Sunday, July 13, 2008

நூல் வெளியீடு: கிள்ளான் & ஈப்போ

ஜூலை 14, திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், அரச நகர் கிள்ளானில் உள்ள லக்சமனா அரங்கில் ‘வேராக நீ; நிழலாக நான்’ எனும் நூல் வெளியீடு காண்கிறது.
சிறுகதை எழுத்தாளர் எஸ்.எம்.ஆறுமுகம் தான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து வேராக நீ-நிழலாக நான் என்னும் பெயரில் வெளியிடுகிறார். மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் சிறப்புரை ஆற்றும் இந்த நிகழ்வில் எழுத்தாளர் ப.சந்திரகாந்தம் நூலாய்வுரை வழங்குகிறார்.

இலக்கிய ஆர்வாலர்களும் தமிழன்பர்களும் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குபடி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.


*****

'மலேசிய இந்தியர்கள் ஓராய்வு' எனும் நூல் எதிர்வரும் 27 ஜூலையில் வெளியீடு காண்கிறது. க.கலைமுத்து எழுதிய இந்நூல் ஈப்போ காயிங் சங்க மண்டபத்தில் மாலை 4 மணியளவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இந்நூல் விலை ரி.ம 40 வெள்ளிக்கு சந்தையில் விற்பனைக் காணவுள்ளது. வெளிநாட்டுச் சந்தையில் இந்நூல் அமெரிக்க டாலர் 20க்கு விற்கப்படும். நிகழ்வின் அன்று இந்நூலை வாங்க விரும்புபவர்கள் ரி.ம 30 வெள்ளிக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

மலேசிய தமிழ் அன்பர்கள் இந்நூல் நிகழ்வில் கலந்துச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

சின்னப் பையன் said...

நூல் வாங்கி, படிச்சி பாத்துட்டு, ஒரு விமர்சனத்தை போடுங்க....