Friday, July 05, 2013

NAKED FEAR - நிர்வாண மனித வேட்டை 18+




ஒருவனின் உரிமை முழுவதும் பரிக்கப்பட்ட பின் அவன் தொடர்ந்து வாழ வழி செய்வது தன்னம்பிக்கை மட்டும் தான். பிழைப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் பலரின் ஏமாற்றுக் கதைகளை நாம் பல இடங்களில் கேள்விபட்டும் படித்தும் இருக்கலாம். தாயகத்தைவிட்டு வேற்று தேசத்திற்கு பிழக்கச் செல்லும் நபர் நம்பிக்கையின் அடிப்படையிலேயே செல்கிறான். அவர் ஏமாற்றப்படும் போது அந்த நம்பிக்கையும் உடைந்து அழுவதை தவிர வேறு நாதி இருப்பதாக தெரியவில்லை.
 
வெளிநாட்டில் வேலைக்கு வருபவர்கள் ஏஜெண்டுகளிடம் மிக கவனமாக இருப்பார்கள். தான் ஏமாற்றப்பட கூடாது என்பதில் அக்கரை எடுத்துக் கொள்வார்கள். இருந்தும் ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகவே காணப்படுகிறார்கள்.

எனது பணியில் நான் கண்டவரை இந்தியா, வங்காளம் போன்ற தேசங்களில் இருந்து இங்கு வேலைக்கு வரும் நபர்கள் குறைந்தபட்சம் மலேசிய ரிங்கிட்டுக்கு 15000 முதல் 20000 வரையிலும் செலவளித்து வருகிறார்கள். ஏஜெண்டுகளிடம் ஏமாற்றப்பட்ட பின் வேலைக்கான விசா காலாவதியாகி அல்லது ஏஜெண்டுகளால் கள்ள விசா கொடுக்கப்பட்டு, கொடுமை காரணமாக வேற்றிடம் ஓடி எப்படியாவது ஒரு நாள் பிடிபட்டு போவார்கள்.

அவர்களை இறக்குமதி செய்ததோடு ஏஜெண்டும் காணாமல் போய் இருப்பான். நான் பார்த்த வரையில் சாதாரன வேலைக்காக அதிகம் செலவு செய்து வருபவர் இந்த இரு நாட்டினர் மட்டுமே. பிடிபட்டவர் தண்டனைக்கு பிறகு அவர் தேசத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார். இருந்தும் ஊரில் கடன், அவமானம், ஏதுவும் சம்பாதிக்க முடியாத நிலை என பல குடைச்சல்கள் அவர்கள் வாழ்வை தொடர்வதற்கான ஆணி வேரையும் பிடுங்கி எறிந்திருக்கும்.
 
பாலியல் தொழிலுக்காகன ஏஜெண்டுகள் குறி வைப்பது சீனா, வியட்நாம், பிலிபைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற தேச பெண்கள். இது கள்ள மார்கெட்டில் நடக்கும் தொழில் என்பதால் இதன் நடவடிக்கைகளை கண்டுபிடித்து முறியடிப்பது கொஞ்சம் சவாலான காரியம். இப்படியாக ஏமாற்றப்படுபவர்களை பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்கவும் Anti-trafficking in Persons and Anti-smuggling of Migrants சட்டம் இயற்றப்பட்டது.
 

NAKED FEAR திரைப்படம் வெளிநாட்டுக்குப் பிழைப்பு தேடி வரும் பெண் ஏமாற்றப்பட்டு அவள் அனுபவிக்கும் கொடுமைகளை நமக்குச் சொல்கிறது. இது சைக்கோ கில்லர்ஸ் வகையை சேர்ந்த திரைப்படம். சைக்கோ கொலைகாரர்கள் படங்களை எக்கச்செக்கமாகவே ஹாலிவுட் நமக்கு கொடுத்துவிட்டது என்றாலும் இதன் சுவாரசியம் வேறு. ரோமம் சிலிர்த்து உடலை உரைய வைக்கும் திரைபட வரிசையில் இதை நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம்.

படத்தின் ஆரம்பமே ஒரு கொலையில் தொடங்குகிறது. நிர்வாணமாக ஒரு பெண் பொட்டல் காட்டில் ஓடி வருகிறாள். திடீரென ஒரு அம்பு அவள் நெஞ்சை துழைக்கிறது. அவள் அருகே வரும் ஒரு வேட்டையாடி அவள் தலையில் சுட்டு கணக்கை தீர்க்கிறான். படத்தின் கதை இந்த கொலையாளியின் தளத்தில் பயணிக்கிறது. கதைக் களம் நடக்கும் இடம் மெக்சிக்கோ நாட்டின் ஒரு காட்டுப் பகுதியாகும். கொலை செய்பவனுக்கு அந்தக் காட்டின் மூலை முடுக்கு எல்லாம் அத்துபடி. நீங்கள் எங்கு ஓடினாலும் கண்டுபிடித்துவிடுவான். செத்து போனவர்களை அங்கேயே குழி தோண்டி புதைத்தும் விடுவான்.

 
இப்படியான சைக்கோ இருக்கும் மேக்சிக்கோ தேசத்திற்கு வேலை நிமித்தம் வருகிறாள் டயானா எனும் பெண். அவள் ஒரு நடன மாது.அவளை அழைத்து வரும் ஏஜெண்ட் பாஸ்போட்டை பிடிங்கிக் கொண்டு ஒரு பாரில் வேலைக்கு சேர்த்து விடுகிறான். அன்று முதல் அவள் நம்பிக்கையில் மண் வாரி இறைக்கப்படுகிறது. கிடைத்ததும் அவள் விரும்பிய வேலை இல்லை. பாரில் அவளுக்கு ஆடை அவிழ்த்து நடனமாடும் வேலை கொடுக்கப்படுகிறது. புதுப் பெண் அழகாக இருக்கிறாளே என பணத்தை வீசுகிறார்கள் அங்குவரும் ’குடி’மக்கள். இருந்தும் மொத்தத்தில் அவளுக்கு கிடைக்கும் கமிஷன் பணமோ மிக செற்பமாகவே உள்ளது.

ஏஜெண்டிடம் இருந்து பாஸ்போட்டை மீட்டால் மட்டுமே அவளுக்கு அங்கிருந்து விடுதலை கிடைக்கும். அங்கிருந்து ஓடிவிடுவதும் சுலபமான காரியம் இல்லை. ஏஜெண்ட் நிர்ணயித்து இருக்கும் அவளின் கடனோ மிக அதிகம். எவ்வளவு சிரமப்பட்டு பணத்தை சேர்த்தாலும் கடனை அடைப்பது எட்டாக் கனியாக உள்ளது. டயான தங்கி இருக்கும் அறையில் அந்த பாரில் வேலை பார்க்கும் இன்னொரு பெண்ணும் தங்கி இருக்கிறாள். நாம் வேலை செய்து கடனை அடைப்பது சாத்தியம் இல்லை. வேலை நேரம் போக இரவில் பாலியல் தொழிலில் செய்தால் கடனை சீக்கிரம் தீர்த்துவிடலாம் என யோசனை கூறுகிறாள்.

டயானாவின் போறத நேரம் அவள் சந்திக்கும் முதல் கஷ்டமர் அந்த சைக்கோ கொலையாளி ஆவான். அவனும் வேட்டையாட ஒரு பெண்னை தேடி பிடிக்க வந்திருப்பான். அவனோடு காரில் போகும் டயானா பாதியில் மனம் மாறி இறங்கிக் கொள்ள நினைக்கையில் படத்தின் மனித வேட்டையின் துரத்தல்கள் ஆரம்பமாகிறது. அவளை வீட்டிற்கு கடத்திச் சென்று மயக்க மருந்து கொடுத்து கால் விரல் இடுக்குகளில் உள்ள சதையை கத்தரித்துவிடுகிறான். மயக்கம் தெளிந்து எழும் அவள் ஒரு காட்டின் நடுவே நிர்வாணமாக கிடக்கிறாள். எழுகையில் சதை பிய்ந்த கால்களில் வலி. அம்பு எய்ய தயாராக இருக்கிறான் மனித வேட்டை செய்பவன்.

இதற்கிடையில் அங்கு புதிதாக வந்திருக்கும் காவல் அதிகாரி ஊரில் காணாமல் போவோரின் புகார்களை ஆய்வு செய்கிறார். காணாமல் போனவர்கள் பட்டியலில் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள், முக்கியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் அதிகம் தொலைந்து போய் இருக்கிறார்கள். அவர்களை வேட்டையாடியவன் ஊரில் மதிப்பும் மரியாதையும் மிக்க நபர். யாருக்கும் அவன் ஒரு தொடர் கொலையாளி என்பதற்கான சந்தேகம் எழாதபடி தனது நிலையை தக்க வைத்து வந்தவனாவான்.

காட்டில் பிறந்த மேனியாக தப்பி ஓடும் டயானா எப்படி தப்பித்தாள் என்பதாக மீத கதை அமைகிறது. நிர்வாணமாக காட்டில் ஓடும் பெண்ணின் மேனி அழகை இரசிப்பதை தவிர்த்து பார்வையாளனுக்கு அவள் மீதான இரக்கத்தை ஏற்படுத்தி உள்ளது இயக்குனரின் வெற்றி. ஆடை உட்பட எந்த ஒரு பாதுகாப்பு அம்சமும் அந்த பெண்ணுக்கு இல்லை. தன்னம்பிக்கையும் தைரியமும் மட்டுமே அவளை காப்பாற்றுகிறது. மனித வாழ்க்கையில் பாதுகாப்பு அவனது சுய முயற்சியில் மட்டுமே அடங்கியுள்ளது. அவ்வப்போது கிடைக்கும் உதவிகள் ஒரு கட்டத்தில் நமக்கு சாதகமற்று போய்விடும் வேளையில் முயற்சியும் நம்பிக்கையும் மட்டுமே நமது ஆயுதமாக அமைகிறது. நாம் இன்னமும் ஒரு மோசமான உலகில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே படத்தின் செய்தி.

இது குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் படம் இல்லை என்பதால் படத்தை தேடி பிடித்து பார்க்கும் திறமையை உங்கள் வசம் விட்டுவிடுகிறேன். ஜெயம் உண்டாகட்டும்.

9 comments:

dushi said...

arumaiyana thiraipadam...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ dushi

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

RAHAWAJ said...

வணக்கம், சிடி கிடைக்குமா பாஸ்

RAHAWAJ said...

வணக்கம், சிடி கிடைக்குமா பாஸ்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜவஹர்

ஓ கண்டிப்பாக... சீடி இல்லை. டவுன் லோட் காப்பி... ஒரிஜினல் காப்பி... அடுத்த முறை வரும்போது கொடுக்கிறேன்...

Velmurugan G said...

விமர்சனமே விறுவிறுப்பை கூட்டி படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

நன்றி தோழர்!

ko.punniavan said...

நேக்கட் பியர் படத்தைப் பார்க்கத் தூண்டும் விமர்சனம் இது. விறு விறுப்பு படத்தில் இருக்கிறதோ இல்லையோ உங்கள் பார்வையில் இருக்கிறது விக்னேஸ்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@வேல்முருகன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@கோ.புண்ணியவான்

மிக்க நன்றி ஐயா...

VIKNESHWARAN ADAKKALAM said...

@வேல்முருகன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@கோ.புண்ணியவான்

மிக்க நன்றி ஐயா...