Saturday, November 08, 2008

பாசமும் பற்றி மற!!!


கண்ணீர் விட்டது போதும்
தேசம் நீரில் மிதப்பதை பாரும்
வெண்ணிற மலர்கள் தேடும்
பாசம் தேனினும் உயர்வது கேளும்

தாயிடம் பெற்ற பாலினில் பாசம்
தந்தை தந்திட்ட அறிவினில் பாசம்
சேயாய் உன்னை அனைத்து
செர்க்கம் புவியினில் தந்தது பாசம்

அண்ணன் தம்பியாய் வாழ்வில்
அழியா நட்பைக் கொண்டே
பண்பாய் பாரினில் வளர
பழியா உணர்வும் பாசம்

புதியதோர் உலகம் செய்ய
பாயும் நதியாய் நேசம் பிறக்க
புவி மாந்தர்க்கு வேண்டும் பாசம்
தேயும் நிலவாய் பண்பிருப்பின் நாசம்.

Friday, November 07, 2008

மரியாதை தெரியாத பசங்க...

விரும்பியோ விரும்பாமலோ சமுதாயம் என்பது மனிதனின் வாழ்வியல் அங்கமாகிவிட்டது. சமுதாயம் என்பது யாது? எனும் கேள்வியெழும் போது அது நாம் எனவும் நம்மை சார்ந்தது என்றேதான் பதிலாகிறது. ஒரு விடயத்தை பேசும் உரிமை பெறும் போது, நான் இந்த சமூகத்தின் அங்கம் ஆதலால் எனக்கு சமூகத்தைப் பேசவும் கேட்கவும் உரிமையுண்டு என்கிறோம்.

சமுதாய இணக்கத்தில் நம் அங்கமென்றாகும் போது பல விதிகளுக்கும் உட்படுகிறோம். அதை மனித நாகரீக வளர்ச்சியின் வித்துக்கள் என்கிறோம். மனித சமூகத்தில் முக்கியமாய் அமைவது நன்னெறி பண்புகள். பண் பட்டதால் பண்பு அல்லது பண்பாடு என்கிறோம்.

எதிலும் முதல் தாக்கம் என்பது மிக முக்கியமானது என அறிகிறோம். முதல் தாக்கமே நமது அடுத்த செயல்பாடுகளுக்கு அடிப்படையாய் விளங்குகிறது. சக மனிதர்களோடு பழகுகையில் அல்லது முக்கிய நபர்களின் மனதில் இடம் பிடிக்கவும் நம் மீது நன்மதிப்பும் நற்பெயரும் பெறவும் முதல் தாக்கத்தை வழியுறுத்திக் கூறப்படுகிறது. அது 'எதிக்ஸ்' எனும் பெயரில் பல நிறுவனங்களிலும் மேற்படிப்பகங்களிலும் கற்பிக்கப்படுகிறது. பொதுவாக ஐந்து வகைகளை நாம் அன்றாட வழக்கில் காண்கிறோம்.

அழைத்தல்

ஒருவரை சந்திக்கும் போது முறையாக அழைக்கப்படுவது மிக முக்கியம். இது அழைப்பவரின் முதிர்ச்சியையும் மன உறுதியையும் குறிப்பதாகச் சொல்வார்கள். தகுந்த வார்த்தை பிரயோகம் இங்கே வழியுறுத்தப்படுகிறது. அது போக அழைக்கப்படுபவரின் கண்களை பார்த்துப் பேசுவதும் முக்கியம். ஒருவரை பெயரிட்டு அழைப்பதைவிட 'ஐயா' 'அண்ணா' போன்ற சொற்களே நயமாக இருக்கும்.

கை குலுக்குதல்

கை குலுக்கும் முறையிலும் ஒருவரின் மன உறுதி வெளிபடும் என்பார்கள். தொட்டும் தொடாமலும் அல்லாமல் அதிக இறுக்கமாகவும் இல்லாமல் கை குலுக்குதல் நலம். கை குலுக்கல் ஒருவரை நம்மோடு நெருங்கச் செய்தலுக்கு அவசியமானது எனப்படுகிறது.


தயவு செய்து மற்றும் நன்றி

இன்று நன்றி சொல்வது வழக்குடைந்து வரும் விடயம் என்பதை யாரும் மறக்க இயலாது. இதன் காரணம் ஒரு செயல் அவரின் கடமை என நினைக்கத் தோன்றுவதே. உதாரணத்திற்கு உணவகத்தில் நமக்கு உணவு பரிமாறுபவருக்கு நம்மில் எத்தனை பேர் நன்றியுரைக்கிறோம். மாறாக தாமதமானால் கோபம் மட்டுமே கொள்கிறோம். ஒருவரை பணிக்கும் போது அதிகாரம் செலுத்துவதை விட தயவு செய்து எனவும் தயவு எனும் பணிவுக் கொண்டும் சொல்லப்படும் போது நமது பேச்சின் இறுக்கம் தளர்வடையும்.

மன்னிப்பு

மன்னிப்பு தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை என சினிமா வசனங்களை எளிமையாக பேசிவிடலாம். மன்னிக்க மனம் வேண்டும் என்பார்கள். தவறை உணர்ந்தவரே மன்னிப்பும் கோருவார். மனிதனாக பிறந்தவர் தவறு செய்யாமல் இருப்பவரும் அல்லர் அப்படி தவறு செய்தவர்கள் அனைவரும் திருந்தாமல் போனவர்களும் அல்லர். அடுத்தவரை பாதிக்கும் அல்லது கவனச் சிதறலுக்கு வழி வகுக்கும் சிறு நிகழ்வாகினும் மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை.


குறுக்கிடுதல்

ஒருவரின் காரியத்தில் குறுக்கிடுவது அவர்களின் கவனத்தையே அல்லது செயல் திறனையோ பதிப்படையச் செய்யும்.

இப்படியாக முக்கிய ஐந்து விடயங்களை நமது நடைமுறையில் காண்கிறோம்.

Thursday, November 06, 2008

மோகத்தில் மிதப்போம் வா!


ஆண்:
இருள் பொங்கும் வேளைதனில்
முகம் காட்டும் வெண்ணிலவே
விளையாடவா! இன்ப சுகம் காணவா!

பெண்:
தோள்வலி கொண்ட தூயவனே!
பூஞ்சிரிப்பு பூத்தவனே!
முத்தப்போர் செய்யவா!
என்னைத்தோள் சேரவா!

ஆண்:
இடைகாணாப் பெண்ணகே!
இசைபாடும் குரலமுதே!
உன் இதழ் சுவை காணவா!
உயிர்வரை சுகம் தேடவா!

பெண்:
ரசமான சொல்பாடி
ரகலைகள் செய்தவனே
உன் மடி சாய்கிறேன்
என் உடை போக்கிடு!

ஆண்:
நிலவில்லா வேளைதனில்
உறவாட வந்தவளே
உயிர் தோய்கிறேன்
சொர்கம் உனில் காண்கிறேன்!

பெண்:
எனை ஆள வந்த இந்திரனே
மாயலோக சுந்திரனே
என்னைக் கடைந்தாடிடு
உயிர் பிளந்தோடிடு!

ஆண்:
ஆசை கொண்ட பெண் மயிலே -குயில்
ஓசை கொண்ட பெண்ணழகே
மோகம் காண்கிறேன்!
என் தாகம் தீர்க்கிறேன்!

பெண்:
என்னை பந்தாடி வீழ்ந்தவனே!
உனை கட்டியாழ்கிறேன்!
உன் முதுகை தொட்டுப் பார்க்கிறேன்!
வேல்பட்டு வீழ்ந்தாயோ
உடல் பிளந்து போனாயோ என
தேய்த்து காண்கிறேன்!

Tuesday, November 04, 2008

சிங்கையில் சில நிமிடங்கள்!! (2)

செந்தோசா செல்லும் வழியில் தேன் கூட்டைத் தலையில் கொண்ட மனிதனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நின்று கொண்டிருந்த என்னை படம் எடுப்பது போல் 'விக்கி விளகு' என சொல்லி அந்த தேன் கூட்டை அம்மனிதனுக்குத் தெரியாமல் தன் புகைப்படக் கருவிக்குள் கொண்டு வந்து சாதனை செய்தார் கோவியார். அசாத்தியமும் அதிசயமும் மிக்க அப்புகைபடத்தைக் காண திரு கோவியாரை அனுகவும்.

சந்திப்பு இடைத்திற்குப் போய் கொண்டிருந்த வழியில் திரு.பாரி அரசு ஜோதியில் கலந்துக் கொண்டார். அவர் தம் நண்பருடன் வந்திருந்தார். முகத்தில் கல்யாணக் க(வ)லையோடு. திருமணப் பந்தல் காணவிருக்கும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல விளையும் இவ்வேளையில் தூய தமிழில் அச்சிடப்பட்டிருந்த அவரது திருமண அழைப்பிதழ் முயற்சி மதிக்க தக்கது. பத்திரிக்கைக் கொடுக்கப்பட்டது பதிவர் சந்திப்பில் என்பதால் மீண்டும் விடுபட்ட இடத்திற்கு திரும்புவோம்.

அவரும் ஜோதியில் இணைந்த பிறகு சந்திப்பு இடத்திற்கு நடையைக் கட்டினோம். போகும் வழியில் கண்ணுக்கினிய காட்சிகள். இயற்கை காட்சிகளைச் சொன்னேன். நண்பர் கிஷோர் சொன்னதை வைத்து தப்பாக எடைபோட வேண்டாம். இவ்வியற்கைக் காட்சியை காண இரு கண்கள் போதவில்லை. என்னை அழைத்து வந்ததிற்கும் பதிவர் சந்திப்பை அங்கு ஏற்பாடு செய்ததிற்கும் நன்றி. கடல் சூழ்ந்த அழகிய இடம் அது. வாய்ப்புக் கிடைப்பின் மீண்டும் அங்கே செல்ல விரும்புகிறேன். சந்திப்பு இடைத்தை அடைந்த போது துக்ளக் பதிவர் மகேஷ், நானும் பதிவிடுகிறேன் பதிவர் கிஷோர், என இன்னும் சிலர் வந்தடைந்தனர்.

குளிர்பானங்களின் திறப்பு விழாவோடு பதிவர் சந்திப்பு ஆரம்பமானது. அதற்கு முன் நான் கொண்டு வந்திருந்த சில நினைவு பரிசுகளை அன்பளித்தேன். பின் மீண்டும் குளிர்பான திருவிழா ஆரம்பமானது. சற்று நேரத்தில் ஜோசப் அண்ணன் குளிர் பானங்களை விரைவாக குடித்து முடிக்கச் சொன்னார். அப்படி இல்லாதாவர்கள் முதலில் அவற்றை ஓரமாய் வைக்கச் சொன்னார். கவனச் சிதறலுக்கு இடம் கோடாமல் இருக்கும் பொருட்டு அப்படி சொன்னதாக அறிகிறேன். குளிர்பானம் குடிப்பதில் மட்டும் கவனம் சொன்றுவிடாமல் இருக்க ஜோசப் அண்ணன் செய்த சேவை அளப்பறியது.

அவ்வேளையில் திண்டுக்கல் சர்தார், சிங்கை நாதன் என இன்னும் சிலர் வந்தடைந்தனர். கோவியார் இடைவிடாமல் தனது புகைப்பட கருவிக்கும் வேலைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது காலணி அவரை கவிழ்க நினைத்தை முயற்சிகளை முறியடித்து புகைபடங்களை சுட்டுத் தள்ளினார். கோவி அண்ணா, உங்கள் புகைபடக் கருவிக்கும் காலணிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது அடுத்த முறை சரி செய்யவும்.

பிறகு மீண்டும் பஜ்ஜி, சொஜ்ஜி, வடை, இனிப்பு பலகாரம் என பதிவர் சந்திப்பு தொடர்ந்தது. நானும் மிச்சம் இருந்த எனது சிறு நினைவு பரிசுகளைக் கொடுத்து முடித்தேன். வந்திருந்தவர்கள் 21 பேர், நான் கொண்டு வந்த பரிசுகள் 16 மட்டுமே. நான் கொடுக்கத் தவறியவர்கள் மன்னிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

துக்ளக் மகேஷ் பரிசல்காரனின் அறிமுகத்திற்கு பின் தான் எழுத வந்ததையும், வலையுலக அனுபவங்களையும் கூறினார். அதன் பின் பதிவர் கிஷோர் பேசினார். பிறகு நான் என்னால் முடிந்த வரை உளறினேன்.

சர்தார் ஐயாவின் பேச்சு நினைவில் என்றும் நீங்காதது. மிகவும் ஆழமான, அழுத்தமான எல்லோருக்கும் தகவல் மிக்க பேச்சு. இதைத் தொடுத்து கோவியார் எழுதியுள்ளார். அவர் உரையின் முடிவில் பதிவர்களின் கருத்தையும் கேட்டு வியப்பில் ஆழ்த்தினார். அவர் இன்னும் சில காலம் சிங்கையில் இருக்க வேண்டும் எனவும், அனுராதா அம்மாவின் பதிவையும், அதை தொடுத்து அவர் திரட்டிய தகவல்களையும் புத்தகம் வடித்தாரானால் மிகச் சிறப்பாகவும் பலருக்கு பயனுள்ளதாகவும் அமையும் என தாழ்மையோடு கூற விளைகிறேன்.

அதன் பின் தன் பெயர் கூற விரும்பாத, பதிவர்களுக்கு மட்டும் தன் பெயர் சொல்லிய சாம்பார் மாஃப்பியா பேசினார். இவர் மூத்த பதிவர். தமிழுக்கு தொண்டு செய்த தன் குடும்ப பின்னனியும் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் சிங்கையில் நடந்த பதிவர் சந்திப்பைப் பற்றியும் சொன்னார். தற்சமயம் ஆங்கிலத்தில் எழுதிவரும் அவர் தமிழிலும் எழுத வேண்டும் என்பது என் அவா.

பதிவு வாசகர் மீனாட்ச்சி சுந்தரம் தன்னை பற்றியும், தமிழகத்தில் அவரது அரசியல் அனுபவத்தைப் பற்றியும் பகிர்ந்துக் கொண்டார். தற்சமயம் சிங்கையில் படித்து வரும் அவர் அடுத்த வருடம் ஆரம்பத்தில் பதிவு எழுத ஆரம்பிக்கப் போவதாகக் கூறினார். நேரம் காலம் பார்த்து ஆரம்பிக்கிறார் என தவறாக என்ன வேண்டாம். அப்போது தான் தொழில் பயிற்சிக்குப் போகிராறாம். அப்போதிருந்து ஆரம்பித்தால் தான் சரி வரும் எனச் சொன்னார். பலரை சந்தித்ததில் மகிழ்ச்சிக் கொண்டதாகக் கூறினார்.

நண்பர் கிஷார் மற்றும் மகேஷ் ஆகியோர் சொல்லிய, பதிவிடத்தில் விவாதித்த, சில பல விடயங்கள் போக அந்தி சாய்ந்த இரவை வரவேற்று பதிவர் சந்திப்பு இனிதாய் முடிந்தது. சந்திப்பு முடிவதற்கு முன் ராம் சம்பவ இடத்தை வந்தடைந்தார்.

அதன் பின் அகரம் அமுதா வந்தார். ஆம் சொல்ல மறந்தேன். அகரம் அமுதா தாமதமாக சந்திப்புக்கு வர காரணம் அறிய நாம் மீண்டும் மதிய உணவு ஊட்கொண்ட இடத்திற்கு போக வேண்டும்.

மதிய உணவின் போது என் எதிரில் வந்து அமர்ந்தார் அமுதா. அவ்வினிமையான மனிதரோடு பழகும் வாய்ப்புக் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சிக் கொண்டேன். உணவு வேளை முடிந்ததும் தன் ஆசிரியரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போக இருப்பதாகவும் விழா முடிந்து வாய்ப்பு இருப்பின் சந்திப்பில் கலந்துக் கொள்வதாகவும் கூறினார். அதே போல விழா முடிந்ததும் சந்திப்பு இடத்தை வந்தைடந்தார்.

சந்திப்பு முடிந்ததும் எல்லோருமாக கிளம்பினோம். இடையே சிலர் அவரவர் இல்லம் திரும்ப பிறிந்துப் போனார்கள். இரவாகிவிட்டதால், இராத்திரி உணவுக்காக ஒரு உணவகத்தை வந்தடைந்தோம். சில பதிவர்கள் இல்லாமல் போக மீண்டும் 'மினி' சந்திப்பு தொடந்தது. எல்லோரும் விரதத்தில் இருந்ததால் சைவம் மட்டுமே சாப்பிட்டார்கள் என்பதைக் குறிப்பிட விளைகிறேன்.

பாரி அரசு சமூகம் சார்ந்த பல விடயங்களை பிய்த்து மேய்ந்துக் கொண்டிருந்தார். மீண்டும் அகரம் அமுதாவோடு பேசும் வாய்பைப் பெற்றேன். ஆழ்ந்த வாசிப்பனுபவம் கொண்ட அவர் பலவற்றை சுவைபட கூறினார். சமீப காலமாக தேக்க நிலைக் கொண்டிருக்கும் அவர் பதிவுகள் மீண்டும் தொடர்ந்து பயணிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர் டொன் லீயின் வேண்டுகோளுக்கினங்க சந்திப்பு இடத்தில் விடுபட்டு போன அரசியல் விவகாரங்கள் இரவு வேளை சாப்பாட்டு மேசையில் தொடர்ந்தது. சில பல கருத்து பரிமாற்றங்களுக்குப் பிறகு எல்லோரும் கலைய ஆரம்பித்தார்கள். நானும் அன்புடன் கைகுழுக்கி விடைபெற்றுக் கொண்டேன்.

சிங்கையில் இருந்த மூன்று நாட்களும் மிக இனிமையாகவே போனது. இதற்கு வழி வகுத்த அனைத்து நல்ளுள்ளங்களுக்கும் நன்றிகள் பல பல. முக்கியமாக எனக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த விஜய் ஆனந்த், ஜோசப் அண்ணன் மற்றும் கோவி அண்ணனுக்கு அன்பு கலந்த நன்றிகளை மீண்டும் கூற விளைக்கிறேன்.

மூன்றாம் நாள் விஜய் ஆனந்த் அவர்களின் தயவால் இனிமையாய் கழிந்தது. கோவி அண்ணனின் உயபத்தில் சட்டையும், விஜய் ஆனந்த் அவர்களின் தயவில் காற்சட்டையும் பரிசாகப் பெற்றேன். இது போக கேவியார் ஒரு புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்தார். மீண்டும் அடுத்த சந்திப்பிற்காக மனம் ஏங்குகிறேன். அதற்கான காலமும் நேரமும் வாய்க்கும் என எதிர்ப் பார்க்கிறேன்.

என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய துர்கா அவர்களுக்கு நன்றி. நான் சந்திக்க நினைத்த பதிவர்களுள் ஒருவர் நிஜமா நல்லவன். முதல் நாளே அரை விசாரித்தேன். ஆனால் அவருடைய தொடர்பு எண் யாரிடமும் இல்லாது போகவே அவரை காணவும் பேசவும் முடியாமல் போனது. அன்பு நண்பர் ஜெகதீசனும் தமிழகம் திரும்பிவிட்டதால் சந்திக்க முடியாமல் போனது. இனிய நினைவுகளுடன் திங்கள் காலை 4 மணிக்கு ஈப்போ வந்தடைந்தேன்.

சந்திப்பு இனிதே நடந்தேற உதவிய அனைவருக்கும் நன்றிகளையும், பெயர் குறிப்பிடாமலும் விடுபட்டும் போனவரிடையே மன்னிப்பும் கோறுகிறேன்.

முற்றும்.

பி.கு: செந்தோசாவில் சந்திப்பு முடிந்ததும் ஜோசப் அண்ணன் ராஜ பார்வை கமல் வேடத்தில் இருந்தார். அந்தக் குடையும், கண்ணாடியும் காணாமல் போனதாக புகார் கிடைத்துள்ளது வேறு விடயம்.

ராஜ பார்வை படத்தில் அந்தி மழை பொழிகிறது ஏனும் பாடலில் இந்திரன் தோட்டத்து முந்திரியே எனும் அழகான வரி ஒன்று உண்டு. இந்திரனை போல இந்திரன் தோட்டத்து முந்திரிக்கும் காமம் அதிகமா எனும் ஒரு அருமையான ஆராய்ச்சி பதிவை இங்கே சுட்டி படிக்கவும்.

சிங்கையில் சில நிமிடங்கள்!! (1)

சிங்கையில் கால் வைத்த போது சரியாக மாலை மணி 6.30. எனது கைபேசிகள் இரண்டிலும் மின்சக்தி காலியாய் போயிருந்தது. முதல் நாள் வேலை முடிந்து தாமதமாக வந்ததினால் கைபேசிகளை 'சார்ஜ்' செய்யவில்லை என நான் சொன்னால் அது பொய்யென கண்டுபிடிக்க சிலர் உள்ளனர். அதனால் உண்மையும் பேசும் நிர்பந்தத்தில் ஆளாக்கப்படுகிறேன். கைபேசிகள் 'சார்ஜ்' செய்யாப்படாமல் போனதற்கு காரணம் எனது சோம்பேறித்தனம் தான்.

இது போக இணையத்தில் நீண்ட நேரம் இருந்த என்னை "அவனை போய் தூங்கச் சொல் நாளை பேருந்தை விட்டுவிட போகிறான்" என ஜோசப் அண்ணனிடம் தூது அனுப்பிய கோவியார் என் கையடக்கப்பேசியை 'சார்ஜில்' போட சொல்லாததை இவ்வேளையில் கடுமையாக சாடுகிறேன். சரி கதையின் பக்கம் வேறு பாதையில் பயணிக்காமல் இருக்க நாம் ஆரம்ப நிலைக்குச் செல்வோம்.

நல்ல வேளையாக நமது பின்னூட்டப் புயலின் கைபேசி எண்ணை ஒரு சிறு புத்தகத்தில் குறித்து வைத்திருந்தேன். தக்க சமயத்தில் உதவியாய் அது அமைந்தது. பேருந்து ஓட்டுனரிடம் என்னை 'பீச் ரோட்டில்' இறக்கிவிடச் சொன்னேன். அவரும் செய்தார். கைபேசியில் மின்சக்தி இல்லாதது போக அப்படி இருந்திருந்தாலும் வேலை செய்யாமல் தான் போயிருக்கும். காரணம் மலேசிய கைபேசி இணைப்பு அங்கு இல்லாமல் இருந்தது. பொது தொலைபேசியை நாடினேன்.

இளைய தளபதி (பட்டம் கொடுத்தது ஜோசப் பால்ராஜ்) விஜய் ஆனந்திடம் தொலைபேசிவிட்டு காத்திருந்தேன். அவர் தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் சற்று நேரத்தில் வந்துவிடுவதாகவும் கூறினார். அவர் வரும் வரையில் அந்த முதிய தம்பதியினரோடு பேசிக் கொண்டிருந்தேன். யார் அந்த முதிய தம்பதிகள் என தெரிந்துக் கொள்ள நான் தொலைபேசியை நாடி சென்ற இடத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும்.

நான் பொது தொலைபேசியின் அருகில் சென்ற போது முதிய தம்பதியர் இருவர் என்னைப் போலவே சிறு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்தனர். அவர்களது மகன் வீட்டுக்கு வந்திருப்பதாகவும் மகனுக்கு அழைத்து கொடுக்குமாரும் கேட்டனர். அதன் பிறகு விஜய் ஆனந்த் வரும் வரையில் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் மலேசியர்கள். அவர்களுடைய மகன் மட்டும் சிங்கையில் நிரந்தரமாக குடியிருந்துவிட்டதால் இவர்களும் அடிக்கடி இங்கு வந்து போவதாக சொன்னார்கள்.

வலை வீசி தேடி கொண்டு சற்று நேரத்தில் விஜய் ஆனந்த் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தடைந்தார். வியர்த்து விறுவிறுத்து போய்யிருந்தார் பாவம். நான் அதிக நேரம் காத்திருக்கக் கூடும் என விரைந்து வந்ததாக அறிகிறேன்.
பிறகு சாப்பிட போகலாம் என்றார். ஆனாலும் விதி விளையாடியது. சுற்றிலும் தாய்லாந்து மக்களின் கடைகள். வாடையே சரிவரவில்லை என்றதும் குளிர்பானங்களை வாங்கிக் கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்து பருகிவிட்டு வாடகை காரை பிடித்து ஜோசப் அண்ணன் வீட்டுக்கு விரைந்தோம்.

ஜோசப் அண்ணன் இன்முகத்தோடு எங்களிருவரையும் வரவேற்றார். அவர் இல்லத்தில் வசிக்கும் பன்னீர் எனும் நண்பரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். பயண விசாரிப்புகள் இணையம் என சற்று நேரம் போன பிறகு சாப்பிட போனோம். அதற்கு முன் நான் காலையில் நேரம் வகுத்துச் சென்ற இரு பதிவுகளும் வராதிருப்பதை அறிந்து பதிவேற்றம் செய்ய எண்ணினேன். எனது மடி கணினியை எடுத்த போது. "என்னப்பா இது 'லாப்டாப்'னு சொல்லி கால்குலேட்டர் வச்சி தட்டிக்கிட்டு இருக்கனு ஜோசப் அண்ணன் மொக்கை போட்டார்.

சற்று நேரத்தில் கோவி அண்ணன் அந்தக் குடியிருப்புக்கு வந்தடைந்தார். வேலை முடிந்து நேராக அங்கு வந்திருப்பதை அறிந்தேன். என்னை அணைத்து இன்முகத்தோடு வரவேற்றார். மிக மகிழ்ந்தேன். இரவு சாப்பாடு முடிந்ததும் அடுத்து வரும் பத்திகளை தடை செய்தபடியால் இங்கு குறிப்பிடமுடியாமல் போகிறது. இரவு ராம் எனும் நண்பர் வந்தார். எல்லோரிடமும் இனிமையாக பேசினார்.

மறு நாள் பதிவர் சந்திப்புக்கு திட்டங்கள் சில முடிவெடுத்த பிறகு தூங்கச் சென்றோம். ராம் மற்றும் விஜய் ஆனந்த் விடை பெற்று அவர்கள் இல்லம் திரும்பினர்.

அதிகாலையில் நல்ல மழை பெய்தது. பொழுது விடிந்தது அறியாமல் நல்ல தூக்கம் போட்டேன். ஜோசப் அண்ணன் எழுப்பிவிட்டு சென்றார். குளித்துவிட்டு கிளம்பிய போது சரியாக மணி மதியம் 1.20 ஆகியிருந்தது. வயிற்றுக்கு ஆகாரம் போட நேராகா தமிழர் உணவகத்தை நாடினோம். அங்கு சென்றடைந்த சற்று நேரத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

பதிவர் சந்திப்புக்குச் செல்லும் முன் உணவகத்திலேயே ஒரு மினி சந்திப்பு உருவாகிவிட்டதை அறிந்தேன். இது எனது முதல் பதிவர் சந்திப்பு என்பதால் பல பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததால் பெறும் மகிழ்சியடைந்தேன். சற்று நேரத்தில் கிரி, ஜோதிபாரதி மற்றும் அகரம் அமுதா போன்ற பதிவர்கள் வந்தடைந்தனர். அளவளாவிக் கொண்டே மதிய உணவும் சிறப்பாக முடிந்தது.

பதிவர்களுக்கு பாதை காட்டுவதிலும் தொலைபேசி அழைப்புகளுக்கும் விஜய் ஆனந்த் சிரத்தைக் கொண்டு பதில் சொல்லி வந்தார். ஜோசப் அண்ணனும் அதில் பங்கு கொண்டார்.

எனது பதிவின் வழி சமீபத்தில் அறிமுகமானவர் தம்பி மீனாட்சி சுந்தரம். நான் சிங்கை வருவதை அறிவித்திருந்தேன். அவரும் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாக கூறினார். சிங்கைக்குச் சென்றவுடன் அவருக்கு அறிவித்தேன். மீனாட்சி தம்பி ஏற்கனவே ஜோசப் அண்ணனுக்கும் அறிமுகமாகி இருந்தார்.

பதிவர் சந்திப்புக்கு புது மாப்பிள்ளை போல் சட்டை கசங்காமல் வந்து சேர்ந்தார். அனைவரிடமும் சகஜமாக பழகி நன்மதிப்பைப் பெற்றார். மீனாட்சி தம்பியை பதிவர் சந்திப்பு இடத்தில் தான் சந்தித்தேன். அவரின் அவ்வப்போதைய அழைப்புகளுக்காக இவ்விடத்தில் அறிமுகம் செய்து மீண்டும் மதிய உணவை சாப்பிட்டு முடித்த இடத்தில் இருந்து எழுத ஆரம்பிக்கிறேன்.

உணவை முடித்துக் கொண்டு எம்.ஆர்.டி தொடர் வண்டி (உபயம் பாரி.அரசு) நிலையத்தை நோக்கி புரப்பட்டோம். நடை கலைப்பு தெரியாமல் இருக்கும் பொருட்டு போகும் வழியினில் சிலர் புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்றிக் கொண்டனர்.

இவ்வேளையில் திரு.ஜோதிபாரதியோடு பேசும் வாய்ப்பு எனக்கு கிடத்தது. சிங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பேசியதில் ஆரம்பித்து பதிவுகள், தொழில், வாழ்க்கை என பல விடயங்களை விவாதித்துக் கொண்டு சொன்றோம்.

தொடர் வண்டியில் என்னையும் என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரையும் வெண்பா விரும்பி முகவை ராம் மொக்கை போட்டுக் கொண்டிருந்தார். அது என்ன என்பதை நான் கூற முடியாத பட்சத்தில் இதை அவரிடம் கேட்டுக் கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

முகவை ராம் நல்ல நகைச்சுவை உணர்வு நிறைந்த மனிதர். இலக்கிய விடயங்களையும் நகைச்சுவை உணர்வோடு பேசி அதை நினைவில் கொள்ளச் செய்தார். என்ன விடயம் என்பதையும் அவரிடம் கேட்டுக் கொள்ளும்படி வேண்டுகிறேன். இருந்தாலும் அந்த கம்பனின் சந்தேகத்துக்குறிய இலக்கிய விடயத்துக்கு அழகான விளக்கத்தை அகரம் அமுதா சொன்னார். இது நடாந்தது பதிவர் சந்திப்பு முடிந்த பிறகு என்பதால் மீண்டும் தொடர் வண்டி ஏறிய இடத்திற்கு வருவோம்.

எம்.ஆர்.டி பயணம் முடிந்து செந்தோசா (பதிவர் சந்திப்பு இடம்) சொல்லும் முன் அங்காடியில் சில குளீர்ர்ர்ர்ர் பானங்களையும் நொறுக்குத் தீனிகளையும் வாங்கிக் கொண்டோம். சொந்தோசா செல்லும் தொடர் வண்டி ஏறும் முன் வலைபதிவர் திரு.ஜோ அவர்களை சந்தித்தோம். அவரும் ஜோதியில் இணைந்தார்.

செந்தோசா செல்லும் தொடர் வண்டியில் ஒரு விசித்திர மனிதனைக் கண்டோம். இறுதிப் பகுதி இன்று மாலைக்குள் பதிவேற்றப்படும்...

Friday, October 31, 2008

இந்தியர்களுக்கு இந்த உணவு பிடிக்குமா?

ஜப்பானிய உணவு வகைகள் நமக்கு மிக வித்தியாசமானவையாக தோன்றும். சரியாகச் சொல்லப் போனால் நா குமட்டச் செய்பவை என சொல்லலாம். ஜப்பானியர்களின் ஆயுற் காலம் மற்ற நாட்டினை காட்டினும் அதிகம் என்கிறது சில தகவல்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் சுறுசுறுப்பும் உணவு முறையுமே ஆகும். உணவு பழக்க வழக்கங்கள் சரியாக இருப்பின் நமது உடலும் சரிவர இயங்கும் சுறுசுறுப்புக்கும் பஞ்சமில்லாமல் போகும்.

ஜப்பானிய உணவு வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது சுசி. சுசி சீன தேசத்தின் உணவு முறை எனவும் ஏழாம் நூற்றாண்டில் அது ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மீன் சதையை உப்பு மற்றும் அரிசியுடன் பதப்படுத்தி வைத்துவிடுவது அக்கால முறை. இதுதான் சுசி உணவு முறை வளர்ச்சியின் ஆரம்ப முறை என சொல்லப்படுகிறது. அரிசியில் செய்யப்படுவதால் என்னவோ இது பலருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது.

சுசி பல வகைப்பட்டது. அதன் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்புகளை பொறுத்து வகை பிரிக்கப்படுகிறது. நோரி எனப்படும் கடல் பாசிவகைகள், இறால் முட்டை போன்றவை சுசிகளில் பிரசித்திப் பெற்றது. அரிதாகக் கிடைக்கக் கூடிய கடல் மீன் முட்டைகளில் செய்யப்படும் சுசி வகைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிக அளவிலான முட்டைகளும் கொழுப்புச் சத்து நிறைந்த பொருட்களும் இல்லாதிருக்கும் பொருட்டு சுசி உடல் எடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவாக அமையும். பொதுவாகவே சுசியில் கொழுப்புச் சத்தின் அளவு குறைந்தே இருக்கும். முறையான உணவு என ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலேயே இருக்கும்.

7-9 வரையிலான சுசி துண்டுகளில் 300-450 கலோரி இருப்பதாக கூறப்படுகிறது. மீன் சதையில் இருந்து ஃப்ரோடினும் ஒமேகா எனப்படும் அமில வகையும், காய்கறி வகைகளில் வைட்டமீனும், நோரியில் 'ஐயோடினும்', அரிசியில் நார் சத்தும் கிடைக்கிறது.

நோரி பல வகையான செயல்பாட்டுக்கு பிறகு 'மொரு மொரு'வென மெல்லும் வகையிலும், கேசரியை போல் லேசான பசை கொண்ட வகையிலும் செய்யப்படுகிறது.

சுசி வகை உணவை உண்பதற்கு முன் முக்கியமாக இருக்க வேண்டியது சுவைச்சாறும் (கிச்சாப்) 'வசாபியும்' (காரமானச் சாறு). கரிப்பு சுவைக்காக 'கிச்சாப்பை' தெளித்துக் கொள்வதற்காக பயன்படுத்துவார்கள். சில வேளைகளில் கார சாறுடன் (வசாபி) 'கிச்சாப்பை' கலந்துவிடுவார்கள். வசாபியின் காரம் சொல்லில் அடங்கா. காது மடல்களில் எரியூட்டிவிடும் தன்மையை கொண்டது. இது பிடிக்காதவர்கள் சுசி சாப்பிடும் போது அதிக அளவிலான நீரை குடிப்பார்கள்.

இதையடுத்து சுசியோடு சேர்த்துக் கொள்ளப்படுவது 'க்காரி'. 'க்காரி' ஊறுகாயை போல பதப்படுத்தி வைக்கப்பட்ட இஞ்சி. இவ்வகை இஞ்சி சுசி சாப்பிடும் போது ஊறுகாயைப் போல் மென்று கொள்ள பயன்படுத்தப்படும். சுசியின் சுவைத் தன்மை கெடாமல் இருக்க இப்படி செய்வதாக கூறுகிறார்கள்.
பச்சையாக இருக்கும் மீன் வகை 'சஷ்மி' என அழைக்கப்படுகிறது. சல்மோன் மீன் வகைகள் பச்சையாகவே உண்ணப்படுகிறது. லேசான புகைகாட்டப்பட்ட விலாங்கு மீன் வகை 'உனாங்கி' என அழைக்கப்படுகிறது. சுசியில் பயன்படுத்தப்படும் விலாங்கு மீனின் சதை மிக லேசானதாக இருக்கும்.

Calrose வகை அரிசியில் சுசி செய்யப்படும். 'மரின்' அல்லது அரிசியில் செய்யப்படும் 'வைன்' சுசி உணவிற்கு புளிப்புச் சுவையை சேர்க்க உதவும். இது போக 'மயோனிஸ்' போன்ற சாறையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சுசிக்கு பயன்படுத்தப்படும் வெள்ளரிக்காய் வகைகள் சாதாரண வெள்ளரியைவிட மாறுபட்டிருக்கும். அதில் ஈரத்தன்மை குறைந்தும் கடிப்பதற்கு 'மொரு மொரு'வெனவும் இருக்கும். சுசியில் நண்டு, இறால், 'ஹாட் டாக்' போன்ற வற்றையும் இணைத்து உண்ணலாம்.

சுசி ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும் நன்கு பதப்படுத்தியும் வேக வைத்தும் உணவுகளை உண்டு பழகியவர்களுக்கு அது பிடிக்காமலே போகும்.
(பி.கு: பல்கலைகழகத்தில் படித்த சமயம் ஜப்பானிய கலாச்சாரப் படைபிற்கு சேர்த்த தகவலில் ஒரு பகுதி)

Tuesday, October 28, 2008

ஆடு தமிழா ஆடு !

ஆடும் இனமே ஆடு
ஆடாவிட்டால் உனக்கேது பீடு

தேடும் தமிழர் வாழ்வில்
தெய்வத்தின் பேரால் ஆடு

மாடுபோல் வெறிநீர்(மது) மண்டி
மானம் கெட ஆடு

கூடுவிட்டு உயிர் போனவரின்
கூட்டத்திலும் ஆடு

ஆடுபோல் அடங்கிபோகும்
அருந்தமிழ் இனமே ஆடு

பீடு பெற்ற தமிழர் இனத்தில்
பெருமை கெடவே ஆடு

வாடும் தமிழர் இனத்தில்
வண்ணத் தமிழனே ஆடு

தேடிப் படத்தைப் பார்த்து
இலையும் குலையும் ஆட்டி ஆடு.