறையில் கம்யூனீச சித்தாந்த போதனைகளுக்கு பின் பூ. யீ விடுதலை செய்யப்படுகிறார். முதுமையில் தோட்டக்காரனாக பணி புரிகிறார். இறப்பிற்கு முன் பூ யீ Chinese People's Political Consultative Conferenc-இல் எடிட்டராக பணி புரிந்தார். அவரின் கடைசி வருமானம் 100 யூவானுக்கும் குறைவாகும். The Last Emperor கதையில் பூ யீ ஒரு சுற்றுப்பயனியாக ஃப்போர்பிடன் சிட்டிக்குள் அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு செல்கிறார். யாரும் பார்க்காத சமயம் அரியனையில் அமர்ந்து பார்க்கிறார். அங்கு வரும் இளம் கம்யூனீஸ்ட் தோழர் பூ யீ அப்படி செய்யக்கூடாது என்றும் பூ யீ யார் என்றும் கேட்கிறார். பூ யீ தான் பேரரசர் என்றும் செர்க்கத்தின் பிள்ளையென்றும் கூறுகிறார். அதற்கு சான்றாக தன் முடி சூட்டு விழாவில் கிடைத்த பரிசினை அரியனைக்குள் இருந்து எடுத்துக் கொடுக்கிறார். பூ யீ தனது 61-அவது வயதில் மரணம் அடைந்தார். பூ யீக்கு வாரிசுகள் இல்லை.

பூ யீ தொடர்பாக வாசித்த பின் மீண்டும் ஃபோர்பிடன் சிட்டியை பார்வையிட தோன்றுகிறது. அந்த பெரும் கோட்டை மேலும் சில புரிதல்களை எனக்கு கொடுக்க கூடும்.

No comments: