Sunday, June 15, 2008

கள்ளம் கொண்ட உள்ளம்


விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசனின் உதவி பெறுவது பற்றி பேசும்போது;


மன்னர், “என்ன லஞ்சம் கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்”


“மன்னரே! தப்பித் தவறி அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்” என மந்திரி சொன்னார்.


ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மந்திரி மது மயக்கத்தில் மன்னரிடம் கேட்டார்.


“மன்னா! அப்படி என்ன சொக்கு பொடி போட்டீர்கள். பக்கத்து நாட்டு மன்னன் நம் காலைச் சுற்றும் பூனையாகி விட்டானே”.


“எதிரி நாட்டு அரசன் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லச் சொல்லி, நம் ஒற்றனிடமே லஞ்சம் கொடுத்தனுப்பினேன், அவன் நமக்கு நண்பனாகி விட்டான்”, எனக் கண்ணடித்து, மது மயக்கத்தில் உளறியதை, பக்கத்து நாட்டு அரசன் கேட்டு விட்டான்.


அப்புறம் என்ன! அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது.

8 comments:

நிஜமா நல்லவன் said...

முதலில் வந்தது யாரு?

நிஜமா நல்லவன் said...

//“மன்னரே! தப்பித் தவறி அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்” என மந்திரி சொன்னார்.//

விஜயகாந்த் முன்னோரா இருப்பார் போல. அதான் லஞ்சம் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்:)

நிஜமா நல்லவன் said...

அட நான் தான் பர்ஸ்ட் வந்தேனா? மை பிரண்ட் எங்க? அவங்க இங்க வர மாட்டாங்களா?

நிஜமா நல்லவன் said...

///“மன்னா! அப்படி என்ன சொக்கு பொடி போட்டீர்கள். பக்கத்து நாட்டு மன்னன் நம் காலைச் சுற்றும் பூனையாகி விட்டானே”.///

ஒருவேளை சொக்காலால் பொடி அப்பவே இருந்துச்சோ என்னவோ?

நிஜமா நல்லவன் said...

///அப்புறம் என்ன! அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது.//

அதற்கும் அடுத்தவாரம் நிலைமை என்ன ஆச்சு? நேராச்சா?

சின்னப் பையன் said...

குடிச்சாலும் 'ஸ்டெடி'யா இருக்கணும்.. இல்லையா...!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

//முதலில் வந்தது யாரு?//

அட நீங்க தான் அண்ணாச்சி.. இது என்ன லக்கி லுக் பதிவா இல்லை இட்லி வடை பதிவா பின்னூட்டம் தெரித்துக் கொண்டு போக...


//விஜயகாந்த் முன்னோரா இருப்பார் போல. அதான் லஞ்சம் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்:)//

விஜயகாந்த்: என்ன வச்சி காமெடி பன்றவங்க 15 பேருல இவந்தான் முதல் இடம். இன்னும் 24 மணி நேரத்துல தண்டனை நிச்சயம். நான் நிஜமா கெட்டவன்.

//அட நான் தான் பர்ஸ்ட் வந்தேனா? மை பிரண்ட் எங்க? அவங்க இங்க வர மாட்டாங்களா?//

டீ. ராஜேந்திரை பற்றி காமேடி பதிவு எழுதியதனால் அவுங்க மேல கேஸ் போட்டுடாங்க...

//ஒருவேளை சொக்காலால் பொடி அப்பவே இருந்துச்சோ என்னவோ?//

அப்படினா என்னங்க... புரியல...


//அதற்கும் அடுத்தவாரம் நிலைமை என்ன ஆச்சு? நேராச்சா?//

விஜயகாந்த் காப்பாத்திடாரு

//கதை நல்லா இருக்கு//

ரொம்ப நன்றி.

இப்படி கொல வெறியோட பின்னூட்டம் போட எங்க கோர்ஸ் எடுத்திங்க... :-))))

VIKNESHWARAN ADAKKALAM said...

//குடிச்சாலும் 'ஸ்டெடி'யா இருக்கணும்.. இல்லையா...!!!//

ஆமாம்... நம்மை போல்...