Tuesday, October 28, 2008

ஆடு தமிழா ஆடு !

ஆடும் இனமே ஆடு
ஆடாவிட்டால் உனக்கேது பீடு

தேடும் தமிழர் வாழ்வில்
தெய்வத்தின் பேரால் ஆடு

மாடுபோல் வெறிநீர்(மது) மண்டி
மானம் கெட ஆடு

கூடுவிட்டு உயிர் போனவரின்
கூட்டத்திலும் ஆடு

ஆடுபோல் அடங்கிபோகும்
அருந்தமிழ் இனமே ஆடு

பீடு பெற்ற தமிழர் இனத்தில்
பெருமை கெடவே ஆடு

வாடும் தமிழர் இனத்தில்
வண்ணத் தமிழனே ஆடு

தேடிப் படத்தைப் பார்த்து
இலையும் குலையும் ஆட்டி ஆடு.

9 comments:

கோவி.கண்ணன் said...

//தேடிப் படத்தைப் பார்த்து
இலையும் குலையும் ஆட்டி ஆடு.//

நேற்று பார்த்த ஏகன் படத்தில் நயனைப் பார்த்ததும் கிறுகிறுத்துப் போய்டியா ?
:)

Sathis Kumar said...

கவிதை நல்ல ஒரு சாட்டையடி!
முடிந்தால் இக்கவிதையை நாளிதழுக்கு அனுப்பி வையுங்கள்..

சென்ஷி said...

:)))

ஒண்ணும் சொல்லிக்க முடியல

ஆயில்யன் said...

//ஆடுபோல் அடங்கிபோகும்
அருந்தமிழ் இனமே ஆடு//

!நல்லா இருக்கு!

குடுகுடுப்பை said...

//ஆடுபோல் அடங்கிபோகும்
அருந்தமிழ் இனமே ஆடு//

அருவா கழுத்தில் விழப்போவது தெரியாமல் ஆடு

நல்லா இருக்குண்ணென்

VIKNESHWARAN ADAKKALAM said...

@கோவி.கண்ணன்

என்ன சொல்வது... ஏகன்... நோ கமேண்ட்ஸ்.. பில்லாவை விட இதில் சற்று குறைச்சல் தான். வருகைக்கு நன்றி.

@சதீசு குமார்

நாளிகைக்கா? :)) முயற்சிக்கிறேன். கருத்துக்கு நன்றி.

@ சென்ஷி

ஏன் சொல்லிக்க முடியல கவிதையைப் படித்தவுடன் தூக்கம் வந்துவிட்டதா?

@ஆயில்யன்

நன்றி..

@ வருங்கால முதல்வர்

:)) உங்கள் பெயரை போல நீங்கள் இணைத்த வரிகளும் அழகு..

ஆட்காட்டி said...

பேப்பருக்கு அனுப்பி? எதுக்கு? பக்கத்தில நயந்தாரா படம் போட்டால் தட்டுப் படும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஆட்காட்டி

:))) அதானே...

VIKNESHWARAN ADAKKALAM said...

@சிவம்

வருகைக்கு நன்றி... உங்கள் தகவலை எல்லா தளங்களிலும் காண முடிகிறது. இனி எனது அடுத்த பதிவுகளில் உங்களின் விளம்பரத்தை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்...