Wednesday, July 28, 2010

Notes to Science Fiction Writers by Ben Bova


தலைப்பு : Notes to Science Fiction Writers
ஆசிரியர் : Ben Bova

வெளியீடு : Houghton Mifflin Company, Boston (1981)

பக்கம் : 193

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிவிரைவில் நடந்தேறிக் கொண்டிருப்பவை. இவற்றின் மாற்றம் ஒவ்வொரு நிமிடங்களிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அறிவியல் புனைவுகள் வாசகனை ஒரு புதிய சிந்தனையில் ஆழ்த்துகிறது. உதாரணமாக நாம் இருந்திராத ஒரு சூழலை வாசிப்பில் அனுபவிக்கின்றோம் அதில் இலயித்து போகின்றோம். அறிவியல் புதினங்களில் மனித வாழ்க்கையின் அன்றாடங்களை காண முடிவதாக இருப்பினும் அதன் புதுமைகள் வாசகனுக்கு உவப்பளிக்கும் ஒன்றென அமைகிறது.

அறிவியல் புனைவுகளை நாம் இங்கு பேசும் பொழுது மாய யதார்த்தம் அல்லது மாந்திரிக யதார்த்தம் எனும் ஏனைய பிரிவுகளையும் காண வேண்டி உள்ளது. தமிழ் புதினங்கள் பல அறிவியல், மாய, மாந்திரிக யதார்த்தம் சார்ந்த மயக்கம் கொண்டு வெளி வந்திருக்கின்றன. அறிவியல் புனைவு மாய மந்திர யதார்த்தங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றென அமைகிறது. அதற்கு அதீத கற்பனை மட்டும் போதுமானது அல்ல.


அப்படி என்றால் அறிவியல் புனைவுகள் அமைப்பது கடினமான ஒன்றா? Notes to a science fiction writer எனும் நூலின் ஆசிரியர் Ben Bova, Isaac Asimov என்பவரின் கருத்தை பின் வருமாறு குறிப்பிடுகிறார்: Asimov-வின் கருத்தின் படி அறிவியல் புனைவு கடினமான ஒன்றென குறிப்பிடப்படுகிறது. இதன் கட்டமைப்பில் ஆசிரியரின் மாறுபட்ட சிந்தனை அதன் வெற்றியாக அமைகிறது. அறிவியல் புனைவின் நாயகன் அதில் செலுத்தப்படும் சிந்தனை வடிவங்கள். அது மிகையாகி மாய மந்திர கதையாகிவிடாமலும் இருக்க வேண்டும். அதாவது கதையின் வடிவம் அறிவியல் கோட்பாடுகளை கொண்டமைய வேண்டும் என்பதாக Asimov குறிப்பிடுகிறார்.


சிந்தனை கட்டமைப்புகள் சாதாரணமாக முன்வைக்கப்படுமாயின் அதன் அழகியல் பாதிக்கப்படும். ஆதலால் கலை நுணுக்கங்களின் வடிவமைப்பும் அறிவியல் புதினங்களுக்கு அவசியமாகிறது. இதற்கு உதாரணமாக 1973-ஆம் ஆண்டில் ஆசிரியர் எழுதிய Hall of Fame எனும் அறிவியல் புதினத்தை எடுத்துரைக்கிறார். Men of Good Will மற்றும் The Shining Ones போன்ற புத்தகங்களையும் எடுத்துக்காட்டாக தமது கட்டுரைகளுக்கு விளக்க உதாரணங்களோடு பயன்படுத்தப்பட்டுள்ளது. Poul Anderson-னின் (மேற்கத்திய அறிவியல் புனைவு எழுத்தாளர்) கூற்றை நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது ஐம்புலன்களை பயன்படுத்தும் வழிமுறை. இதன் வழி நாம் எழுதும் கதாபாத்திரங்களுக்கும் கதையோட்டத்திற்கும் முழு உயிரோட்டம் கிடைக்கும் என குறிப்பிடுகிறார். இது அறிவியல் புனைவுக்கு மட்டும் அல்லாது யதார்த புனைவுகளுக்கும் தகுந்த ஒன்று என்பதை நாம் காண முடிகிறது.


மேலும் அறிவியல் புனைவிற்கான சிந்தனை பெருக்கத்திற்கு அறிவியல் சார்ந்த மாதிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்களின் வாசிப்பு அனுபவம் கைக்கொடுக்கும் என்கிறார். அதனைக் காட்டினும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை நிதானித்து கவனிப்பதும் “இப்படி நேர்ந்தால்” எனும் கேள்வியை கேட்பதின் வழியும் அறிவியல் புனைவிற்கு நிச்சயம் கைகொடுக்கும் என குறிப்பிடுகிறார்.


உதாரணமாக, ஒரு மனிதன் பொய் பேசுகிறானா இல்லையா என்பதை துள்ளியமாக கண்டறியும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன நேரும்? அல்லது மனிதனுள் ஏற்படும் சிந்தனை மாற்றங்கள் ஒரு மிருகத்திற்கோ, இயந்திரத்திற்கோ, கிருமிகளுக்கோ உண்டாகுமாயின் என்ன நேரும்? என்பதாக நமக்கு உதாரணங்களை காட்டுகிறார். 1981-ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம் என்பதால் இன்றய நிலையில் தகவல்கள் அடிபட்டுபோயுள்ளன. என்போல் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு சிறு தூண்டுதலாக அமையலாம்.


2 comments:

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் நல்ல அறிமுகம். ஆனா இங்கிலீசுபீசு புத்தகத்துக்கும் நம்க்கும் ஆவாதே! :)

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)